செய்திகள் :

’காங்கிரஸ் புறவாசல் வழியாக அமைச்சரவைக்குள் நுழைந்துள்ளது’– தமிழிசை செளந்தரராஜன் குற்றச்சாட்டு!

post image

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பா.ஜ.க மாவட்ட தலைமை அலுவலகத்தில், சட்டமன்றத் தேர்தல் தோல்வி தொடர்பான மையக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தீய சக்தி தி.மு.க-வை எதிர்த்து அரசியல் செய்வதாக கூறிய தவெக, தீய சக்தியின் ஒரு பங்காக இருந்தவர்கள் உடன் சேர்ந்து ஆட்சி நடத்துகிறது. காங்கிரஸ் கட்சி புறவாயில் வழியாக அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களில் புறக்கணிக்கப்பட்டு, ஊழல் குற்றச்சாட்டுகள் சூழ்ந்த கட்சியாக உள்ளது. மாற்றத்தை கொண்டு வருவதாக கூறிய த.வெ.க, காங்கிரஸை வைத்து கொண்டு எப்படி மாற்றம் தரும்? காங்கிரஸ் தரும் அழுத்தத்திற்கு த.வெ.க இடம் தரக் கூடாது.

பாஜக கூட்டம்
பாஜக கூட்டம்

கடந்த தி.மு.க ஆட்சியில் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்ததால்தான் மக்கள் அக்கட்சியை புறக்கணித்தார்கள். பி.எம் ஶ்ரீ போன்ற மத்திய அரசின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைக்கு த.வெ.க ஆதரவு தர வேண்டும். வந்தே மாதரம் பாடல் சர்ச்சை தேவையில்லாதது. அப்பாடல் சுதந்திர உணர்வை தட்டி எழுப்பிய பாடல். இளைஞர்களுக்கு தேசபக்தி உணர்வை வளர்க்கும் நோக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதை மாநில அரசுகள் நிராகரிக்க முடியாது. இது மத்திய அரசின் தனிப்பட்ட உத்தரவு அல்ல, நாட்டின் நலனுக்கானது என்பதால் அதைப் பின்பற்றுவது கட்டாயம்.

அதேபோல, தி.மு.க. ஆட்சியில் சனாதனம், வந்தே மாதரம் போன்ற விஷயங்களை அரசியலாக்கினர். இது போன்ற உணர்ச்சிபூர்வமான அரசியலைத் தவிர்த்து ஆக்கப்பூர்வமான அரசியலுக்குத் திரும்ப வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணங்கள் குறித்து விமர்சனம் செய்யும் ராகுல் காந்திக்கு அதன் பின்னணி புரிதல் இல்லை. அந்த பயணங்கள் அனைத்தும் நாட்டின் நலனுக்கானவை. அவை சுற்றுலா இல்லை. தமிழகத்தில் 7 பட்டியலினத்தவருக்கு அமைச்சரவையில் இடமளித்து இருப்பது ஆரோக்கியமானது. அவர்கள் சிறப்பாக செயல்பட முதலமைச்சர் விஜய் வழிகாட்ட வேண்டும்” என்றார். பா.ஜ.க-வில் நிர்வாகிகள் மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்கு, அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

'இதனால்தான் எல்லோரையும் அழைத்து தவெக அமைச்சர் பதவி கொடுக்கிறது' - பிரேமலதா சொல்வது என்ன?

காங்கிரஸ் ஏற்கெனவே த.வெ.க அமைச்சரவையில் இடம் பெற்ற நிலையில் விசிக, ஐயூஎம்எல் போன்ற கட்சிகளுக்கு அமைச்சரவையில் இணைய த.வெ.க சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் ஐயூஎம்எல் கட்சி தாங்கள் அ... மேலும் பார்க்க

``அனுதாப நாடகமா? நான் எளிமையானவன்; ஆனா ஏழை அல்ல.!" - செருப்பு அணியாத தவெக MLA சொல்லும் விளக்கம்

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.வி.குப்பம் தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ தென்றல் குமார் வேட்டி, சட்டை சகிதம் காலில் செருப்புக்கூட அணியாமல் எளிமையான தோற்றத்தில் வலம் வந்துகொண்டிருக்கிறார். பதவியேற்பின்போதும்,... மேலும் பார்க்க

கட்சியில் சேர்ந்த மூன்றே மாதத்தில் அமைச்சரை வீழ்த்தி அமைச்சரானார்! - யார் இந்த லோகேஷ் தமிழ்செல்வன்?

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் (தனி) தொகுதி த.வெ.க வேட்பாளராக களமிறங்கிய லோகேஷ் தமிழ்செல்வன், தி.மு.க அமைச்சர் மதிவேந்தனை தோற்கடித்து வெற்றி வாகைச் சூடினார். தமிழ்நாடு அரசின் பத்திரப்பதிவு மற்றும் வணிகவர... மேலும் பார்க்க

கோவையில் பாஜக மையக்குழு கூட்டம்: வானதி பகிர்ந்த `மெலோடி' ; அண்ணாமலை ஆதரவு போஸ்டர்களால் சலசலப்பு!

கோவை மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள், மாநில அணி தலைவர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட 26 வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. பா.ஜ.க தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ்... மேலும் பார்க்க

மருத்துவர் டு மந்திரியான ராஜீவ் - மீண்டும் முக்கியத்துவம் பெறும் திருவாடானை தொகுதி!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் ஆகிய 3 தொகுதிகளில் தி.மு.க வென்றது. எஞ்சிய திருவாடானை தொகுதியில் முதல் முறையாக தமிழ... மேலும் பார்க்க

திருநெல்வேலி: சுட்டிக்காட்டிய விகடன்; புத்துயிர் பெறும் ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடம்!

திருநெல்வேலி சந்திப்பிற்கு அருகிலிருக்கும் இரட்டை பாலத்திற்குக் கீழே ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடம் இருக்கிறது. இந்தச் சமுதாய நலக்கூடமானது கல்வெட்டு தகவலின்படி ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் 7.4.2002இல் த... மேலும் பார்க்க