செய்திகள் :

"நாங்க பட்டாணி சாப்பிடவா வந்திருக்கோம்? வாங்க ராஜினாமா பண்ணுவோம்"- கொந்தளித்த சென்னை பாஜக கவுன்சிலர்

post image

சென்னை மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் 'கூண்டோடு ராஜினாமா செய்வோம்' எனப் பேச பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் அதை ஆதரித்து பேசினார்.

மாநகராட்சி கூட்டம்
மாநகராட்சி கூட்டம்

நேரமில்லா நேரத்தின்போது குறுக்கே எழுந்து பேசிய கவுன்சிலர் ராஜா அன்பழகன், "பருவமழை நெருங்கும் காலத்தில் மக்கள் பணிகளுக்கான நிதியை விடுவிக்காமல் இந்த அரசு வஞ்சிக்கிறது. திட்டங்களைச் செயல்படுத்தாமல் நாம் ஏன் இங்கே வர வேண்டும். திமுகவினர் அனைவரும் ராஜினாமா செய்வோம். மக்களோடு மக்களாக நின்று அவர்களுக்காகப் பணி செய்வது ஒன்றும் திமுகவினருக்குப் புதிதல்ல" என்றார்.

ராஜா அன்பழகனின் கருத்தை ஆமோதித்து பேசிய பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த், ''நாம் என்ன பட்டாணி சாப்பிடவா இங்கே வந்திருக்கிறோம்? நிதியை விடுவிக்கவில்லையென்றால் அனைவரும் ராஜினாமா செய்வோம். நாம் என்ன எம்.எல்.ஏக்களைப் போல இன்னோவா கார் கேட்டோமா? முதல்வரின் அறையில் அதிகாரிகளுக்கு முறையாக இடமில்லை என அமைச்சர் ஆதவ் கூறுகிறார். முதல்வரின் அறையைப் புதிய இடத்துக்கு மாற்றுகிறார்கள். அதற்கெல்லாம் பணம் இருக்கிறது. மக்கள் பணி செய்ய வார்டு மேம்பாட்டு நிதியை விடுவிக்க முடியாதா?'' என்றார்.

உமா ஆனந்த்
உமா ஆனந்த்

திமுக கவுன்சிலர்கள் நே.சிற்றரசு, ராஜன் போன்றோரும் நிதியை விடுவிக்க சொல்லி ராஜினாமா செய்வோம் எனப் பேசினர்.

கருப்புச் சட்டையில் திமுக கவுன்சிலர்கள்; முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதிய மேயர் பிரியா; விவரம் என்ன?

சென்னை மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டம் இன்று ரிப்பன் மாளிகையில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்துக்கு திமுக கவுன்சிலர்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்து தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.ம... மேலும் பார்க்க

‘ஒன்டாரியோ ஏரி’ இனி ‘அமெரிக்கா ஏரி’! - கனடாவை சீண்டும் ட்ரம்ப்; இந்தப் பெயர் மாற்றம் செல்லுமா?

தற்போது அமெரிக்காவிற்கும், கனடாவிற்கும் இடையே வர்த்தகப் போர் நடந்து வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பர வரி விதித்துள்ளன. இந்த நிலையில், இந்தப் பிரச்னையை இன்னும் பெரிதாக்கும் விதமாக, ஒன்டாரியோ ஏரியை ‘அமெரி... மேலும் பார்க்க

"பதிலுரைய நேற்றே ஆரம்பித்திருக்கணும்; இதில் பாட்டு வேற"- பாட்டு பாடிய TVK அமைச்சர்; கண்டித்த உதயநிதி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆக. 28) பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதி துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விவாதத்தின்போது பேசிய அமைச்சர் சம்பத்குமார... மேலும் பார்க்க

"மேகதாது அணை தமிழகத்திற்கே உதவும்; உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் காப்பாற்றுவேன்" - கர்நாடக முதல்வர்

கர்நாடகாவின் முதலமைச்சராக டி.கே.சிவகுமார் பதவியேற்ற பின், தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் மேகதாது அணைப் பிரச்னை மீண்டும் வெடித்துள்ளது. இந்த அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு கர்நாடகாவிலிருந்து வரும் தண்ண... மேலும் பார்க்க

'புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாதது ஏன்?’ - பேரவையில் முதல்வர் ரங்கசாமி கொடுத்த விளக்கம்

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதையொட்டி கவர்னர் உரை மீதான விவாதத்தில் பேசிய முதல்வர் ரங்கசாமி, ``புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வரு... மேலும் பார்க்க

கேள்விக்குறியாகும் இளைஞர்களின் எதிர்காலம்... நிதி ஆயோக்கின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

சமீபத்தில் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை, நம் இளைய தலைமுறை பற்றி உடனடியாக கவனம் செலுத்தவேண்டிய ஒரு கசப்பான உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது. ‘Reimagining Skills for Viksit Bharat @2047’ என்ற அந்த ... மேலும் பார்க்க