செய்திகள் :

கோவிந்தா... கோவிந்தா... கோஷங்களுக்கு நடுவே பரமபத வாசல் வழியே வந்த ஆண்டாள்

post image

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு குவிந்த பக்தர்கள். கோவிந்தா.. கோவிந்தா... கோஷங்களுக்கு நடுவே பரமபத வாசல் திறப்பு நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு நடைபெற்றது. கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர் என்று பெயர் பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர். இங்கு கோதையாகிய ஸ்ரீ ஆண்டாள் பிறந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூரத் தேரோட்டம் மிக முக்கியமான திருவிழா. அதற்கு அடுத்தபடியாக மார்கழி மாதம் தமிழ்த் திருவிழாவாகிய பகல் பத்து, இராப்பத்து மற்றும் ஆண்டாள் மார்கழி நீராட்டு (எண்ணெய்க் காப்பு) உற்சவம் ஆண்டுதோறும் இங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

சொர்க்கவாசல்

கடந்த 22ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி நேற்றுடன் பகல்பத்து உற்சவம் நிறைவடைந்தது. இராப்பத்து உற்சவத்தின் ஆரம்ப நாளான இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்களின் "கோவிந்தா... கோவிந்தா..." என்ற கோஷங்களோடு, ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் எதிர்கொண்டு அழைக்க, சொர்க்கவாசல் வழியாகப் பெரிய பெருமாள், அவரைத் தொடர்ந்து ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்தப் பரமபத வாசல் திறக்கப்படுவதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

இன்று திறக்கப்பட்ட இந்தப் பரமபத வாசல் வழியாக வருபவர்கள் வைகுண்டத்திற்குச் சென்று வருவதாக ஐதீகம். எனவே உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் ஆயிரக்கணக்கானோர் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர். ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த கோயிலாக ஸ்ரீ ஆண்டாள் கோயில் உள்ளதால், அங்கு சென்று தரிசனம் செய்ய முடியாதவர்கள் இங்கு சாமி தரிசனம் செய்தார்கள்.

சொர்க்கவாசல் திறப்பு

சொர்க்கவாசல் திறந்தவுடன் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் இன்று முதல் இராப்பத்து எனும் உற்சவம் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். வரும் ஜனவரி 8ஆம் தேதி தொடங்கி ஜனவரி 15ஆம் தேதி வரை முக்கிய நிகழ்வான மார்கழி நீராட்டு உற்சவம் எனப்படும் (எண்ணெய்க் காப்பு உற்சவம்) நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியைக் காண மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நடைபெற்ற பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 250க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

கோவிந்தா கோவிந்தா கோஷத்தில் சொர்க்கவாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்த சௌந்தரராஜப் பெருமாள்!

சொர்க்கவாசல் திறப்புசொர்க்கவாசல் திறப்புசொர்க்கவாசல் திறப்புசொர்க்கவாசல் திறப்புசொர்க்கவாசல் திறப்புசொர்க்கவாசல் திறப்புசொர்க்கவாசல் திறப்புசொர்க்கவாசல் திறப்புசொர்க்கவாசல் திறப்புசொர்க்கவாசல் திறப்பு... மேலும் பார்க்க

திருவள்ளூர், கேசாவரம் கயிலாச ஈஸ்வரமுடையார் : கூவம் ஆற்றின் உற்பத்தி தலத்தில் சோழர் காலக் கோயில்!

கூவம்... இன்று நதி அல்ல. சாக்கடைபோல மாறியிருக்கிறது. ஆனால் ஒரு காலத்தில் இது மக்கள் பயன்படுத்திய புனித நதி. இதன் கரைகளில் நாகரிகம் செழித்து விளங்கியது. அதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவை இதன் கரைகளில்... மேலும் பார்க்க

கடலூர் வளையன்மாதேவி வேதநாராயண பெருமாள் திருக்கோயில்: காதல், திருமணமாக முடிய அருளும் தலம்!

பகவான் விஷ்ணு எடுத்த தசாவதாரங்களோடு தொடர்புடைய தலங்கள் நம் தேசத்தில் அநேகம் உள்ளன. அவற்றில் சில முக்கியமான தலங்களை நாம் வழிபட்டு வருகிறோம். அப்படி ஓர் ஆலயம்தான் வளையமாதேவி வேதநாராயண பெருமாள் திருக்கோய... மேலும் பார்க்க

கோவை இடிகரை ஸ்ரீரங்கநாதர் கோயில்: நோய் தீர்க்கும் சடாரி; வரம் தரும் சத்தியநாராயண பூஜை!

பெருமாள் ஸ்ரீரங்கநாதராக சயனக் கோலத்தில் அருள்பாலிக்கும் திருத்தலங்கள் பல உள்ளன. அவற்றில் ஸ்ரீராமாநுஜர் வழிபட்ட தலங்கள் என்றால் மிகவும் சிறப்பினை உடையன. அப்படிப்பட்ட தலங்களில் ஒன்றுதான் இடிகரை.ஸ்ரீராமா... மேலும் பார்க்க

கரூர்: சோமூர் சோமேஸ்வரர் திருக்கோயில்; மனக்கவலைகள் தீர்க்கும் மகாதேவர் ஆலயம்!

நவகிரகங்களில் சந்திரன் மனதின் அதிபதி. மனதின் எண்ணங்களை, 'மதி' என்று அழைப்பதும் உண்டு. சந்திரனுக்கும் மதி என்ற பெயர் உண்டு. ஒருவனின் ஜாதகத்தில் சந்திரன் பலம் குன்றியிருந்தால் அவர் மனநலப் பிரச்னைகளால் ப... மேலும் பார்க்க

நாகை ஆயக்காரன்புலம் கலிதீர்த்த ஐயனார் கோயில்: வேண்டுதல் நிறைவேற்றும் கூத்து பிரார்த்தனை!

தமிழகத்தின் தொன்மையான வழிபாடுகளில் ஒன்று ஐய்யனார் வழிபாடு. ஐயனார் கோயில் இல்லாத ஊர் தமிழகத்தில் இல்லை என்று சொல்லலாம். எளிய மக்களின் தெய்வமாக தாய் தந்தையைப் போன்று தன் பக்தர்களைக் காக்கும் ஐயனாரை பக்த... மேலும் பார்க்க