செய்திகள் :

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: ”அழுகை சத்தம் இப்போதும் மறையவில்லை” - நினைவு தினத்தில் கலங்கிய பெற்றோர்

post image

கும்பகோணம் ஶ்ரீ கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் பள்ளியில் படித்த 94 குழந்தைகள் தீக்கு இரையாகினர்.

பல குழந்தைகள் கடும் தீகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்தக் கோர சம்பவம் உலகையே உலுக்கியது. பள்ளி நிர்வாகம் குழந்தைகள் பாதுகாப்பில் காட்டிய அலட்சியமே இந்தத் தீ விபத்துக்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் தீ விபத்து நாள் நடந்த தினத்தில் பலியானவர்களுக்கு பள்ளி முன்பு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடக்கிறது.

மாணவர்களுக்கு அஞ்சலி
மாணவர்களுக்கு அஞ்சலி

அதன்படி கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 22ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. விபத்து நடந்த பள்ளி முன்பு உயிரிழந்த 94 குழந்தைகளின் படங்கள் அடங்கிய ப்ளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது.

அங்கு திரண்ட குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சகோதர, சகோதரிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் குழந்தைகளின் படங்களுக்கு மலர் தூவி, மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

பிள்ளைகளை இழந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகள் விரும்பி சாப்பிட்ட பிஸ்கட், சாக்லெட், கூல்டிங்க்ஸ், பழங்கள் உள்ளிட்டவற்றை வைத்து கை கூப்பி வணங்கிக் கதறினர். தாய் ஒருவர், "எங்க ராசா இருக்க, எங்கூட வந்திரு கண்ணு" என்று கதறியதைக் கேட்ட பலரும் கண் கலங்கினர்.

கோர தீவிபத்தில் குழந்தைகளைப் பறிக்கொடுத்த பெற்றோர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டாலும் ஆறாத வடுவாக, ஒவ்வொரு நாளும் கண்ணீர் சிந்தும் நிகழ்வாக மனதை விட்டு அகலாமல் இருக்கிறது இந்தச் சம்பவம்.

கும்பகோணம் பள்ளி தீ விபத்து நினைவு நாள்
கும்பகோணம் பள்ளி தீ விபத்து நினைவு நாள்

இது குறித்து சிலரிடம் பேசினோம். "காலையில் மலர்ந்த மொட்டுகளாகச் சிரித்த முகத்துடன் எங்கள் பிள்ளைகளை பள்ளியில் விட்டு சென்றோம். பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டதை அறிந்ததும் கடவுளே எந்தக் குழந்தைக்கும் எதுவும் ஆகியிருக்கக் கூடாதுனு ஓடியாந்தோம். இங்கு வந்தால் அந்த ஏரியா முழுக்க ஒரே அழுகுரல்கள். தீயில் கருகிய குழந்தைகளின் உடல்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன எங்கும் மரணம் ஓலம் கேட்டன.

இப்போதும் அந்த அழுகை சத்தம் காதுகளில் ஒலித்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு நாள் தீடிரென தூக்கத்தில் இந்த விபத்து கண் முன் வர தூக்கி வாரிப்போடும். இந்தச் சம்பவம் மட்டும் நடக்கலைன்னா இன்றைக்கு எங்கள் பிள்ளைகள் வளர்ந்து பெரிய ஆளாகி எங்களுக்கு துணையாக இருந்திருப்பாங்க.

பள்ளியில் விடும்போது இப்படி நடக்குமுனு தெரியாமப் போச்சு. கடவுள், எங்க உசுரை பாதியில் பறிச்சுக்கிட்டான்" என்று கண்ணீர் வடித்தனர்.

கும்பகோணம் பள்ளி தீ விபத்து
கும்பகோணம் பள்ளி தீ விபத்து

பள்ளிகள் மற்றும் மாணவர்கள் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி தீ விபத்து நாளன்று பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு முந்தைய அரசுகள் இதைக் கண்டு கொள்ளவில்லை. தற்போது கும்பகோணம் வட்டத்திற்கு மட்டுமாவது உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என முதல்வர் விஜய்க்குக் கோரிக்கை வைத்தனர்.

மதுரை: ஆம்னி பேருந்தும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து; ஐந்து பேர் பலியான சோகம்

சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து திடீரென தனது கட்டுப்பாட்டு இழந்து நடுவில் உள்ள தடுப்பில் மோதி எதிர்திசையில் மதுரையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பே... மேலும் பார்க்க

பேங்காக் பாரில் பயங்கர தீவிபத்து: 27 பேர் உடல் கருகி பலி; 60 பேர் காயம்; எப்படி நடந்தது?

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கின் சத்துசக் மாவட்டத்தில் அமைந்துள்ளது Rong Beer Na Lat Phrao என்ற பிரபல உணவகம் மற்றும் பொழுதுபோக்கு விடுதி. நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வார இறுதி நாளைக் கொண்டாட... மேலும் பார்க்க

வியட்நாமில் பயங்கரம்: சுற்றுலாப் படகு கவிழ்ந்து 15 இந்தியர்கள் பரிதாப மரணம்!

வியட்நாமின் புகழ்பெற்ற புக்குவக் (Phu Quoc) தீவு அருகே சுற்றுலாப் பயணிகள் சென்ற விசைப்படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். சுற்றுலாப் பயணிகள... மேலும் பார்க்க

திருப்பூர்: நேருக்கு நேர் மோதிக்கொண்ட டேங்கர் லாரி - கார்; 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்த சோகம்

சேலம் மாவட்டம், சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமா. இவரின் கணவர் முகிலன், தந்தை ஈஸ்வரன், தாய் திருமகள், பாட்டி சிவகாமி மற்றும் இவர்களின் குழந்தைகள் ஸ்ரீநித்து, கனிஷ் ஆகியோர் திருப்பூர் மாவட்டம், ப... மேலும் பார்க்க

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி; ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயன்றபோது பரிதாபம்

மகாராஷ்டிரா முழுக்க தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மரங்கள் ஒடிந்து விழுந்து வருகிறது. மின்வயர்களும் அறுந்து விழுந்து வருகிறது. மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள காம்க... மேலும் பார்க்க

வயநாடு நிலச்சரிவு:‌ அவசரக் கூட்டத்தைக் கூட்டிய முதல்வர்; மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணி தீவிரம்

கேரள மாநிலம் வயநாடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் 265 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்தத் தொடர் மழை காரணமாக மேப்... மேலும் பார்க்க