செய்திகள் :

"அவ்வளவு பெரிய பனியும் பாறைகளும் கீழே விழுந்ததால்தான் அந்த அதிர்வுகள்.!" - நேபாள வெள்ளம் விளக்கம்

post image

நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 26), நேபாளத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இப்போது வரை வெளியாகி உள்ள தகவலின்படி, இந்த வெள்ளத்தில் 469 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்புக் குழு தேடி வருகின்றனர்.

இந்த வெள்ளம் எதனால் ஏற்பட்டது என்பதைத் தனது எக்ஸ் பக்கத்தில் தெளிவாக விளக்கியுள்ளார் தமிழ்நாடு சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்.

அவரது பதிவு ...

“திடீர் வெள்ளப் பெருக்கிற்குப் பனிப்பாறை சரிவே முதன்மைக் காரணம் எனத் தகவல்.

நிலநடுக்கத்தை விட, பனிப்பாறை சரிந்ததே இந்தப் பேரழிவு வெள்ளத்திற்கு முக்கியக் காரணம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

அந்த அமைப்பின் கூற்றுப்படி, ஆகஸ்ட் 26 அன்று காலையில், திபெத்தில் சுமார் 17,000 அடி (5,200 மீட்டர்) உயரத்தில் அமைந்திருந்த ஒரு பனிப்பாறை திடீரெனச் சரிந்து விழுந்துள்ளது.

அந்தப் பனிப்பாறைப் பாளம் கிட்டத்தட்ட 4,000 அடி (1,200 மீட்டர்) ஆழத்திற்குக் கீழே விழுந்துள்ளது. சரிந்து விழுந்த பனிப்பாறையின் பகுதி சுமார் 2,000 அடி (610 மீட்டர்) அகலம் கொண்டது எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்திற்கு சமமாக...

அவ்வளவு பெரிய பனிப்பாறைக அவ்வளவு உயரத்திலிருந்து கீழே விழுந்ததால், நிலத்தில் கடுமையான அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

இதனால்தான் ஆரம்பத்தில் இதை நிலநடுக்கத்தின் அதிர்வு எனத் தவறாகப் புரிந்துகொண்டனர். 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்கு இணையான அந்த அதிர்வு, பூமிக்கு அடியில் ஏற்பட்ட நிலவியல் நகர்வால் உருவானது அல்ல.

மாறாக, இந்தப் பனிப்பாறை திடீரென உடைந்து விழுந்ததால் ஏற்பட்டதே ஆகும். அந்தப் பிரம்மாண்ட பனிப்பாறை கீழே விழும்போது நொறுங்கிப் பொடியானது. அது பாறைகள், வண்டல் மண் மற்றும் நீருடன் கலந்து, மிக வேகமாகப் பாய்ந்து செல்லக்கூடிய சேறு மற்றும் கழிவுப் பெருக்காக மாறியது.

நேபாளம் வெள்ளம்
நேபாளம் வெள்ளம்

அடைப்பு

ஆகஸ்ட் 26 காலை 8:30 மணியளவில், இந்தப் பனி, பாறை மற்றும் தண்ணீரின் கலவை லெண்டே (Lhende) ஆற்றைச் சென்றடைந்தது.

இந்தப் பிரம்மாண்டக் கழிவுப் பெருக்கு ஆற்றின் குறுக்கே அடைப்பை ஏற்படுத்தி, ஒரு தற்காலிக இயற்கை அணையை உருவாக்கியது. இதனால் ஆற்றுக்கு மேல் பகுதியில் தண்ணீர் மிக வேகமாகத் தேங்கத் தொடங்கியது.

நேபாள-சீன எல்லைக்கு வடகிழக்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இந்த அடைப்பு ஏற்பட்டது.

காலை 9 மணிக்கு...

காலை 9:00 மணியளவில், தேங்கிய நீரின் அழுத்தம் தாங்க முடியாமல் அந்தத் தற்காலிக அடைப்பு உடைந்தது. கட்டுக்கடங்காமல் தேங்கி நின்ற தண்ணீரும் கழிவுகளும் ஒரே அடியாக வெளியேறியதால், ஆற்றின் கீழ்நோக்கி ஒரு சக்திவாய்ந்த வெள்ள அலை உருவாகிப் பாய்ந்தது.

இந்த வெள்ளப்பெருக்கு போட் கோஷி (Bhote Koshi) ஆற்று அமைப்பிற்குள் புகுந்து, அதைத் தொடர்ந்து திரிசூலி (Trishuli) ஆற்றையும் தாக்கி, கீழ்நிலைப் பகுதிகளில் பெரும் சேதத்தையும் அழிவையும் ஏற்படுத்தியது.

நிகழ்வுகளின் வரிசை:

பனிப்பாறை சரிவு → பனி/பாறை சரிந்து விழுதல் → கழிவுப் பெருக்கு (Debris flow) → லெண்டே ஆற்றில் அடைப்பு → தற்காலிக அணை உருவாகுதல் → நீர் தேங்குதல் → அணை உடைதல் → திடீர் வெள்ளப்பெருக்கு → போட் கோஷி ஆறு → திரிசூலி ஆறு → கீழ்நிலைப் பகுதிகளில் பேரழிவு.

எனவே, 5.2 ரிக்டர் அளவிலான நில அதிர்வு இந்த அசம்பாவிதத்திற்குக் காரணம் அல்ல.

அது பனிப்பாறை சரிந்ததால் ஏற்பட்ட விளைவு மட்டுமே. பெருமளவிலான பனி, பாறை மற்றும் நீர் திடீரென வெளியேறியதும், அதைத் தொடர்ந்து ஆற்றில் தற்காலிக அடைப்பு ஏற்பட்டு, அந்த இயற்கை அணை உடைந்ததே இந்த விபரீதத்திற்கு முதன்மையான காரணியாகும்.” என பதிவிட்டிருக்கிறார்,

காக்க வந்த கரைகள்... கழுத்தை நெரித்த கதை: `கோசி திட்டம்' ஒரு வரலாற்றுப் பிழையா?

இயற்கையின் மாபெரும் சக்திகளில் ஒன்றான ஆறுகள், சில சமயங்களில் தங்களின் வழக்கமான பாதையை விட்டு விலகி, திடீரென ஒரு புதிய வழியில் பயணிக்கத் தொடங்கும். புவியியலில் இந்த நிகழ்வு 'அவல்ஷன்' (Avulsion) என்று அ... மேலும் பார்க்க

மருதமலை: பிளாஸ்டிக் கழிவுகளால் மாசடைந்து வரும் குட்டை – நடவடிக்கை எடுக்குமா வனத்துறை?

கோவை மருதமலை அடிவாரப் பகுதியில் உள்ள குட்டை ஒன்று தற்போது பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் தேங்கிய நிலையில் காணப்படுகிறது. குட்டையின் நீர்ப்பரப்பில் ஏராளமான பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுக... மேலும் பார்க்க

கூடலூர்: யானைக் காட்டில் ஆட்கொல்லி புலியைத் தேடி அலையும் வனத்துறை! | Photo Album

ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை ஆட்கொல்லி புலியை பிட... மேலும் பார்க்க

பாண்டி மெரினா பின்னால் குவியும் குப்பைகள்... மாங்குரோவ் காடுகளை நோக்கி நகரும் கழிவுகள்!

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லும் இடங்களில் பாண்டி மெரினாவும் ஒன்று.ஆனால், இந்தப் பகுதியின் பின்புறம் சென்றால் நிலைமை சற்று மாறுபட்டதாக இருக்கிறது. உப்பளம் பகுதியில் இருந்து வரும... மேலும் பார்க்க

ஊசித்தோப்பு: `மனு மேல் மனு... தீர்வு மட்டும் இல்லை!'- போராடும் மக்களும் அதிகாரிகளின் விளக்கமும்!

“30 ஆண்டுகளாக மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை... இந்த முறையாவது தீர்வு கிடைக்குமா?” – அதிகாரிகளின் ஆய்வை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் வாணியம்பாடி ஊசித்தோப்பு கிராம மக்கள்.திருப்பத்தூர் மாவட்டம், வா... மேலும் பார்க்க