செய்திகள் :

'தேர்தல் நேரத்தில் போராடுவது பேஷன் ஆகிவிட்டது!' - அமைச்சர் மா.சு சர்ச்சைப் பேச்சு!

post image

சென்னை திருவான்மியூரில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுக்கும் நிகழ்வு நடந்திருந்தது. இதில் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'பணி நிரந்தரம் கேட்டு போராடுவது பேஷன் ஆகிவிட்டது' எனப் பேசியிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.

மா.சு
மா.சு

கடந்த சில நாட்களாக பல்நோக்கு மருத்துவமனைகளை சேர்ந்த பணியாளர்கள் பணி நிரந்தரம் உட்பட சில கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.

இதுசம்பந்தமான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'அவர்கள் 6,7 சங்கங்களாக இருக்கிறார்கள். நாங்கள் அழைத்துப் பேசியிருக்கிறோம். அவர்கள் 2013 இல் அதிமுக ஆட்சியில் ஒப்பந்த ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டார்கள். தேர்தல் நேரத்தில் பணி நிரந்தரம் கேட்டு போராடுவது இப்போது பேஷனாகிவிட்டது' என்றார்.

மா.சு
மா.சு

மேற்கொண்டு பேசியவர், 'தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராகவே இருக்கிறது. எடப்பாடியின் ஆட்சியில் ஒரு நாளைக்கு 100 சம்பவங்கள் நடக்கும். தரமணி சம்பவத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர். 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படுகிறது. லேப்டாப்கள் வரவர ஒவ்வொரு கல்லூரிகளாக கொடுத்துக் கொண்டிருக்கிறோம்' என்றார்.

சிபிஎம்-மின் ஃபேவரைட் `அரூர்' தொகுதியைப் பெற விசிக ஜரூர்! - திமுக-வின் கணக்கு என்ன?!

தங்களுக்கு சாதகமான தொகுதி என்ற அடிப்படையில் அரூரை குறிவைத்து சிபிஎம், தேர்தல் வேலைகளை தொடங்கியுள்ள நிலையில், அத்தொகுதியை பெற்றே தீர வேண்டும் என்ற இலக்கோடு விசிக-வும் காய் நகர்த்தி வருவது, திமுக கூட்டண... மேலும் பார்க்க

`விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு தவெக ஒரு சான்று' - விஜய் மீது எடப்பாடி பழனிசாமி தாக்கு

சேலத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் ப... மேலும் பார்க்க

ஸ்டாலின் சந்தித்த முதல் தேர்தலே, தோல்வி தான் தெரியுமா?! | Vote Vibes 05

தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன். இவருக்கு அரசியல் என்ட்ரி ஈசியாக கிடைத்திருக்கும் என்று தானே நினைக்கிறீர்கள... மேலும் பார்க்க

கோவையில் வானதி சீனிவாசன், அண்ணாமலை டிக் செய்த `தொகுதிகள்' - பின்னணி தகவல்!

சட்டமன்ற தேர்தலுக்காக தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சிக்கும் பிளஸ், மைனஸ் இருக்கும். அதிமுக – பாஜக கூட்டணியின் பிளஸ் கொங்கு மண்டலம். எம்ஜிஆர் காலத்தில் தொடங்கி எடப்பாடி... மேலும் பார்க்க

``4 ஆண்டுகளாக இதைத்தான் சொல்லி வருகிறார்; வாய்ப்பில்லை" - ஓபிஎஸ்-க்கு பதில் சொன்ன எடப்பாடி பழனிசாமி!

தேனியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``நாங்கள் நடத்திக் கொண்டிருப்பது அ.தி.மு.க அடிப்... மேலும் பார்க்க

OPS : `நான் ரெடி... டிடிவி தினகரனும், எடப்பாடியும் ரெடியா?'- தேனியில் பன்னீர்செல்வம் பேட்டி

தேர்தலுக்காக பல கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன. கொள்கைகளையும், காரசாரமான விவாதங்களையும், குற்றச்சாட்டுகளையும் கடந்து கூட்டணிகள் உருவாகி வருகின்றன. அதே நேரம், அ.தி.மு.க தொண்டர... மேலும் பார்க்க