செய்திகள் :

ஐடி வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டும் பெண்; ₹60,000 மாத வருமானம்! ஏன் இந்த முடிவு?

post image

காலை 9 மணி லாகின், இரவு 9 மணி லாக் அவுட், நடுநடுவே காதைக் கிழிக்கும் மீட்டிங்குகள், நள்ளிரவில் வரும் 'ப்ரொடக்‌ஷன் இஷ்யூ' அழைப்புகள்... பல இளைஞர்களின் கனவாக இருக்கும் ஐடி வேலை, சிலருக்கு மன அழுத்தத்தின் மறுபெயராக மாறிவிடுகிறது.

அப்படிப்பட்ட கார்ப்பரேட் உலகிற்கு ஒரு பெரிய 'குட்பை' சொல்லிவிட்டு, மூன்று சக்கர வாகனத்தின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து தன் வாழ்க்கையின் ஸ்டியரிங்கை தானே பிடித்துக்கொண்டிருக்கிறார் ஒரு பெண். மாதம் ₹60,000 வருமானத்துடன், முன்பை விட அதிக மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் கூறுவது இணையத்தில் பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.

ஆட்டோ ஓட்டும் பெண்
ஆட்டோ ஓட்டும் பெண்

ஐடி துறையில் கைநிறைய சம்பளத்துடன் பணியாற்றி வந்த இந்தப் பெண்ணுக்கு, வேலை அழுத்தம் என்பது தினசரி போராட்டமாக இருந்துள்ளது. ஓய்வற்ற வேலை நேரம், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் வேலைக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த முடியாத தவிப்பு என அனைத்தும் சேர்ந்து அவரை ஒரு கட்டத்தில் சோர்வடையச் செய்துள்ளது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற தேடலில்தான், யாரும் எதிர்பாராத ஒரு முடிவை அவர் எடுத்திருக்கிறார். ஆம், தனது ஐடி வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ஆட்டோ ஓட்டுநராக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

இந்த முடிவு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், அவருக்கு இது ஒரு சிறந்த மாற்றத்தைக் கொடுத்துள்ளது. இப்போது தனது நேரத்தை அவரே தீர்மானிக்கிறார். எப்போது வேலைக்குச் செல்ல வேண்டும், எப்போது ஓய்வெடுக்க வேண்டும் என்பதை அவரே முடிவு செய்கிறார். இந்த சுதந்திரம் அவருக்கு மனநிம்மதியைக் கொடுத்துள்ளது என்கிறார்.

இதன் மூலம் மாதம் சுமார் ₹60,000 வரை சம்பாதிப்பதாகவும், முன்பை விட இப்போது மிகவும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் உணர்வதாகவும் அவர் கூறுகிறார்.

இவரது கதை இணையத்தில் ஒரு ரீல்ஸ் வடிவில் பரவ, பலரும் அவரது தைரியத்தைப் பாராட்டி வருகின்றனர்.

"சபாஷ்! சரியான முடிவு" என்று ஒரு பக்கம் பாராட்டுகள் குவிந்தாலும், மறுபக்கம் ஐடி ஊழியர்கள் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டி வருகின்றனர்.

ஒரு பயனர், "நான் 18 வருஷமா ஐடி-ல இருக்கேன். மெயில்-ல முடிக்க வேண்டிய மீட்டிங், ரெண்டு நிமிஷ 'quick call'னு ஆரம்பிச்சு ரெண்டு மணி நேரம் போற கொடுமை, நைட்டுல வர்ற ப்ரொடக்‌ஷன் இஷ்யூனு எல்லாத்தையும் தாங்கிட்டு இருக்கேன். என் பொறுமையை நினைச்சா எனக்கே ஆச்சரியமா இருக்கு" என்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆட்டோ ஓட்டும் பெண்
ஆட்டோ ஓட்டும் பெண்

மற்றொருவரோ, "அவர் சும்மா வேலையை விட்டிருக்க மாட்டார். நிச்சயம் 50 லட்சத்தில் இருந்து 2 கோடி ரூபாய் வரை பேங்க் பேலன்ஸ் சேர்த்திருப்பார்" என்று சொல்லி இருக்கிறார்.

இன்னொருவர், "எல்லாருக்கும் கடைசியில தேவை நிம்மதிதானே. அவங்க ஒரு எளிமையான, மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தேடிப் போயிருக்காங்க. அவங்க நல்லா இருக்கணும்" என்று மனதார வாழ்த்தியுள்ளார்.

இதுபோலவே, உத்தரப் பிரதேசத்தில் ஒருவர் தனது வேலையை விட்டுவிட்டு ஆட்டோ ஓட்டத் தொடங்கி, 15 ஆண்டுகளில் 5 லாரிகளுக்கு உரிமையாளராகி, சுமார் 5 கோடி ரூபாய் சம்பாதித்த பிறகும், இன்னும் ஆட்டோ ஓட்டி வருவதை ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளரே ஆச்சரியத்துடன் பகிர்ந்ததை மற்றொரு பயனர் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.

‘எனக்கு என்ன பிடிக்கும்னு யோசித்ததே இல்லை!’ - தாய்லாந்தில் தன்னைத் தேடிய இந்திய பெண்ணின் கதை

ஒரு பெண்ணின் உலகம் எதுவரை? வீட்டின் நான்கு சுவர்களுக்குள் அடங்கிவிடும் பொறுப்புகள்தானா அல்லது கண்டங்கள் கடந்து விரியும் எல்லையற்ற வானமா? இந்தக் கேள்விக்குத் தன் ஒற்றை நாள் பயணத்தின் மூலம் பதில் சொல்லி... மேலும் பார்க்க

கோர்ட்டில் விவாகரத்து ஆவணங்களைக் கிழித்துவிட்டு கட்டிப்பிடித்த தம்பதி; வைரல் படத்தின் பின்னணி என்ன?

டெல்லியைச் சேர்ந்த ஒரு தம்பதி பல ஆண்டுகளாக விவாகரத்து கோரி கோர்ட்டிற்கு அலைந்து கொண்டிருந்தனர். ஷிகா என்ற அப்பெண் செளரப் என்பவரை 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில மாதங்களில் க... மேலும் பார்க்க

பீகார்: 17 வயது சிறுவனை திருமணம் செய்த 22 வயது பெண்; பஞ்சாயத்திற்கு வந்த விவகாரம்; என்ன நடந்தது?

பீகார் மாநிலம் மதுபுரா மாவட்டத்தில் இருக்கும் கிராமத்தில் வசிப்பவர் பூஜாகுமாரி(22). இவருக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் பித்து குமார்(17) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் வீட்டிற்க... மேலும் பார்க்க

செயற்கை கருத்தரிப்பு மைய குளறுபடியால் மாறிய கரு? "பிறந்தது எங்கள் குழந்தைகள் அல்ல" - தம்பதி புகார்

டெல்லி அருகில் உள்ள குருகிராமைச் சேர்ந்த தம்பதியான ராகுல் மற்றும் மீனு தம்பதி செயற்கை முறையில் (Vitro Fertilisation) குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர். இதற்காக டெல்லியில் உள்ள டாக்டர் கைலாஷ் கருத்... மேலும் பார்க்க

விஜய் : எம்.ஜி.ஆர் பாணியில் `வாள்' காணிக்கை - கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் தரிசனம்!

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் முடித்த கையோடு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று லேண்ட் ஆனது மங்களூரில். அங்கே புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். கூடவே, மூகாம்பி... மேலும் பார்க்க

`ஆண் சடலங்களின் அந்தரங்க உறுப்பை ஒப்பிட்டு பேசுவோம்' - காமெடி ஷோவில் பெண் டாக்டர் சர்ச்சை கருத்து

மும்பையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கே.இ.எம்.மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் படித்தவர் டாக்டர் சாஜல் பவார். இவர் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை தொடர்பான பயிற்சியின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை... மேலும் பார்க்க