செய்திகள் :

கோவை : தொழிலதிபர் மாமனாரிடம் இருந்து 900 பவுன் நகைகளை திருடிய டாக்டர் மருமகன் – நடந்தது என்ன?

post image

கோவை கணபதிமாநகர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சண்முக பாண்டியன். இவரது மகள் கௌசல்யாவை பெரிய நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு 2024ம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளார். சண்முக பாண்டியன் விக்னேஷுக்கு கவுண்டம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு பணி வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் விக்னேஷ் அந்த பணியை ராஜினாமா செய்து விட்டு வேறு எந்த பணிக்கும் செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

அதே சமயம் விக்னேஷின் விக்னேஷின் தந்தை முருகேசன், தாயார் வாசுகி, சகோதரி ஜீவிதா ஆகியோர் மூவரும் காளப்பட்டி பகுதியில் உள்ள சண்முகபாண்டியனுக்கு சொந்தமான பங்களாவிற்கு குடிப்பெயர்ந்து வசித்து வந்துள்ளனர். சண்முகபாண்டியன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதால் பல்வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டி இருந்துள்ளது. இதனால் சண்முகபாண்டியன்  விக்னேஷிடம் லாக்கர் மற்றும் பீரோ சாவியை கொடுத்து நகைகளை பார்த்து கொள்ளும்படி கூறியுள்ளார். அதில் சுமார் 1000 பவுன் நகை இருந்ததாக கூறப்படுகிறது.

கோவை
கோவை

இதனிடையே விக்னேஷ் மற்றும் கெளசல்யாவிற்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், விக்னேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த பங்களாவில் இருந்து வேறு இல்லத்திற்கு குடிப்பெயர்ந்து சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து சண்முகபாண்டியன் லாக்கர் மற்றும் பீரோ சாவியை விக்னேஷிடம் கேட்டபோது, அதனை தருவதற்கு மறுத்து விட்டதாக தெரிகிறது. இதையடுத்து லாக்கரை உடைத்து பார்த்த போது அதில் இருந்த நகைகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இந்த நகைகளை கேட்டபோது 100 பவுன் நகைகளை மட்டுமே கொடுத்த நிலையில், 900 பவுன் நகைகளை திருப்பி கொடுக்காமல்  கொலை மிரட்டல் விடுத்ததாக சண்முகபாண்டியன் கோவை மாநகர குற்றப்பிரிவு போலிசில் புகார் அளித்தார். இதன்பேரில் விக்னேஷை போலீசார் கைது செய்தனர். மேலும் விக்னேஷின் தாயார் வாசுகி, சகோதரி ஜீவிதா ஆகியோரை தேடி வருகின்றனர்.

`ஜிம்மில் வந்து பார்' - மைனர் வீராங்கனை பாலியல் வன்கொடுமை; துரோணாச்சாரியா விருது பெற்ற கோச் கைது

மும்பை விலே பார்லேயை சேர்ந்த கணேஷ் தேவருக்கர் என்பவர் ஜிம்னாஸ்டிக் விளையாட்டு பயிற்சியாளராக இருக்கிறார். இவர் அங்குள்ள உடற்பயிற்சி மையம் ஒன்றில் இளம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஜிம்னாஸ்டிக் பயி... மேலும் பார்க்க

ஜெயிலில் ஸ்கெட்ச்; இன்ஸ்டாகிராமில் பிளான்! புதுக்கோட்டையில் சிக்கிய 'அமாவாசை' திருட்டுக் கும்பல்!

கோழி திருடன், ஆடு திருடனுடன் சிறையில் கூட்டணி சேர்ந்து இன்ஸ்டாகிராமில் பிளான் போட்டு, பகலில் பைக்குகளையும், அமாவாசை இரவுகளில் கோயில் உண்டியல்களையுன் கொள்ளையடித்து வந்த 3 பேர் கொண்ட கும்பலை, கடியையும் ... மேலும் பார்க்க

தருமபுரி: கயிற்றால் இறுக்கி, கல்லைக் கட்டி குட்டையில் வீச்சு; மாமியாரைக் கொன்ற மருமகனோடு ஐவர் கைது

."மாமியாரை காரில் கடத்திச் சென்று, கயிறால் கழுத்தை இறுக்கி கொன்று குவாரி, குட்டையில் போட்டு வந்தவனின் செயலை நினைத்தாலே குலை நடுங்குகிறது" என்கிறார்கள் வெங்கடசமுத்திரம் மக்கள்.குட்டையில் மிதந்த உடல்க்ர... மேலும் பார்க்க

குமரி: மாணவிக்கு முத்தம் கொடுத்து வீடியோ எடுத்த மாணவன்; ஆசிரியர்கள் கண்டித்ததால் தற்கொலை செய்தாரா?

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ரத்தினபுரம் பகுதியைச் சேர்ந்த விக்டர் தாமஸ் - லென்ஸி தம்பதியின் மகன் கவின் ஜெனில் (16). இவர் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு... மேலும் பார்க்க

சென்னை: பெண்ணின் உடல் பாகங்களை பிரியாணி போல சமைத்த தம்பதி - பூட்டிய வீட்டுக்குள் பேரதிர்ச்சி!

சென்னை சென்ட்ரலிருந்து கடந்த 5-ம் தேதி டெல்லி நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் ஆக்ரா ரயில் நிலையத்துக்குச் சென்ற போது முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டியிலிருந்து தூர்நாற்றம் வீசுவதாக பயணிகள் ரயில்வே ப... மேலும் பார்க்க

ஐபோன் EMI: மலையில் இருந்து குதித்த மகன்; காப்பாற்ற முயன்ற தந்தை உயிரிழப்பு - விபரீத முடிவெடுத்த தாய்

இன்றைய இளைய தலைமுறையிடம் மொபைல் போன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. போன் வாங்கிக்கொடுக்கவில்லையெனில் பிள்ளைகள் மிகவும் ஆக்ரோஷமாகிவிடும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில... மேலும் பார்க்க