செய்திகள் :

கறி சமைக்க `ஓசி'-யில் வாத்து கேட்ட போதை கும்பல் - தர மறுத்ததால் 100 வாத்துகளை வெட்டி வீசிய கொடூரம்!

post image

நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்கு உள்பட்ட தருவை என்ற கிராமப்பகுதியில், மேல முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவர் வாத்துக்களை வளர்த்து தொழில் செய்து வருகிறார். அவரிடம் உள்ள வாத்துகள் இறைச்சிக்காக கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அத்துடன் வாத்து முட்டைகளையும் கேரளாவில் மிகுந்த விருப்பத்துடன் வாங்கிக் கொள்கின்றனர்.

அவரிடம் உள்ள வாத்துகளை, கோபாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த முப்பிடாதி என்பவர் தருவை பகுதியில் உள்ள வயலில் பராமரித்து வருகிறார். பகல் நேரத்தில் மேய்ச்சலுக்கு வாத்துகளை அழைத்துச் செல்லும் அவர், இரவில் வயலில் போடப்பட்டுள்ள பட்டியில் அடைத்து பராமரித்து வருகிறார். இந்த நிலையில், 25-ம் தேதி மாலையில் குடி போதையில் வந்த சிலர் முப்பிடாதியிடம் இலவசமாக வாத்து கேட்டுள்ளனர். போதையில் இருக்கும் தாங்கள் சமைத்து சாப்பிட இலவசமாக பார்த்து கொடுக்குமாறு தகராறு செய்துள்ளனர்.

வாத்து உரிமையாளர் கூறாமல் யாருக்கும் இலவசமாக கொடுக்க முடியாது என முப்பிடாதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அதனால் ஆத்திரத்துடன் அவர்கள் தகராறு ஈடுபட்டதும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தலையிட்டு அவர்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். தாங்கள் கேட்டும் இலவசமாக வாத்துக் கொடுக்காத ஆத்திரத்தில் இருந்த அந்த கும்பல் நேற்று (26-ம் தேதி) அதிகாலை 2 மணிக்கு மீண்டும் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர்.

கைதானவர்கள்

அரிவாள் கம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்ற அந்த கும்பல், முப்பிடாதியின் எதிர்ப்பையும் மீறி வாத்துகளை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். அத்துடன் கொடூரமாக கம்பால் தாக்கியுள்ளனர். அதில் நூற்றுக்கும் மேற்பட்ட வாத்துக்கள் கொல்லப்பட்டன. மேலும் பலத்த காயமடைந்த 45 வாழ்த்துக்கள் உயிருக்கு போராடி வருகின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் முப்பிடாதி புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், தருவையைச் சேர்ந்த மாயா, ராஜேஷ், ஹரி மற்றும் சேரன்மகாதேவியை சேர்ந்த சோனு ஆகியோருக்குத் தொடர்வு இருப்பதைக் கண்டுபிடித்தனர். இதில் ராஜேஷ், மாயா ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஹரி, சோனு ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். ஓசிக்கு வாத்து கொடுக்க மறுத்ததால் நூற்றுக்கும் அதிமமான வளர்ப்பு வாத்துகளை போதைக் கும்பல் கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம் முன்னீர்பள்ளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் விவகாரம்: "என்னை வாழ விடாமல் அவதூறு.!" - பாதிக்கப்பட்ட பெண், டி.ஐ.ஜி-யிடம் கண்ணீர்!

. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 37 வயது பெண்ணை த.வெ.க நிர்வாகியான பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கூட்டுப் பாலியல் வன்கொடும... மேலும் பார்க்க

சேலம்: பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை; தவெக உறுப்பினர் கைது; ஒதுங்கும் கட்சி

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்களைப் பல்வேறு வழிகளில் ஏமாற்றி ஆபாச வீடியோக்களை எடுத்து மிரட்டி வந்த த.வெ.க-வைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற நபரை காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்தனர்.... மேலும் பார்க்க

சேலம்: குழந்தைக்கு வலிப்பு வந்ததாக நாடகமாடிய தாய்; அம்பலமான நாடகம்; குழந்தை உயிரிழந்தது எப்படி?

சேலம் மாவட்டம் தலைவசால் அருகில் உள்ள வரகூர் தெற்கு காடு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் திருமலை வாசுதேவன். இவரின் மனைவி லலிதா. இந்தத் தம்பதிக்கு ஹர்சன் ராஜ், புவன் ராஜ் ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன... மேலும் பார்க்க

கலெக்டர் ஆபீஸ் வந்த போலி சிபிஐ அதிகாரி! - தவெக உட்பட 20-க்கும் அதிகமான போலி ஐடி கார்டுகள் பறிமுதல்

. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதார நல்வாழ்வுக் குழுமத்தின் தற்காலிக ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ... மேலும் பார்க்க

பீகார் : 40 மீட்டர் மொபைல் போன் டவரை தூக்கிச் சென்ற திருடர்கள்! - அதிகாரிகள் அதிர்ச்சி

பீகாரில் அடிக்கடி வித்தியாசமான திருட்டு நடப்பது வழக்கம். இதற்கு முன்பு ஆற்றின் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு பாலத்தை கூட இரவோடு இரவாக திருடிச்சென்ற சம்பவங்கள் நடந்து இருக்கிறது. இப்போது மொபைல் போன் டவர... மேலும் பார்க்க

கேரள - தமிழக எல்லை: 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்ம மரணம் - சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த கோர்ட்!

கேரளம்-தமிழ்நாடு எல்லையோர மாவட்டமான பாலக்காட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் ​வாளையார், கசபா, கொல்லங்கோடு, ​பட்டாம்ப... மேலும் பார்க்க