செய்திகள் :

குற்றாலத்தில் பதுங்கியிருந்த பிரபல சென்னை ரெளடி - துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தது எப்படி?

post image

நெல்லை மாநகரில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் ஏ பிளஸ், ஏ மற்றும் பி கிரேடு ரெளடிகளை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர்கள் ரெளடிகளின் நகர்வு, அவர்களின் நடவடிக்கை குறித்தும் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த பிரபல ரெளடி கனகராஜ் தென்காசி மாவட்டம், குற்றாலத்திலுள்ள ஒரு தனியார் விடுதியில் தனது கூட்டாளிகள் கார்த்திக், சாபின், பிரகாஷ் ஆகிய 3 பேருடன் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

கைது செய்யப்பட்ட ரெளடி கனகராஜ்

இந்த நிலையில் சென்னை ரெளடிகள் ஒழிப்பு தனிப்பிரிவு போலீஸார் தலைமையில் குழுவாக குற்றாலத்திற்கு விரைந்தனர். உள்ளூர் போலீஸார் உதவியுடன் குற்றாலத்தைச் சுற்றியுள்ள விடுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, தமிழ்நாடு ஓட்டல் அருகில் ஒரு வீட்டில் செயல்பட்டு வரும் விடுதியில் கனகராஜ் உள்ளிட்ட நால்வர் தங்கியிருப்பது தெரிய வந்தது.

அதிகாலை 3 மணியளவில் கனகராஜ் உள்ளிட்டோர் தங்கியிருந்த அறையின் கதவுகளைத் தட்டி துப்பாக்கி முனையில் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருச்சியைச் சேர்ந்த ஒருவரின் அடையாள அட்டை நகலைக் கொடுத்து அறை எடுத்து தங்கியிருந்தது தெரிய வந்தது.

சென்னை எண்ணூரில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக கனகராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீஸார் கைது செய்தனர். இதனிடையே தனது கணவர் கனகராஜ் உயிருக்கு போலீஸாரால் ஆபத்து இருப்பதாக அவரது மனைவி, இ.மெயில் மூலம் புகார் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

குற்றாலம் காவல் நிலையம்

”கைது செய்யப்பட்ட கனகராஜ் தனது கூட்டாளிகள் மூலம் மற்றொரு கொலை சம்பவத்தை நடத்த திட்டமிட்டுருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. ஏற்கெனவே ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரை தீவிரமாக கண்காணித்து வந்தோம். அப்போதுதான் அவர் குற்றாலத்தில் பதுங்கியிருக்கும் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இங்குள்ள விடுதிகளில் நடத்திய சோதனையின் அடிப்படையில் கூட்டாளிகளுடன் அவரை கைது செய்துள்ளோம்.” என்றனர் போலீஸார்.

'பஸ்ஸில் தவறான நோக்கத்துடன் தொட முயன்றார்' - இளம்பெண்ணின் வீடியோ; தற்கொலை செய்த நபர்

கேரள மாநிலம் கோழிக்கோடு கோவிந்தபுரத்தைச் சேர்ந்தவர் தீபக்(42). துணிக்கடை ஒன்றில் விற்பனையாளராக வேலை செய்துவந்தார். இவர் வேலை செய்யும் நிறுவனம் சம்பந்தப்பட்ட பணிக்காக கடந்த வெள்ளிகிழமை கண்ணூர் சென்றார்... மேலும் பார்க்க

நெல்லை: செல்போனில் பேச்சு… கேட்காத அக்கா.. ஓட ஓட விரட்டிக் கொன்ற தம்பி; நடந்தது என்ன?

நெல்லை மாவட்டம், தேவர்குளத்தைச் சேர்ந்தவர் ராமராஜ். விவசாயியான இவரது மனைவி சவுந்தரி. இவர்களுக்கு ராதிகா என்ற மகளும், கண்ணன் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில், சவுந்தரியும், கண்ணனும் வேலூரில் உள்ள ஒரு... மேலும் பார்க்க

Share Market: டெலிகிராமில் 'டீச்சர்' விரித்த மோசடி வலை; நெல்லை இளைஞர் ரூ.30 லட்சத்தை இழந்தது எப்படி?

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயதான இளைஞர் ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்குக் கடந்த நவம்பர் மாதம் இங்கிலாந்து நாட்டு எண் கொண்ட வாட்ஸ்அப் எண்ணில் இருந்து... மேலும் பார்க்க

UP: பணம் கேட்டு தொந்தரவு செய்த Live-in பார்ட்னர்; எரித்துக் கொன்று சாம்பலைக் கரைத்த நபருக்கு வலை

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் வசிக்கும் ராம் சிங் என்பவர் தன்னுடன் லிவ் இன் முறையில் வாழ்ந்த பெண்ணைக் கொலை செய்துள்ளார். ரயில்வேயில் வேலை செய்து ஓய்வு பெற்ற ராம் சிங் மகன் நிதின், மினி வேன் ஒன்றில்... மேலும் பார்க்க

பரமக்குடி: பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் காவலர்; கழிவறையில் செல்போனில் படம் பிடித்த எஸ்.எஸ்.ஐ கைது!

பரமக்குடியில் தமிழக அரசின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் இமானுவேல் சேகரனுக்கு ரூ.3 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு இமானுவேல் சேகரனின் முழு உருவ சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நேற்... மேலும் பார்க்க

திருவள்ளூர்: கஞ்சா போதையால் நடந்த இரட்டைக் கொலை - சோகத்தில் முடிந்த பொங்கல் கொண்டாட்டம்

திருவள்ளூரை அடுத்த ஒண்டிக்குப்பம் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (32). இவரின் நண்பர்கள் கேசவமூர்த்தி, சுகுமார். இவர்கள் மூன்று பேரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆந்திர மாநிலத்தில் ... மேலும் பார்க்க