செய்திகள் :

பேங்காக் பாரில் பயங்கர தீவிபத்து: 27 பேர் உடல் கருகி பலி; 60 பேர் காயம்; எப்படி நடந்தது?

post image

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கின் சத்துசக் மாவட்டத்தில் அமைந்துள்ளது Rong Beer Na Lat Phrao என்ற பிரபல உணவகம் மற்றும் பொழுதுபோக்கு விடுதி.

நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வார இறுதி நாளைக் கொண்டாட விடுதியில் கூடியிருந்தனர். நள்ளிரவு சுமார் 11:30 மணியளவில், விடுதியில் திடீரெனத் தீ பிடித்துள்ளது. விடுதிக்குள் தீ வேகமாகப் பரவியதை அடுத்து, அங்கு நின்றிருந்தவர்கள் அலறியடித்தபடி முன்பக்க நுழைவுவாயில் வழியாக வெளியேற முயன்றனர். அப்போது கரும்புகையும் தீப்பிழம்புகளும் கட்டிடத்தை முழுமையாகச் சூழ்ந்துகொண்டன.

பேங்காக் பாரில் பயங்கரத் தீ விபத்து
பேங்காக் பாரில் பயங்கரத் தீ விபத்து

இந்த விபத்து குறித்த தகவலறிந்து நள்ளிரவு 12 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 30 நிமிடங்கள் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த பிரதமர் அனுதின் சார்ன்விராகுல் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``தீ விபத்து ஏற்பட்டபோது அங்கு இசை நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்த கலைஞர் ஒருவரிடம் பேசினேன்.

மின்சாரக் கட்டுப்பாட்டுக் கருவியில் ஏற்பட்ட தீப்பொறியே இந்த விபத்துக்குக் காரணம் என்று அவர் கூறினார். அதன்பின்னர் வெடிச்சத்தம் கேட்டு, அனைவரும் புகை மற்றும் தீயிலிருந்து தப்பிக்க ஓடியுள்ளனர்.

துரதிர்ஷ்டவசமாகப் பலர் வெளியேறும் வழியறியாமல், புகையிலிருந்து தப்பிக்கக் கட்டிடத்தின் பின்பகுதியில் உள்ள கழிவறைகளுக்குள் சென்று ஒளிந்து கொண்டுள்ளனர். அங்குதான் பெரும்பாலான உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பயங்கரத் தீ விபத்தில், குறைந்தது 27 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள" என்று வேதனையுடன் தெரிவித்தார்.

மேலும், பலர் இன்னும் காணாமல் போயுள்ளதாக Thairath ஊடகம் தெரிவித்துள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

வியட்நாமில் பயங்கரம்: சுற்றுலாப் படகு கவிழ்ந்து 15 இந்தியர்கள் பரிதாப மரணம்!

வியட்நாமின் புகழ்பெற்ற புக்குவக் (Phu Quoc) தீவு அருகே சுற்றுலாப் பயணிகள் சென்ற விசைப்படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். சுற்றுலாப் பயணிகள... மேலும் பார்க்க

திருப்பூர்: நேருக்கு நேர் மோதிக்கொண்ட டேங்கர் லாரி - கார்; 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்த சோகம்

சேலம் மாவட்டம், சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமா. இவரின் கணவர் முகிலன், தந்தை ஈஸ்வரன், தாய் திருமகள், பாட்டி சிவகாமி மற்றும் இவர்களின் குழந்தைகள் ஸ்ரீநித்து, கனிஷ் ஆகியோர் திருப்பூர் மாவட்டம், ப... மேலும் பார்க்க

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி; ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயன்றபோது பரிதாபம்

மகாராஷ்டிரா முழுக்க தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மரங்கள் ஒடிந்து விழுந்து வருகிறது. மின்வயர்களும் அறுந்து விழுந்து வருகிறது. மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள காம்க... மேலும் பார்க்க

வயநாடு நிலச்சரிவு:‌ அவசரக் கூட்டத்தைக் கூட்டிய முதல்வர்; மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணி தீவிரம்

கேரள மாநிலம் வயநாடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் 265 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்தத் தொடர் மழை காரணமாக மேப்... மேலும் பார்க்க

வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு; மீட்புப் பணிகள் தீவிரம்; கேரளாவில் மீண்டும் சோகம்

கேரள மாநிலத்தின் மலப்புறம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் 'ஆனக்கம்பொயில் - மேப்பாடி' சுரங்கப்பாதை திட்டப் பணிகள் தற்போது மேனகாட்சி பாலம் அருகே நடைபெற்று வருகின்றன. மலப்புறம் மற்றும் வயநாடு இடையே... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: நெல் மூட்டைகள் சரிந்து பெண் பணியாளர் பலியான சோகம்; இழப்பீடு வழங்க கோரிக்கை

தஞ்சாவூர் அருகே உள்ள ஆர்சுத்திப்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கில் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள... மேலும் பார்க்க