செய்திகள் :

கண்டுகொள்ளாத துரைமுருகன்; கவனம்பெற்ற தவெக சுதாகர் - காட்பாடி எம்எல்ஏ அலுவலகத்துக்கு விடிவுக் காலம்!

post image

டந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், காட்பாடி தொகுதியில் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டு படுதோல்வியடைந்தார்.

த.வெ.க சார்பாக போட்டியிட்ட டாக்டர் எம்.சுதாகர் வெற்றிபெற்று, எம்.எல்.ஏ-வாகவும் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், காட்பாடி காந்தி நகரில் துரைமுருகன் வீட்டுப் பின்பக்கத் தெருவில் அமைந்திருக்கும் எம்.எல்.ஏ அலுவலகத்தை நேற்றைய தினம் கொண்டாட்டத்துடன் திறந்து மக்கள் சந்திப்பையும் நடத்தியிருக்கிறார் டாக்டர் சுதாகர்.

தி.மு.க ஆட்சியில், காட்பாடி எம்.எல்.ஏ அலுவலகம்
தி.மு.க ஆட்சியில், காட்பாடி எம்.எல்.ஏ அலுவலகம்

தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் இத்தனை ஆண்டுகாலம் அதிகாரத்தில் தொடர்ந்தபோதும், எம்.எல்.ஏ அலுவலகத்தைத் திறந்து தொகுதி மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றதில்லை; குறைகளையும் கேட்டதில்லை.

புதர்மண்டிக் கிடந்தது அந்த அலுவலகம். 2011-ல் இருந்து தொடர்ந்து 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதுதான் எம்.எல்.ஏ அலுவலகத்தைத் திறக்காமலிருந்தார் என்றாலும், கடந்த 5 ஆண்டுகள் ஆளும்கட்சியாக இருந்தபோதும்கூட எம்.எல்.ஏ அலுவலகத்தை ஒருநாளும் திறக்கவில்லை.

துரைமுருகனை பொது நிகழ்ச்சிகளில் மட்டுமே காட்பாடி மக்கள் பார்த்து வந்தனர். அப்போதும்கூட, அவரிடம் மனு அளிக்க முடியாது. யாரேனும் மனுவுடன் நின்றாலும் அவர்களைக் கண்டுகொள்ளாமல் சென்றுவிடுவார்.

சில நேரங்களில், துரைமுருகனின் பேச்சும், உடல்மொழியும் மக்களை அலட்சிப்படுத்தும் வகையில் இருக்கும். இதுபோன்ற காரணங்களால், தொகுதி மக்கள் துரைமுருகனைச் சந்திக்க விரும்ப மாட்டார்கள்.

எம்.எல்.ஏ அலுவலகம் இருட்டடிப்பு செய்யப்பட்டதால், அந்த அலுவலகம் எங்கு இருக்கிறது? என்பதுகூடத் தொகுதி மக்கள் பெரும்பாலானோருக்குத் தெரியாமலிருந்தது.

காட்பாடி எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்துவைத்த அமைச்சர் காந்திராஜ்
காட்பாடி எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்துவைத்த அமைச்சர் காந்திராஜ்

இந்த நிலையில்தான் தேர்தல் பிரசாரத்தின்போது எம்.எல்.ஏ அலுவலக விவகாரத்தைக் கையிலெடுத்தார் டாக்டர் சுதாகர். செடி, கொடிகள் படர்ந்து புதர்மண்டிய காட்சியை புகைப்படம் எடுத்து பொதுமக்களிடம் காட்டினார்.

`இந்த அவலம் மேலும் நீடிக்கக் கூடாது. முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என முழங்கினார் டாக்டர் சுதாகர். மக்களிடம் அவருக்கான வரவேற்பு அதிகமாகக் காணப்பட்டது. தேர்தலிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகனைத் தோற்கடித்து வெற்றிபெற்றார் டாக்டர் சுதாகர்.

உறுதியளித்தபடி, எம்.எல்.ஏ அலுவலகத்தையும் புதுப்பித்து, கூட்டுறவுத்துறை அமைச்சர் அரக்கோணம் காந்திராஜை அழைத்து திறந்திருக்கிறார். முதன்முறையாக, காட்பாடி தொகுதி மக்களும் மிக ஆர்வமாக எம்.எல்.ஏ அலுவலகத்தை வந்து பார்த்துச் செல்கின்றனர்.

எம்.எல்.ஏ சுதாகரும் அலுவலகத்தில் அமர்ந்து மனுக்களைப் பெற்றுவருகிறார்.

அதிமுக-வில் மிதுனுக்கு முக்கிய பொறுப்பு? நிர்வாகிகள் வலியுறுத்தல்; கவனம் பெற்ற கே.பி முனுசாமி பேச்சு

தேர்தல் தோல்விக்கு பின்னர், கட்சியின் நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்திக்க அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இன்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவல... மேலும் பார்க்க

'ஆபரேஷன் இரட்டை இலை' - மதுராந்தகத்தில் ர.ர-க்களின் பிரமாண்ட இணைப்பு விழா; தவெக போடும் ஸ்கெட்ச்!

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் இன்று பனையூரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்திருந்தனர். கடந்த வாரம்தான் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்... மேலும் பார்க்க

ஈரான்: "24 மணிநேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்" - பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

ஈரான் போர் முடிவுக்கு வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு, இரண்டு நாள்களுக்கு முன், ஈரானும், அமெரிக்காவும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. தாக்குதலுக்குப் பிறகு, அ... மேலும் பார்க்க

'விஜயதாரணி, பச்சைமால், பாலகங்கா...' - தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகளின் இன்றைய லிஸ்ட்!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சியினர் பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர்கள் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களான இசக்கி சுப்பையா, ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டம்: முன்னாள் முதல்வர்களின் படங்களை வைக்க போட்டிப் போட்ட திமுக - அதிமுக!

கிருஷ்ணகிரி நகராட்சிக் கூட்ட அரங்கத்தில் முன்னாள் முதல்வர்களின் படங்களை வைப்பது தொடர்பாக திமுக-அதிமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் நகர்மன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதேநேரம், இந்த... மேலும் பார்க்க

"வழிமுறை தெரியாது..": நழுவும் தலைமை மருத்துவர் : மரங்களை வெட்டிய தேவகோட்டை அரசு மருத்துவமனை

" பிள்ளைகளைப்போல வளர்த்தோம்..!"சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பி.எஸ்.எஸ். சாத்தப்ப செட்டியார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பல ஆண்டுகளாக நிழல் தந்து வந்த மரங்கள் திடீரென வெட்டிச் சாய்க்கப்பட்ட சம்பவம், தே... மேலும் பார்க்க