செய்திகள் :

'கொளத்தூர் தொகுதியை சேகர் பாபுவிடமிருந்து பறிக்கும் திமுக?' - கட்சி மறுசீரமைப்பை தொடஙகிய ஸ்டாலின்!

post image

கட்சி மாவட்ட எண்ணிக்கையை 110-ஆக உயர்த்தி பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலை அறிவித்திருக்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். இந்நிலையில், கொளத்தூர் தொகுதியை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை சேகர்பாபுவிடமிருந்து பறிக்க தி.மு.க தலைமை முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.

திமுக செயற்குழு

ஆகஸ்ட் 22-ம் தேதி கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற தி.மு.க-வின் செயற்குழுவில் 9 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அமைப்புரீதியாக மாவட்டங்கள் 110 எண்ணிக்கையாக உயர்த்தப்பட்டு, மாவட்டச் செயலாளர்களின் வயது உச்ச வரம்பு 70-ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் 110 மாவட்டங்களை வரையறுத்து புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

‘தலைநகர் சென்னை, தி.மு.க-வின் கோட்டை’ என்ற நிலையைப் புரட்டிப் போட்டிருக்கின்றன நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள். மொத்தமுள்ள மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளின்கீழ் வரும் பதினாறு சட்டமன்றத் தொகுதிகளில் இரண்டே இரண்டு தொகுதிகளில் மட்டுமே வென்று மீதித் தொகுதிகளில் மண்ணைக் கவ்வியிருக்கிறது தி.மு.க. அதிலும் தி.மு.க தலைவர் ஸ்டாலினே கொளத்தூரில் வெற்றி வாய்ப்பை த.வெ.க-விடம் பறிகொடுத்தது உடன்பிறப்புகளை உஷ்ணமாக்கியிருந்தது.

நம்மிடம் பேசிய தி.மு.க சீனியர்கள், "சென்னையில் தி.மு.க சறுக்கியதையும் கெளத்தூரில் தோற்றத்தையும் ரொம்பவே சீரியஸாக எடுத்துக் கொண்டார் தலைவர் ஸ்டாலின். கழக மாவட்ட மறுவரையறையில் தலைநகர் சென்னையை 10 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது.

அதிலும் வடசென்னை மாவட்ட பிரிப்பு பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. திருவெற்றியூர், மாதவரம் தொகுதிகளை சென்னை வடகிழக்கு மாவட்டமாகவும், பெரம்பூர், கொளத்தூர் தொகுதிகளை சென்னை வடக்கு மாவட்டமாகவும் துறைமுருகம், திரு.வி.க நகர், வில்லிவாக்கம் தொகுதிகளை சென்னை கிழக்கு மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டிருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு துறைமுகம், கொளத்தூர் என இரண்டு தொகுதிகளையும் பார்த்துக் கொண்டார் சேகர்பாபு. தற்போதைய மறுசீரமைப்பில் கொளத்தூர் சென்னை வடக்கு மாவட்டத்தில் துறைமுகம் சென்னை கிழக்கு மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டிருக்கிறது" என்றனர்

சேகர்பாபு

தி.மு.க தலைமைக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம் "சேகர்பாபுவிடமிருந்து கொளத்தூர் தொகுதியை பறிக்கவே கொளத்தூரையும் துறைமுகத்தையும் தனித்தனி மாவட்டங்களில் இடம்பெற செய்திருக்கிறார் தலைவர். கொளத்தூரில் தலைவர் ஸ்டாலின் தோற்றதால் 'சேகர்பாபுமீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குரல் எழுந்த நிலையில் கொளத்தூர் தொகுதியை கண்காணிக்கும் பொறுப்பு அவரிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. எந்த மாவட்டங்களுக்கு யார் செயலாளர் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும்" என்றனர்

மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சியில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகிப்பதாக புகார்!

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் மஞ்சள் மற்றும் கறுப்பு நிறத்தி... மேலும் பார்க்க

பரந்தூர் : வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையேயான விவாதம்! தமிழகத்துக்கு லாபமா, நஷ்டமா?

சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் தொடக்கம் முதலே சர்ச்சைக்குரியதாக இருந்து வருகிறது. முந்தைய திமுக ஆட்சியின்போது முன்வைக்கப்பட்ட இந்தத் திட்டத்துக்கு பரந்தூர் மற்றும் சு... மேலும் பார்க்க

மேற்கு வங்க விநோதம்: மாணவர்களே இல்லாத 4133 பள்ளிகளில் பணியாற்றும் 19 ஆயிரம் ஆசிரியர்கள்?

மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளின் நிலை குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் எத்தனை பள்ளிகளில் மாணவர்களே இல்லை என்ற விபரமும் இடம் பெற்று இருக்கிறது. நாடு முழுவதும் மாணவர்கள் இல்லாத பள்ளிகள... மேலும் பார்க்க

பால் கொள்முதல் விலை... பஞ்சாப்பில் ரூ.65, தமிழ்நாட்டிலோ ரூ.34!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!நாட்டின் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பால் கொள்முதல் விலையைத் தமிழக அரசு உயர்த்தினால்தான், தங்களுக்குச் சிறிதளவாவது லாபம் கிடைக்கும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த... மேலும் பார்க்க

தமிழ்நாடு கனிம வளத்துறையில் அடுத்தடுத்து எழும் புகார்கள்: TAMIN இருக்கும்போது புதிய நிறுவனம் ஏன்?

தமிழ்நாடு அரசுக்கு முக்கியமான வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக விளங்கும் கனிம வளத்துறையில், நிர்வாக நடைமுறைகள், குவாரி கண்காணிப்பு, அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் டெண்டர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அடுத்த... மேலும் பார்க்க

மதுரை: மனைவியின் சடலத்துடன் அலைக்கழிக்கப்பட்ட முதியவர்... அரசு மருத்துவமனை அலட்சியத்தால் மன வேதனை!

மதுரை மாநகர் மேல பொன்னகரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். இவர் மதுரை மாநகராட்சியில்உதவி ஆணையாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையில், இவர் மனைவி மணியம்மை மதுரை மாவட்டக் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவல... மேலும் பார்க்க