செய்திகள் :

மருத்துவர் டு மந்திரியான ராஜீவ் - மீண்டும் முக்கியத்துவம் பெறும் திருவாடானை தொகுதி!

post image

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் ஆகிய 3 தொகுதிகளில் தி.மு.க வென்றது. எஞ்சிய திருவாடானை தொகுதியில் முதல் முறையாக தமிழக வெற்றிக் கழக வேட்பாளரான வி.கே.ராஜீவ் வெற்றி பெற்றுள்ளார். ராஜீவ், நீண்ட பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமியின் மகன் கருமாணிக்கத்தை 2513 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று எம்.எல்.ஏ ஆனார்.

ராமநாதபுரத்தை சேர்ந்த மத்திய மாநில அரசு முதல் நிலை ஒப்பந்த நிறுவனமான வேலுமாணிக்கம் குழுமத்தின் பங்குதாரரான கதிரேசன் - விமலசுந்தரி தம்பதியரின் மகன் வி.கே.ராஜீவ். மருத்துவரான ராஜீவ், தமிழக வெற்றிக் கழகத்தின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளராக உள்ளார். இவருக்கு லாவண்யா என்ற மனைவியும், கிரிதின் அபிநவ் என்ற மகனும் உள்ளனர்.

வி.கே.ராஜீவ்
அமைச்சர் ராஜீவ்

சுதந்திர போராட்டத்தில் முதன்மையாக இடம்பிடித்த தியாகிகள் நிறைந்த தொகுதியாக திருவாடானை இருந்ததால் சுதந்திரத்திற்கு பின் நடந்த தேர்தல்கள் பெரும்பாலானவற்றில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே வெற்றி பெற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியம் கொன்ட கரியமாணிக்கம் அம்பலம், அவரது மகன் கே.ஆர்.ராமசாமி, இவரை தொடர்ந்து ராமசாமியின் மகன் கருமாணிக்கம் என பாரம்பரியமாக எம்.எல்.ஏ பதவி வகித்து வந்துள்ளனர்.

இந்நிலையில்தான் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கடும் போட்டிக்கு மத்தியில் காங்கிரஸ் வேட்பாளர் கருமாணிக்கத்தை வென்று முதல் முறையாக எம்.எல்.ஏ ஆனார் த.வெ.க-வின் ராஜீவ். இதனை தொடர்ந்து இன்று விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவையில் மருத்துவரான ராஜீவ் அமைச்சராகி உள்ளார். இவருக்கு சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 75 கால வரலாற்றில் திருவாடானை தொகுதியில் 2006-ம் ஆண்டு வென்ற தி.மு.க-வின் சுப.தங்கவேலனுக்கு பின் மருத்துவர் ராஜீவ் மந்திரியானதன் மூலம் திருவாடானை தொகுதி மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

திருநெல்வேலி: சுட்டிக்காட்டிய விகடன்; புத்துயிர் பெறும் ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடம்!

திருநெல்வேலி சந்திப்பிற்கு அருகிலிருக்கும் இரட்டை பாலத்திற்குக் கீழே ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடம் இருக்கிறது. இந்தச் சமுதாய நலக்கூடமானது கல்வெட்டு தகவலின்படி ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் 7.4.2002இல் த... மேலும் பார்க்க

TVK: தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெற்ற பெண் அமைச்சர்கள் - யாருக்கு என்ன துறை?

கடந்த 10-ஆம் தேதி தவெக தலைவர் விஜய்யுடன் 9 அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அந்தவகையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான... மேலும் பார்க்க

``நான் ஆசிரமத்துக்குப் போகிறேன்... இனி அங்குதான் இருப்பேன்!" - பிரசாந்த் கிஷோரின் அதிரடி முடிவு

தேர்தல் வியூகவகுப்பாளரும், ஜன சுராஜ் கட்சியின் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர், பாட்னாவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஓர் ஆசிரமத்திற்கு குடிபெயர்ந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.இது தொடர்பாக பீகாரில... மேலும் பார்க்க

அரக்கோணம் நகர்மன்ற கவுன்சிலர் டு தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சர்! - யார் இந்த காந்திராஜ்?

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஒரே தனித்தொகுதி அரக்கோணம். இந்தத் தொகுதியைக் கடந்த மூன்று சட்டமன்றத் தேர்தல்களாக அ.தி.மு.க தக்கவைத்துக்கொண்டிருந்தது. இந்த முறை அ.தி.மு.க-வை மூன்றாவது இடத்துக்குத் தள்ளி த... மேலும் பார்க்க

மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடம்; `முதல்வரிடம் பேசினோம்'- சிபிஎம் சண்முகம் விளக்கம்!

மே10-ம் தேதி முதல்வர் விஜய் பதவியேற்ற போது, தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் மூன்றாவதாக இசைக்கப்பட்டது சர்ச்சையானது. வழக்கமாக, தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து... மேலும் பார்க்க

CJP: ‘நாங்க கரப்பான்பூச்சி தான்’ - தெறிக்கவிடும் இளைஞர்கள்; ஆளும் கட்சியை அலறவிடும் புதுவித அரசியல்

‘இளைஞர்களின் சக்தியை குறைத்து மதிப்பிடாதீர்கள்!’ என்ற ஒற்றை முழக்கத்துடன், வெறும் நான்கு நாட்களில், உலகின் மிகப்பெரிய கட்சி என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஆளும் பா.ஜ.க-வையே இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவ... மேலும் பார்க்க