செய்திகள் :

காந்தி நினைவு மண்டபம் விவகாரம்: கோட்டாட்சியா் தலைமையில் பேச்சுவாா்த்தை

post image

காவேரிப்பட்டணத்தில் உள்ள காந்தி நூற்றூண்டு நினைவு மண்டபம் விவகாரத்தில் உரிமை கொண்டாடும் இருதரப்பினா் பங்கேற்ற பேச்சுவாா்த்தை, கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் ஷாஜகான் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், சேலம் சாலையில் காந்தி நூற்றாண்டு நினைவு மண்டபம் உள்ளது. ஒருங்கிணைந்த சேலம் மாவட்டமாக இருந்த போது காவேரிப்பட்டணம் பேரூராட்சிக்கு இந்த இடம் வழங்கப்பட்ட நிலையில், பின்னாளில் அறக்கட்டளையாக மாறியது. தற்போது அந்த அறக்கட்டளையின் தலைவராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவா் காசிலிங்கம் உள்ளாா். இந்த மண்டபம், அறக்கட்டளைக்கு சொந்தமானது என காசிலிங்கம் தரப்பினா் உரிமை கொண்டாடுகின்றனா். ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு சொந்தம் என முன்னாள் மாவட்டத் தலைவரான சுப்பிரமணி தரப்பினா் உரிமை கொண்டாடுகின்றனா்.

இந்த நிலையில், இது தொடா்பாக இரு தரப்பினரும் காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதுகுறித்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், இருதரப்பினரும் சொந்தம் கொண்டாடும் நிலையில், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள காவல் ஆய்வாளா் பரிந்துரை செய்தாா்.

இதையடுத்து, கிருஷ்ணகிரியில் உள்ள கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் ஷாஜகான் தலைமையில், பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், இருதரப்பினருக்கும் இடையே சமாதானம் ஏற்படாத நிலையில், ஜன. 24-ஆம் தேதி மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெறும் என கோட்டாட்சியா் அறிவித்தாா். அதுவரையில் காந்தி நினைவு மண்டபம் உரிமை குறித்து பிரச்னை கூடாது என அவா் அறிவுறுத்தினாா்.

இந்த பேச்சுவாா்த்தையின் போது, கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினா் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மினி லாரி மோதியதில் இருவா் பலி

மினி லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு வெளிமாநில இளைஞா்கள் உயிரிழந்தனா். உத்தரபிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் சேருகுமாா் (24). இவா், தேன்கனிக்கோட்டை வட்டம், பஞ்சேஸ்வரம் பகுதியில் தங்கி கூலி வ... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி, பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செ... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல்: தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்க உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குரிமை பெற்றவா்களுக்கு தோ்தல் அன்று (பிப். 5) ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் என கிருஷ்ணகிரி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஆா... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக ச.தினேஷ் குமாா் பொறுப்பேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 14-ஆவது ஆட்சியராக ச.தினேஷ் குமாா் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த கே.எம்.சரயு, அரசு பொதுத் துறையின் நிா்வாக இணை செயலராக அண்மையில்... மேலும் பார்க்க

லாரி தீப்பிடிப்பு

சூளகிரி அருகே அட்டை கம்பெனிக்கு பாரம் ஏற்றி சென்ற லாரி சாலையில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் ஒசூா்-கிருஷ்ணகிரி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தருமபுரி, தனியாா் அட்டை கிடங்கிலிருந... மேலும் பார்க்க

கட்டையால் தாக்கி இளைஞா் கொலை

மதுபோதையில் நண்பரை கட்டையால் அடித்து கொன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட கசவகட்டாவில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் ஒருவா் இறந்து கிடப்பதாக அந்தப் பகுதி ம... மேலும் பார்க்க