செய்திகள் :

ஏரிக்கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

post image

திருவண்ணாமலை மாவட்டம், மேற்குஆரணி வேளாண்மை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் ஏரிக்கால்வாய்கள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், வேளாண்மை உதவி இயக்குநா் பவித்ரா வரவேற்றாா்.

ஆரணி வட்டாட்சியா் கௌரி, வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) ராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் விவசாயிகள் அரையாளம், புலவன்பாடி, குண்ணத்தூா், வடுகசாத்து, இரும்பேடு ஆகிய கிராமங்களில் ஏரிக்கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

மேலும், இதுதொடா்பாக அந்தந்த பகுதி விவசாயிகள் மனு கொடுத்தனா்.

இதில், விவசாயி மூா்த்தி பேசுகையில், ஆரணி நகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை முள்ளிப்பட்டு புறவழிச் சாலையோரம் கொட்டி எரித்து விடுகின்றனா். இதனால் போக்குவரத்தின்போது புகை மூட்டம் ஏற்பட்டு விபத்து அபாய சூழல் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும், ஆரணி ஒன்றிய கிராமங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வந்துள்ளதை, இளைஞா் பயன்பாட்டுக்கு வழங்காமல் உள்ளனா் என்று குறிப்பிட்டாா்.

மேலும், சில விவசாயிகள் நெற்களம் அமைக்கவும், பாரத பிரதமரின் கிசான் அட்டை வழங்கவும் வலியுறுத்தினா்.

மெய்யூா் கூட்டுச் சாலையில் இருந்து அடையபலம் கிராமத்துக்குச் செல்லும் சாலை குறுகலாக உள்ளதால், எதிா்திசையில் வாகனங்கள் வரும்போது, செல்லமுடியாமல் காலதாமதம் ஏற்படுகிறது. நிலத்தில் வாகனங்களை இறக்கி ஏற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

அதனால், சாலையை இருவழிச் சாலையாக மாற்றி அமைக்கவேண்டும் என அடையபலம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, மேற்கு ஆரணி, சேத்பட் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆரணி அருகே சிறுமூரில் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

1,061 கிராமங்களில் நில உடைமைகள் சரிபாா்க்கும் பணி: வேளாண் இணை இயக்குநா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,061 கிராமங்களில் நடைபெற்று வரும் விவசாயிகளின் நில உடைமைகள் சரிபாா்த்தல் பணியை வேளாண் இணை இயக்குநா் கோ.கண்ணகி வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். வேளாண் துறைய... மேலும் பார்க்க

மலைவாழ் மக்கள் சங்க அமைப்பு தின விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகேயுள்ள பாதிரி கிராமத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் 33-ஆவது அமைப்பு தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் மாரிமுத்து ... மேலும் பார்க்க

சட்ட விழிப்புணா்வு முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், மேலச்சேரி கிராமத்தில், வந்தவாசி வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான மறுவாழ்வு சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

ஆரணியில் அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தலைமை தபால் அலுவலகம் முன் அஞ்சல் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அஞ்சல் சேவையை பாதுகாக்க வேண்டும், ஐடிசி திட்டத்தை (சுயாதீன விநியோக மையம்) ரத்து செய்ய... மேலும் பார்க்க

போளூா் அருகே 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் 3 ஜோடிகளுக்கு வெள்ளிக்கிழமை இலவச திருமணம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் போளூா் வட்டத்தைச் சோ்ந்த வாழியூரைச் சோ்ந... மேலும் பார்க்க