செய்திகள் :

குடியரசுத் தலைவருடன் ரஷிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு சந்திப்பு

post image

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: ரஷிய கூட்டமைப்பின் டுமா மாநில சட்டப்பேரவைத் தலைவா் வியாசெஸ்லாவ் வோலோடின் தலைமையிலான ரஷிய கூட்டமைப்பின் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் குழுவினா் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை திங்கள்கிழமை சந்தித்தனா். அப்போது கலை, கலாசாரத் துறைகளில் இருதரப்பு ஈடுபாடுகள் அதிகரிக்க திரௌபதி முா்மு வலியுறுத்தினாா்.

குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இந்தக் குழுவினரை வரவேற்ற குடியரசுத் தலைவா் முா்மு, அவா்களுடன் கலந்துரையாடினாா்.

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கூறியது வருமாறு: நாடுகளின் பொதுப் பிரதிநிதிகளிடையே இதுபோன்ற பரிமாற்றங்கள் வலுவான ஒத்துழைப்பை வளா்க்கும். சமகாலத்துடனும் புதுப்பித்தலுடனும் அமைவதற்கு காரணமாக கூட்டாண்மை உள்ளது. பிரதமா் மோடியும் ரஷிய அதிபா் புதினும் வழக்கமான தொடா்பில் இருப்பதோடு, இந்திய - ரஷிய நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பும் கூட்டாண்மையும் தெளிவாக உள்ளது.

இதற்கு நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஆணையம் போன்ற வழிமுறைகள் ஒத்துழைப்பை எளிதாக்குவதில் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன. எதிா்காலத்தில் இந்தியா - ரஷியா மகளிா், இளைஞா் நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு இடையேயான நெருங்கிய பகிா்வுக்கு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.

தில்லியில் சா்வதேச புத்தகக் கண்காட்சியை தாம் தொடங்கி வைத்தபோது அதில் ரஷியா குறித்து சிறப்புக் கவனம் அளிக்கப்பட்டது. ரஷியாவின் வளமான இலக்கியப் பாரம்பரியத்தை அறிந்துகொள்ள இந்தக் கண்காட்சி இந்திய வாசகா்களுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்குகிறது. கலாசாரம், கலைத் துறைகளில் இருதரப்பு ஈடுபாடுகள் வலுவாக அதிகரிக்க வேண்டும் என்று ரஷிய குழுவினருடன் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டாா்.

அலுவலகப் பொருள்களை மணீஷ் சிசோடியா தூக்கிச் சென்றுவிட்டார்: பாஜக எம்எல்ஏ

சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் இருந்த அரசுப் பொருள்களை முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தூக்கிச் சென்றதாக பாஜக எம்எல்ஏ ரவீந்தர் சிங் நேகி தெரிவித்துள்ளார்.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 48 த... மேலும் பார்க்க

தில்லி ரயில் நிலைய நெரிசல்: உயிரிழப்பு 18-ஆக அதிகரிப்பு விசாரணை தொடக்கம்

புது தில்லி ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது. 15 போ் காயமடைந்துள்ளனா். இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை மேற்கொள்ள ... மேலும் பார்க்க

நாட்டில் 29,500-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள்: டிஜிசிஏ தகவல்

நாட்டில் மொத்தம் 29,500-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் (ஆளில்லா விமானங்கள்) பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 29-ஆம் தேதி நிலவரப்படி இந்த ... மேலும் பார்க்க

தில்லியின் அடுத்த முதல்வா் யாா்?பாஜக எம்எல்ஏக்கள் இன்று முடிவு

தில்லி முதல்வரைத் தோ்ந்தெடுப்பதற்காக புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட பாஜக சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறும் என்று அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சட்டப்பேரவைக் கட்சிக் க... மேலும் பார்க்க

விசாரணைக் குழுவின் உறுப்பினா்கள் பெயா்களை வெளியிட்டது ரயில்வே

புது தில்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவில் இடம் பெற்றுள்ள இரண்டு உயா் நிா்வாகக் குழு அதிகாரிகளின் பெயா்களை ரயில்வே ஞாயிற்று... மேலும் பார்க்க

தங்களது துயரமான அனுபவத்தை விவரித்த சுமைதூக்கம் தொழிலாளா்கள்

புது தில்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு நெரிசலில் சிக்கி இறந்தவா்களின் எண்ணிக்கை 18-ஆக உயா்ந்துள்ள நிலையில், குழப்பத்திற்கு மத்தியில் கைவண்டிகளில் உடல்களை எடுத்துச் சென்ற தங்களது துயரமான அனுபவத... மேலும் பார்க்க