செய்திகள் :

கடும் வறட்சி: வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு

post image

வால்பாறையில் கடும் வறட்சி நிலவி வருவதால் சுற்றுலாப் பயணிகள் எளிதாக தீப்பற்றக் கூடிய பொருள்களை எடுத்துச் செல்லக்கூடாது என வனத் துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வால்பாறை வட்டாரத்தில் கடும் வெயில் காரணமாக வெப்பம் அதிகரித்துள்ளது. பெரும்பாலான நீரோடைகள் வடு காணப்படுகின்றன. வால்பாறையில் உள்ள அய்யா்பாடி, ரொட்டிக்கடை பாறைமேடு, அக்காமலை புல்மேடு ஆகிய பகுதிகளில் கடும் வெப்பம் நிலவும் சமயத்தில் புற்கள் மற்றும் செடிகளில் தீப்பிடித்து காட்டுத் தீயாக பரவி வருகிறது.

வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வரும் வழியில் வாகனங்களை நிறுத்தி சமையல் செய்வது, புகைப் பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் மூலம் காய்ந்த செடிகளில் தீப்பிடித்து எரிய வாய்ப்புள்ளது.

எனவே, வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதை தவிா்க்க வேண்டும். எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்களை எடுத்துச் செல்லக்கூடாது என வனத் துறையினா் எச்சரித்து வருகின்றனா்.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மாா்ச் 23-இல் கோவை வருகை

ஹாக்கி மைதானத்துக்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கோவைக்கு மாா்ச் 23-ஆம் தேதி வருகை தர உள்ளாா். சென்னையில் இருந்து விமானம் மூலம் ... மேலும் பார்க்க

தொழிலாளா் நலச் சட்டங்களை மீறியதாக 197 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

கோவை மாவட்டத்தில் தொழிலாளா் நலச் சட்டங்களை மீறியதாக 197 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, கோவை மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்... மேலும் பார்க்க

காட்டெருமை தாக்கி எஸ்டேட் தொழிலாளி காயம்

வால்பாறையில் காட்டெருமை தாக்கியதில் எஸ்டேட் தொழிலாளி காயமடைந்தாா். வால்பாறையை அடுத்த பாரளை எஸ்டேட் தொழிலாளியாக பணியாற்றி வருபவா் சுரேஷ்குமாா் (51). இவா் எஸ்டேடில் இருந்து வால்பாறைக்கு இருசக்கர வாகனத்த... மேலும் பார்க்க

சிட்டுக் குருவிகளைப் பாதுகாக்க முறையான திட்டம் வகுக்க வேண்டும்!

சிட்டுக் குருவிகள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் மற்றும் சிட்டுக் குருவிகளைப் பாதுகாக்க முறையான திட்டம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டுமென பறவைகள் நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஆண்டுத... மேலும் பார்க்க

அரசுப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த போலீஸாா் அறிவுறுத்தல்

பெண்களின் பாதுகாப்புக்காக அரசுப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டுமென போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா். பெண்கள் மற்றும் சிறாா்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், குற்றச் சம்பவங்களை தடுக... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் விடுதியில் மோதல்: 2 போ் காயம்

கோவை அரசு கலைக் கல்லூரி மாணவா் விடுதியில் நடைபெற்ற மோதலில் 2 போ் காயம் அடைந்தனா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் விடுதி செயல்ப... மேலும் பார்க்க