செய்திகள் :

கம்யூனிஸ்டுகளின் 'இரட்டை இலக்கு' கனவும் ஸ்டாலினின் 'கறார்' முடிவும்! - எப்போ முடியும் பங்கீடு?

post image

தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

கதர் சட்டைகளுடன் இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்த நிலையில், தற்போது இடதுசாரி கட்சிகளுடன் திமுக-வுக்கு சிறு சிறு அதிருப்திகள் வர தொடங்கியுள்ளது.

பெ.சண்முகம்
பெ.சண்முகம்

இடதுசாரி கட்சிகளுடன் உரசல்

நேற்று அண்ணா அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நடைபெற்ற இரண்டாம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை, எதிர்பார்த்தபடி சுமுகமாக முடிவடையவில்லை.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், தனது அதிருப்தியை வெளிப்படையாகவே பதிவு செய்தார்.

விரக்தி!

"திமுக தரப்பில் முன்வைக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை எங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகளை நாங்கள் கோரியுள்ளோம்.

இது குறித்து தலைமையுடன் ஆலோசித்துவிட்டு மீண்டும் அழைப்பதாக திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது" என அவர் விரக்தியுடன் தெரிவித்தார்.

ஸ்டாலின் | அண்ணா அறிவாலயம் | திமுக
ஸ்டாலின் | அண்ணா அறிவாலயம் | திமுக

இரண்டு சிட்டிங்கில் முடியாத பேச்சுவார்த்தை

பொதுவாக, இரண்டு கட்ட பேச்சுவார்த்தைக்குள்ளேயே கூட்டணி கட்சிகளுடன் எண்ணிக்கையை இறுதி செய்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதே திமுகவின் திட்டம்.

காங்கிரஸூடன் அத்தனை புகைச்சல் நிலவிய போதும் இரண்டே சிட்டிங்கில் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வைத்துவிட்டது திமுக.

ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் குழுவினர் மூன்று கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகும் உடன்படவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாவது சிட்டிங்கை முடித்துவிட்டு வெளிப்படையாக அதிருப்தியை காட்டிவிட்டது.

ஸ்டாலின் கறார்!

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் வழங்கப்பட்டன.

இந்த முறை இருகட்சிகளும் இரட்டை இலக்கத்தில் எதிர்பார்த்தன. ஆனால் தற்போதைய சூழலில் தலா 5 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க முடியாது என்பதில் முதல்வர் ஸ்டாலின் கறாராக இருப்பதாகத் தெரிகிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

உரிய இடங்களை ஒதுக்க ஏன் தயங்குகிறார்?

2016 தேர்தலில் திமுக தோல்வியடைந்தபோது, திமுக தோற்றதை விட, ஒரு கம்யூனிஸ்ட் கூட சட்டமன்றத்தில் இல்லையே என்று மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி வருத்தப்பட்டதாக ஒரு செய்தி உண்டு. அந்த அளவிற்கு இடதுசாரிகள் மீது அவர் மதிப்புக் கொண்டிருந்தார்.

தற்போது முதல்வர் ஸ்டாலினும், இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல, 'கொள்கை கூட்டணி' என்று மேடைதோறும் முழங்குகிறார்.

அப்படியிருக்கையில் தேமுதிக போன்ற இறுதிக்கட்டத்தில் இணைந்த கட்சிகளுக்கு ராஜ்ய சபா வரை கொடுத்துவிட்டு, கொள்கை பலம் கொண்ட இடதுசாரிகளுக்கு உரிய இடங்களை ஒதுக்க ஏன் தயங்குகிறார் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாமிடம் பேசினோம், "பொதுவாக தொகுதி பங்கிட்டுக்கு கட்சிகள் போகும் போது எண்ணிக்கை பிரச்சனை கண்டிப்பாக வரும். காரணம் கட்சிகளின் அரசியல் ஆசைகள் அப்படி.

ஆனால் ஒட்டுமொத்த கூட்டணி என்கிற கணக்கில் தான் எண்ணிக்கை முடிவாகும். காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்பட்ட தொகுதிகள் 3 அதிகம் என்பதால் திமுக கூட்டணி கட்சிகள் கூடுதலாக எதிர்பார்க்கின்றன.

தராசு ஷ்யாம் - மூத்த பத்திரிகையாளர்
தராசு ஷ்யாம் - மூத்த பத்திரிகையாளர்

அமில சோதனை

அதற்கான வாய்ப்பு இல்லை. காரணம் உதயசூரியன் சின்னம் 170க்கும் மேற்பட்ட இடங்களில் நின்றே ஆக வேண்டும். எனவே தேர்தல் அறிவிப்பாணைக்கு முன்பு எண்ணிக்கை முடிவாகிவிடும். அதற்குப் பிறகுதான் உண்மையான அமில சோதனை இருக்கிறது.

என்னென்ன தொகுதிகள் என்று அடையாளம் காண்பது. எது எப்படி இருந்தாலும் திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியே போக வாய்ப்பு இல்லை. ஏனென்றால் அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா உள்ளது. விஜய் கூட்டணியில் வெற்றி உறுதி இல்லை" என்றார்.

விஜய்க்கு எதிராக யாரை நிறுத்துவது? - தி.மு.க முகாமில் நடக்கும் டிஸ்கஷன்!

த.வெ.க தலைவர் விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் எங்கு போட்டியிடுவார் என்கிற பரபரப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பலமாக எழுந்துள்ளது. இந்நிலையில் த.வெ.க தரப்பில் தமிழகம் முழுவதும் நடத்திய சர்வேயில் த.வெ.கவ... மேலும் பார்க்க

LPG விலை உயர்வு: ``உண்மையிலேயே தட்டுப்பாடு உள்ளதா அல்லது..." - மம்தா பானர்ஜி எழுப்பும் கேள்வி!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவில் சமையல் எரிவாயு (LPG) விலை உயர்ந்து வருகிறது. சிலப் பகுதிகளில் பற்றாக்குறையும் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், மேற்கு வங்க ... மேலும் பார்க்க

இந்தியா வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பல் மீது தாக்குதல்: ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் போரால் பதற்றம்!

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து போர் தொடுத்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நீடிக்கிறது. 10 நாள்களைக் கடந்து போர் தொடர்ந்துவரும் நிலையில், உலகின் பல்வேறு பகுதிகளில் எரிவாய... மேலும் பார்க்க

விமர்சிக்கப்பட்ட‌ ராஜ்ய சபா வருகை விவகாரம்: `சம்பளம் வாங்க மட்டுமே சபைக்கு போகல!' - அன்புமணி தரப்பு

தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் டாக்டர் அன்புமணி. அதிமுக சார்பில் இரண்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கலாம் என இருந்த நிலையில், ஒரு இடத்தை அன்புமண... மேலும் பார்க்க

`தடைபோடும் எ.வ.வேலு; சிதைக்கப்படும் இஸ்லாமியர் பிரதிநிதித்துவம்’ - ஆட்டம் காணும் ஆம்பூர் தொகுதி

திருப்பத்தூர் மாவட்டத்தில், பிரியாணிக்குப் பெயர்போன ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியில் பட்டியலின மக்களும், இஸ்லாமியர்களுமே வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றனர். ஆனால், `இந்த இரண்டு சமூக... மேலும் பார்க்க

'ஒரே ஒரு தொகுதியிலாவது தனிச்சின்னம்...' - கூடிப் பேசி முடிவெடுத்த வைகோ? - ஏற்குமா அறிவாலயம்?

திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திடீரென ஒரு அவசர உயர்நிலைக் குழுவை கூட்டி கூட்டணி விவகாரங்கள் குறித்து நீண்ட நேரம் ஆலோசனை செய்திர... மேலும் பார்க்க