செய்திகள் :

`எங்கள் வீட்டில் அப்படி இல்லை... அது ஈகோவால் வருவதாக நினைக்கிறேன்' - மனம் திறந்த அபிஷேக் பச்சன்

post image

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் அவரின் மனைவி நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து அடிக்கடி வதந்திகள் வந்து கொண்டே இருக்கிறது. இருவரும் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற வதந்தி அதிக அளவில் பரவியது. ஆனால் தற்போது எந்த பொது நிகழ்ச்சிக்குச் சென்றாலும் இருவரும் சேர்ந்தே செல்கின்றனர். இது குறித்து அபிஷேக் பச்சன் அளித்திருந்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது பேட்டியில், யார் அதிக வெற்றி பெற்றவர் என்பது குறித்தும், திருமண வாழ்வில் கடைப்பிடிக்கப்படும் பாலினப் பாத்திரங்களையும் பற்றியும் பேசினார்.

அவர் இது குறித்து கூறுகையில், "என் பெற்றோரின் திருமணம் நடந்தபோது, ​​என் தந்தையை விட என் தாயே மிகப் பெரிய நட்சத்திரமாகத் திகழ்ந்தார். எனவே, இது ஒன்றும் இயல்புக்கு மாறான விஷயம் அல்ல.

அது எப்போதும் ஒரு பார்ட்னர்ஷிப்பாக இருந்து வருகிறது. எனது திரைப்பயணத்தின் தொடக்கத்திலிருந்தே எனக்கு ஐஸ்வர்யாவைத் தெரியும். மேலும், நான் நடித்த இரண்டாவது திரைப்படமே அவருடன்தான். நான் இணைந்து நடித்த பல படங்களில் இடம்பெற்ற ஒரே நடிகை ஐஸ்வர்யா மட்டுமே.

சொல்லப் போனால், எனது இரண்டாவது படமான 'தாய் அக்‌ஷர் பிரேம் கே' (2000) படமே அவருடன் இணைந்து நடித்ததுதான். அப்போது நாங்கள் காதலில் இருக்கவில்லை. நாங்கள் வெறும் நண்பர்களாகவே இருந்தோம். நாங்கள் எப்போதும் நண்பர்களாகவே திகழ்ந்தோம்.

நாங்கள் காதலித்த காலம், நிச்சயதார்த்தம், திருமணம் என அனைத்திலும், பார்ட்னர்ஷிப்பாகவே இருந்தோம். `நான் சாப்பாடு கொண்டு வருகிறேன், நீ வீட்டைப் பார்த்துக்கொள்' என்பது போன்ற எந்த விவாதமும் இருந்ததில்லை.
அது மிகவும் இயல்பாக அமைகிறது.

என்னைப் பொறுத்தவரை, இது எனது கடுமையான அகங்காரத்திலிருந்து வருகிறது என்று நான் நினைக்கிறேன். ஒரு பந்தயத்தில் வெற்றி பெற, வேறு யாரும் பின்வாங்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. எனது தந்தை அமிதாப் பச்சன் என்னை அறிமுகப்படுத்தவோ அல்லது எனக்காக ஒரு திரைப்படத்தை உருவாக்கவோ இல்லை. ஆனால் பின்னர் எனது படங்களில் ஒன்றான 'பா' (2009) திரைப்படத்தைத் தயாரித்தார்" என்றார்.

அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராயுடனான தனது உறவைப் பற்றி மனம் திறந்து பேசியது மட்டுமல்லாமல், அவர்கள் இருவரும் தங்கள் மகள் ஆராத்யா பச்சனை எப்படி வளர்த்து வருகிறார்கள் என்பது பற்றியும் பேசினார். "பெற்றோர்களாக, தந்தைகள் மோசமான ஆசிரியர்கள்," என்று அவர் கூறினார், "தந்தைகள் மோசமான ஆசிரியர்கள் என்று நான் நினைக்கிறேன்" என்று குறிப்பிட்டார். ஐஸ்வர்யாவும், அபிஷேக் பச்சனும் 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

"நான் 'ராமாயணா' படத்தில் முதலில் நடிக்க மாட்டேன் என்றுதான் சொன்னேன், ஏனென்றால்..!"- ரன்பீர் கபூர்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ராமாயணா’. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் - ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இசையமைத்திருக்கின்றனர். படத்தின... மேலும் பார்க்க

சல்மான் கானின் அடுத்தப் படத்தை இயக்கும் 'வாரிசு' பட இயக்குநர் - மீண்டும் பாலிவுட்டில் நயன்தாரா!

சல்மான் கான் நடிப்பில் கடந்தாண்டு 'சிக்கந்தர்' திரைப்படம் வெளிவந்திருந்தது. அத்திரைப்படத்திற்குப் பிறகு அவர் நடித்து வரும் 'மாற்றுபூமி' படத்தின் வேலைகள் நடைபெற்று வருகின்றன. தொடக்கத்தில் இம்மாத ரிலீஸா... மேலும் பார்க்க

SVC63: 'வாரிசு' பட இயக்குநருடன் இணையும் சல்மான் கான் - வெளியான அப்டேட்!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தற்போது கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவும், இந்தியாவும் மோதிக்கொண்டது தொடர்பாக மாத்ருபூமி என்ற பெயரில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பெயர் ஆரம்பத்தில், `பேட்ட... மேலும் பார்க்க

Abhishek Bachchan: "அதைப் புறக்கணிப்பவன் முட்டாள் மட்டுமே!" - பாடமெடுக்கும் அபிஷேக் பச்சன்

அபிஷேக் பச்சன் தற்போது ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷ் தேஷ்முக் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து ஷாருக்கான் நடிக்கும் 'கிங்' படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்... மேலும் பார்க்க

`ஆப்ரேஷன் சிந்தூரை மையப்படுத்தியது'- அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்ட காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர்

சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி. 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்', 'தி வாசின் வார்' உள்ளிட்ட சில படங்களை இவர் இயக்கியிருக்கிறார். இப்போது அவருடைய அடுத்த படத்தை இயக்குவதற்கும் தயாராகிவி... மேலும் பார்க்க

Mrunal Thakur: "அதன் பிறகுதான் அனைவரும் என்னை ஏற்றுக்கொண்டார்கள்" - மிருணால் தாகூர்

மிருணால் தாகூர் நடித்திருக்கும் 'டகாய்ட் (Dacoit)' திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் அவரை ஏற்றுக்கொண்ட விதம் பற்றி இப்படத்திற்கான புரோமோஷன் நேர்காணல் ஒன்றில் பேசியிருக்க... மேலும் பார்க்க