செய்திகள் :

“கேரளாவில் இருப்பதால் உயிரோடு இருக்கிறோம்” - மோனாலிசா வழக்கில் உயர் நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்

post image

கும்பமேளா மூலம் சமூக ஊடகங்களில் பிரபலமான மோனாலிசா போஸ்லே மற்றும் அவரது கணவர் முகமது ஃபர்மான் கான் ஆகியோர் தங்களின் கலப்புத் திருமணம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை கேரள உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்தது. இரு மாநிலங்களைச் சார்ந்த இந்த வழக்கு, ஒரு கலப்புத் திருமணம் என்பதையும் தாண்டி, சட்ட மற்றும் அரசியல் ரீதியாக பெரும் விவாதமாக உருவெடுத்துள்ளது.

திருமணத்தின் சட்டப்பூர்வத் தன்மை, மணமகளின் வயது மற்றும் தம்பதியினர் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்த கடுமையான வாதங்களுக்குப் பிறகு, நீதிபதி புதன்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.

இந்த விசாரணையின்போது, "நீங்கள் கேரளாவில் இருப்பது உங்கள் அதிர்ஷ்டம்" என்று நீதிமன்றம் வாய்மொழியாகக் குறிப்பிட்டது. மத்தியப் பிரதேசத்தில் தங்களுக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறப்பட்ட பின்னணியில் நீதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

மோனாலிசா போஸ்லே - முஹம்மது ஃபர்மான் கான் திருமணம்

நீதிபதியின் இந்தக் கருத்துக்குப் பதிலளித்த தம்பதியினரின் வழக்கறிஞர், "நாங்கள் இப்போது உயிருடன் இருப்பதற்கு அதுதான் ஒரே காரணம்" என்று கூறியது நீதிமன்ற அறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

2025 கும்பமேளாவில் பாசி மாலைகள் விற்கும் காணொளிகள் மூலம் தேசிய அளவில் பிரபலமான மோனாலிசா, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஃபர்மான் கானை கேரளாவில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின்போது மோனாலிசாவுக்கு சட்டப்பூர்வ வயது பூர்த்தியாகவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, இவர்களது திருமணம் பெரும் புயலைக் கிளப்பியது.

தம்பதியினர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம். சசிந்திரன், "அடிப்படைவாதக் குழுக்களும், மத்தியப் பிரதேச நிர்வாகத்தின் சில பிரிவினரும் மோனாலிசாவை மைனர் என்று சித்தரித்து இந்தத் திருமணத்தைச் செல்லாததாக்க முயற்சிக்கின்றனர்," என்று வாதிட்டார்.

திருமணத்தின்போதே மோனாலிசாவுக்கு வயது பூர்த்தியாகிவிட்டது என்றும், ஆனால் அவரது வயது தொடர்பான அதிகாரப்பூர்வ பதிவுகள் பின்னர் திருத்தப்பட்டுள்ளன என்றும் தம்பதியினர் தரப்பில் கூறப்பட்டது.

மத்தியப் பிரதேச அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு, இந்த முன்ஜாமீன் மனுவை எதிர்த்தார். மணமகன் இஸ்லாமியராக இருந்தபோதிலும், திருமணம் இந்து மத சடங்குகளின்படி நடத்தப்பட்டதால், அது சட்டப்படி செல்லாது என்று அவர் வாதிட்டார். மேலும், மோனாலிசாவின் உண்மையான பிறந்த தேதி டிசம்பர் 2009 என்றும், எனவே திருமணத்தின்போது அவர் மைனராக இருந்ததால், குழந்தைகள் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் இந்த வழக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்களைப் பெற போலி ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, ஃபர்மான் கான் மீது பதிவு செய்யப்பட்டுள்ள கடத்தல் வழக்கோடு, ஆவண மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளும் சேர்க்கப்படலாம் என்று மாநில அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இருப்பினும், "பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண், தனது கணவருக்கு எதிராக எந்தப் புகாரும் அளிக்கவில்லையே?" என்று நீதிமன்றம் மாநில அரசின் வாதத்தின் சில அம்சங்கள் குறித்து கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது. மோனாலிசாவின் புகழ் மட்டுமின்றி, கேரளா மற்றும் மத்தியப் பிரதேச நீதிமன்றங்களில் இணையான வழக்குகள் நடப்பதாலும் இந்த விவகாரம் தேசிய கவனத்தை ஈர்த்துள்ளது.

இதனிடையே, திருவனந்தபுரம் போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரு தனிநபர் புகாரில், இந்தத் திருமணத்தை நடத்தி வைக்க உதவியதாகக் கூறி, சிபிஐ(எம்) தலைவர்களான எம்.வி. கோவிந்தன், வி. சிவன்குட்டி மற்றும் ஏ.ஏ. ரஹீம் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டுள்ளது.

தனிநபர் சுதந்திரம், கலப்புத் திருமணம், வயது மற்றும் குற்றவியல் பொறுப்பு எனப் பல சிக்கலான கேள்விகள் இந்த ஒரே வழக்கில் குவிந்துள்ள நிலையில், இன்று வழங்கப்படும் தீர்ப்பு, இந்தத் தம்பதியினரின் எதிர்காலத்திற்கும், அவர்களைச் சுற்றி நடக்கும் சட்டப் போராட்டங்களுக்கும் மிக முக்கியமானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"GDP-யில் 17% உழைப்பு இல்லத்தரசிகளுடையது; அவர்களின் உத்தேச வருமானம் ரூ.30,000" - உச்ச நீதிமன்றம்

இல்லத்தரசிகள் அல்லது குடும்பத் தலைவிகள் என்பவர்கள் வெறும் வீட்டைப் பராமரிப்பவர்கள் மட்டுமல்ல, அவர்கள் நாட்டின் உண்மையான கட்டுமானக் கற்கள் (Building Blocks) என்றும், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழ... மேலும் பார்க்க

`தமிழக முதல்வர் பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி தருவோம் என்கிறார்; ஆனால்..!' - நீதிபதி விமர்சனம்!

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்,உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில்,`சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வருகிறேன்.எங்கள் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவ... மேலும் பார்க்க

`காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் முழுமையாக மாற்றியமைக்கப்படும்' - தமிழக அரசு

காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் முழுமையாக மாற்றியமைக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள், ஆங்காங்கே பிளாஸ்டிக் பாட்... மேலும் பார்க்க

ரூ.634 கோடி லஞ்ச விவகாரம்: `கே.என் நேரு மீது ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு' - ஹைகோர்ட்டில் தமிழக அரசு

முந்தைய திமுக ஆட்சி காலத்தில், நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவி... மேலும் பார்க்க

`சுய விருப்பத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது குற்றமல்ல; காவல்துறை அவர்களை..!' - உச்ச நீதிமன்றம்

இந்தியாவில் மனிதக் கடத்தலைத் தடுக்கவும், வணிக ரீதியான பாலியல் சுரண்டலை ஒடுக்கவும் 'இம்மோரல் டிராஃபிக் (தடுப்பு) சட்டம்' நடைமுறையில் உள்ளது. ஆனால், இந்தச் சட்டத்தின் விதிகள் (குறிப்பாகப் பிரிவு 17) காவ... மேலும் பார்க்க

செட்டிநாடு: ரூ.800 கோடி முறைகேடு? – கருப்பன் செட்டிக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு!

செட்டிநாடு குடும்பத்தைச் சேர்ந்த கல்வியாளர் மற்றும் சமூக சேவகர் மீனா முத்தையா மறைவுக்கு பின்னர், அவரது நெருங்கிய பணியாளரான கே.டி.ஆர். ராஜா கருப்பன் செட்டி எனும் கருப்பையா மீது எழுந்துள்ள ₹800 கோடி நித... மேலும் பார்க்க