'ராஜினாமா செய்கிறேன்' - அறிவித்த சித்தராமையா; இனி கர்நாடகா முதல்வர் 'டி.கே.சிவக்...
'கருப்பு' படம் விஜய் சாருக்காகத்தான் முதலில் எழுதப்பட்டது, ஆனால்.!'- ஆர்.ஜே பாலாஜி
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் 'கருப்பு'.
ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
மே 15 ஆம் தேதி தான் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்நிலையில் 'The Hollywood Reporter India' ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் ஆர்.ஜே பாலாஜி முதலில் 'கருப்பு' படத்தை நடிகரும், முதல்வருமான விஜய்காக எழுதியதாகத் தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், " உண்மையில் 'கருப்பு' படம் விஜய் சாருக்காகவே எழுதப்பட்டது.
அரசியலுக்கு வருவதற்கு முன்பு இது அவருடைய கடைசிப் படமாக இருந்திருக்க வேண்டியது.
ஆனால், அவருடைய அரசியல் ஈடுபாடுகள் மற்றும் கடைசிப் படம் போன்ற சில காரணங்களால் அவர் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

நான் கதையை சொன்னபோது 'நான் ஒரு வாரத்தில் உங்களுக்கு போன் செய்து உறுதிப்படுத்தட்டுமா?' என்று கேட்டார். பின்னர், அவர் என்னை அழைத்து அதற்கான காரணங்களை விளக்கினார்.
அந்த காரணங்கள் முற்றிலும் நியாயமானவை என்று நான் நினைத்தேன், அதனால் அவரிடம், 'உங்கள் முடிவை நான் முழுமையாக மதிக்கிறேன். மிக்க நன்றி' என்று கூறினேன்." என்றார்.



















