செய்திகள் :

கோவையில் பாஜக மையக்குழு கூட்டம்: வானதி பகிர்ந்த `மெலோடி' ; அண்ணாமலை ஆதரவு போஸ்டர்களால் சலசலப்பு!

post image

கோவை மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள், மாநில அணி தலைவர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட 26 வேட்பாளர்களுடனான  ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

பா.ஜ.க தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழக பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர், முன்னாள் மாநில தலைவர் தமிழிசை, கரு.நாகராஜ், மாநில செயலாளர் அமர்பிரசாத் ரெட்டி, அனைத்து பிரிவு அமைப்பாளர் கே.டி.ராகவன், மாநில பொதுபொது செயலாளர் ராமசீனிவாசன், சிறுபான்மை பிரிவு பொறுப்பாளர் வேலூர்  இப்ராகிம், நடிகை கஸ்தூரி, செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், ஊட்டி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன், முன்னாள் எம்.எல்.ஏ காந்தி உட்பட 80 க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

பாஜக மையக்குழு கூட்டம்
பாஜக மையக்குழு கூட்டம்

சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்தும், தோல்விக்கான காரணங்கள் குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு  மெலோடி சாக்லேட் பரிசாக கொடுத்திருத்த  நிலையில், கோவையில் மாநில நிர்வாகிகள் கூட்டத்திற்கு வந்த வானதி சீனிவாசன், பா.ஜ.க தொண்டர்களுக்கு மெலோடி சாக்லேட்டை பகிர்ந்து கொடுத்து மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.

அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருக்கும் பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் கூட்டம் நடைபெறும் நாளில் நகரின் பல்வேறு பகுதிகளில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள், அவரது புகைப்படத்துடன் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

‘Fearless minds have no limits’ அதாவது, பயமறியாதவர்களுக்கு எல்லையே கிடையாது என்கிற வாசகத்துடன் அந்த  போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ‘Army of Dheeran Annamalai’ என்ற பெயரில் இந்த  போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்கள் பா.ஜக-வினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

'இதனால்தான் எல்லோரையும் அழைத்து தவெக அமைச்சர் பதவி கொடுக்கிறது' - பிரேமலதா சொல்வது என்ன?

காங்கிரஸ் ஏற்கெனவே த.வெ.க அமைச்சரவையில் இடம் பெற்ற நிலையில் விசிக, ஐயூஎம்எல் போன்ற கட்சிகளுக்கு அமைச்சரவையில் இணைய த.வெ.க சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் ஐயூஎம்எல் கட்சி தாங்கள் அ... மேலும் பார்க்க

``அனுதாப நாடகமா? நான் எளிமையானவன்; ஆனா ஏழை அல்ல.!" - செருப்பு அணியாத தவெக MLA சொல்லும் விளக்கம்

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.வி.குப்பம் தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ தென்றல் குமார் வேட்டி, சட்டை சகிதம் காலில் செருப்புக்கூட அணியாமல் எளிமையான தோற்றத்தில் வலம் வந்துகொண்டிருக்கிறார். பதவியேற்பின்போதும்,... மேலும் பார்க்க

’காங்கிரஸ் புறவாசல் வழியாக அமைச்சரவைக்குள் நுழைந்துள்ளது’– தமிழிசை செளந்தரராஜன் குற்றச்சாட்டு!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பா.ஜ.க மாவட்ட தலைமை அலுவலகத்தில், சட்டமன்றத் தேர்தல் தோல்வி தொடர்பான மையக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்,... மேலும் பார்க்க

கட்சியில் சேர்ந்த மூன்றே மாதத்தில் அமைச்சரை வீழ்த்தி அமைச்சரானார்! - யார் இந்த லோகேஷ் தமிழ்செல்வன்?

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் (தனி) தொகுதி த.வெ.க வேட்பாளராக களமிறங்கிய லோகேஷ் தமிழ்செல்வன், தி.மு.க அமைச்சர் மதிவேந்தனை தோற்கடித்து வெற்றி வாகைச் சூடினார். தமிழ்நாடு அரசின் பத்திரப்பதிவு மற்றும் வணிகவர... மேலும் பார்க்க

மருத்துவர் டு மந்திரியான ராஜீவ் - மீண்டும் முக்கியத்துவம் பெறும் திருவாடானை தொகுதி!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் ஆகிய 3 தொகுதிகளில் தி.மு.க வென்றது. எஞ்சிய திருவாடானை தொகுதியில் முதல் முறையாக தமிழ... மேலும் பார்க்க

திருநெல்வேலி: சுட்டிக்காட்டிய விகடன்; புத்துயிர் பெறும் ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடம்!

திருநெல்வேலி சந்திப்பிற்கு அருகிலிருக்கும் இரட்டை பாலத்திற்குக் கீழே ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடம் இருக்கிறது. இந்தச் சமுதாய நலக்கூடமானது கல்வெட்டு தகவலின்படி ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் 7.4.2002இல் த... மேலும் பார்க்க