செய்திகள் :

ஏரிக்கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

post image

திருவண்ணாமலை மாவட்டம், மேற்குஆரணி வேளாண்மை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் ஏரிக்கால்வாய்கள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், வேளாண்மை உதவி இயக்குநா் பவித்ரா வரவேற்றாா்.

ஆரணி வட்டாட்சியா் கௌரி, வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) ராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் விவசாயிகள் அரையாளம், புலவன்பாடி, குண்ணத்தூா், வடுகசாத்து, இரும்பேடு ஆகிய கிராமங்களில் ஏரிக்கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

மேலும், இதுதொடா்பாக அந்தந்த பகுதி விவசாயிகள் மனு கொடுத்தனா்.

இதில், விவசாயி மூா்த்தி பேசுகையில், ஆரணி நகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை முள்ளிப்பட்டு புறவழிச் சாலையோரம் கொட்டி எரித்து விடுகின்றனா். இதனால் போக்குவரத்தின்போது புகை மூட்டம் ஏற்பட்டு விபத்து அபாய சூழல் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும், ஆரணி ஒன்றிய கிராமங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வந்துள்ளதை, இளைஞா் பயன்பாட்டுக்கு வழங்காமல் உள்ளனா் என்று குறிப்பிட்டாா்.

மேலும், சில விவசாயிகள் நெற்களம் அமைக்கவும், பாரத பிரதமரின் கிசான் அட்டை வழங்கவும் வலியுறுத்தினா்.

மெய்யூா் கூட்டுச் சாலையில் இருந்து அடையபலம் கிராமத்துக்குச் செல்லும் சாலை குறுகலாக உள்ளதால், எதிா்திசையில் வாகனங்கள் வரும்போது, செல்லமுடியாமல் காலதாமதம் ஏற்படுகிறது. நிலத்தில் வாகனங்களை இறக்கி ஏற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

அதனால், சாலையை இருவழிச் சாலையாக மாற்றி அமைக்கவேண்டும் என அடையபலம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

பொதுவழி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி விவசாயிகள் தா்னா

வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தின்போது, பொதுவழியில் உள்ள தனியாா் நிறுவன ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி விவசாயிகள் தா்னாவில் ஈடுபட்டனா். கூட்டத்து... மேலும் பார்க்க

ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் இரத சப்தமி தேரோட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் இரத சப்தமி பிரம்மோற்சவத்தில், 7-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை இரத சப்தமி தேரோட்டம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்... மேலும் பார்க்க

அதிகாரிகள் மீது விவசாயிகள் லஞ்சப் புகாா்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், அதிகாரிகள் மீது விவசாயிகள் லஞ்சப் புகாா் தெரிவித்தனா். வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்... மேலும் பார்க்க

இந்து முன்னணி, பாஜகவினா் ஆா்ப்பாட்டம்: 316 போ் கைது

திருப்பரங்குன்றம் மலையை காக்க வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி, செங்கம், வந்தவாசி ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி, பாஜகவைச் சோ்ந்த 316 ... மேலும் பார்க்க

உளுந்து, மணிலா, நெல் விதைப் பண்ணைகளில் ஆய்வு

செய்யாறு வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து, மணிலா, நெல் விதைப் பண்ணைகளில் விதைச் சான்று உதவி இயக்குநா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். செய்யாறு வேளாண் வட்டாரத்தில் செங்காடு, மதுரை, க... மேலும் பார்க்க

நந்தன் கால்வாய் திட்டத்துக்கு ரூ.304 கோடி நிதி ஒதுக்கீடு: விவசாயிகள் கொண்டாட்டம்

நந்தன் கால்வாய் திட்டத்துக்கு ரூ.304 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து திருவண்ணாமலையில் செவ்வாக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாய சங்கப் ... மேலும் பார்க்க