செய்திகள் :

"குமாரி கதாபாத்திரத்திற்காகக் கடுமையாக உழைத்தேன், அதனால் தான்"- 'காந்தா' குறித்து பாக்யஸ்ரீ போர்ஸ்

post image

அறிமுக இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா, பாக்யஸ்ரீ போர்ஸ், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த நவம்பர் 14ம் தேதி வெளியான திரைப்படம் படம் 'காந்தா'.

இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தில் குமாரி கதாபாத்திரத்தில் நடித்த பாக்யஸ்ரீ போர்ஸ் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

Kaantha
Kaantha

இவர் இந்தியில் ‘யாரியான் 2’ என்ற படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமாகி இருந்தாலும் தெலுங்கு சினிமா மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பிறகு தெலுங்கில் ‘மிஸ்டர் பச்சன்’ மற்றும் ‘கிங்டம்’ படங்களில் வாய்ப்பு கிடைத்தது. தற்போது 'காந்தா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இருக்கிறார்.

இந்நிலையில் 'IANS' ஊடகத்திற்கு அவர் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். "நான் 'காந்தா' படத்தில் நடித்த குமாரி கதாபாத்திரத்திற்காகக் கடுமையாக உழைத்தேன்.

ஒரு கட்டத்தில் எல்லோரும் 'யாரும் இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்து நாங்கள் பார்க்கவில்லை' என்று சொன்னார்கள்.

Bhagyashri Borse - Kaantha
Bhagyashri Borse - Kaantha

என்னைப் பொறுத்தவரை என்னுடைய திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பும் தளமும் கிடைத்தது.

அதனை நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான், படம் வெளியான பிறகு எனக்கு இவ்வளவு அன்பு கிடைத்தது.

கடின உழைப்பு நம்மை நல்ல இடங்களுக்கு தான் கொண்டு சேர்க்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்று பேசியிருக்கிறார்.

`இது போன்ற சம்பவங்கள் ஹாலிவுட்டில் நடப்பதில்லை, ஆனால்!'- ரசிகர்கள் செல்ஃபி எடுப்பது குறித்து ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் தொழிலதிபர் நிகில் காமத்தின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார். அதில் ரசிகர்கள் செல்ஃபி கேட்பது தொடர்பாகக் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், " நா... மேலும் பார்க்க

Yellow Review: பயணத்தின் தேவையை உணர்த்தும் ஃபீல் குட் `எல்லோ'; க்ரீன் சிக்னல் பெறுகிறதா?

தந்தையின் உடல்நிலை சரியில்லாமல் போனதால் வீட்டுப் பொறுப்புகள் மகளான ஆதிரையிடம் (பூர்ணிமா ரவி) வந்துவிட, அதனால் அவரது காதலனுடனான உறவு முறிந்துவிடுகிறது. இந்நிலையில் இயந்திர வாழ்க்கையில் தன்னையே இழந்துவி... மேலும் பார்க்க

Middle Class Review: இது எமோஷன் கிளாஸா, காமெடி கிளாஸா? பாஸாகிறதா இந்த மிடில் கிளாஸ்?

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் கார்ல் மார்க்ஸ் (முனீஸ் காந்த்), தன் மனைவி அன்பரசி (விஜயலட்சுமி), மகள், மகன் ஆகியோருடன் சென்னையில் வசித்து வருகிறார். சொந்த கிராமத்தில் விவசாய நிலம் வாங்கி, செட்டில் ஆ... மேலும் பார்க்க

Mask Review: கவின் vs ஆண்ட்ரியா யுத்தம்; தேவையான த்ரில்லையும் சுவாரஸ்யத்தையும் தருகிறதா இந்த மாஸ்க்?

நடிகவேள் எம்.ஆர்.ராதா முகமூடியணிந்த ஒரு கொள்ளைக் கூட்டம், சென்னையிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்து 446 கோடி ரூபாயைக் கொள்ளையடிக்கிறது. எக்கச்சக்கமாகப் பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையிலிரு... மேலும் பார்க்க

"எங்க அம்மா கொடுத்த அந்த பிளாஸ்டிக் வாட்ச்.!" - நெகிழும் தனுஷ்

நடிகர் தனுஷ் சமீபத்தில் நடைபெற்ற துபாய் வாட்ச் வீக் ( Dubai Watch Week) என்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார்.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தனுஷிடம் உங்களுக்கு முதன் முதலில் பிடித்த, காதல் கொ... மேலும் பார்க்க

``அந்தப் பாடல் என்னை விடாமல் துரத்திக்கொண்டே இருக்கிறது'' - `ஒய் திஸ் கொலவெறி' குறித்து தனுஷ்

நடிகர் தனுஷ் சமீபத்தில் நடைபெற்ற துபாய் வாட்ச் வீக் ( Dubai Watch Week) என்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார். அந்நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், "நான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன். தமிழ் மொழி உ... மேலும் பார்க்க