செய்திகள் :

கோவை மாணவி பாலியல் வழக்கு: கொந்தளித்த பாஜக.. சூறையாடிய நாம் தமிழர்

post image

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,  “கோவை கல்லூரி மாணவியை 3 பேர் கொண்ட போதை கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

கோவை
கோவை

இது தமிழகத்தின் தற்போதைய கேவலமான ஆட்சியை காண்பிக்கிறது. இது திராவிட மாடல் ஆட்சியல்ல. பெண்களுக்கு எதிரான பாலியல் மாடல் ஆட்சி இது. பெண்கள் நடமாட பாதுகாப்பு இல்லை. இதைக் கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும்.” என்றார்.

சம்பவம் நடந்த இடத்தில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் நேரில் ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து கோவை தெற்கு தாலுகா ஆட்சியர் அலுவலகம் அருகே வானதி சீனிவாசன் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைகளில் பெப்பர் ஸ்ப்ரே, தீப்பந்தம் ஏந்தி பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும், திமுக அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நயினார் நாகேந்திரன
பாஜக

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், “காவல்துறை என்கவுன்டர் நடத்தி இந்த வழக்கை மூடி மறைக்கக் கூடாது. குற்றத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம்.

காவல்துறையின் செயல்பாடுகளில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆட்சியாளர்களுக்கு டிராமா போட நேரம் உள்ளது. பெண்களை பாதுகாக்க மட்டும் நேரம் இல்லை. மாதம் ரூ.1,000 கொடுத்தால் பெண்கள் உங்கள் பக்கம் நிற்க மாட்டார்கள். எஞ்சியுள்ள 4 மாதங்களிலாவது பெண்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்.” என்றார்.

சட்டவிரோத பார்

இதனிடையே சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகில் ஒரு சட்டவிரோத பார் இயங்கி வந்தது. அதை நாம் தமிழர் கட்சியினர் அடித்து நொறுக்கி, ஒருவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுக மற்றும் தவெக சார்பிலும் போராட்டம் நடைபெறவுள்ளது.

`உனக்காகத்தான் மனைவியை கொன்றேன்'- காதலிக்குத் தகவல் சொன்ன கணவன்

பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவர்களாகப் பணிபுரிந்து வந்தவர்கள் மகேந்திர ரெட்டி மற்றும் கிருத்திகா ரெட்டி. கணவன் மனைவியான இருவரும் கடந்த ஆண்டுதான் திருமணம் செய்து கொண்டனர். கடந்... மேலும் பார்க்க

புதுச்சேரி: `என் பொண்டாட்டியை கல்யாணம் பண்ணிக்க நினைச்சான்!’ - சோகத்தில் முடிந்த முறையற்ற காதல்

புதுச்சேரி வம்பாகீரப்பளையம் `பாண்டி மெரீனா’ செல்லும் சாலையில், நேற்று முன் தினம் இளைஞர் ஒருவர் படுகாயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அந... மேலும் பார்க்க

சிவகாசி: வீட்டில் பிரசவம் பார்த்த அசாம் தம்பதி; செவிலியரை இடைநீக்கம் செய்ய பரிந்துரை; என்ன நடந்தது?

சிவகாசியில் சாரதா நகர் பகுதியில் வசிப்பவர்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ஜூலில் - அஷ்மா காத்துன் தம்பதி. சிவகாசியில் உள்ள தனியார் தீப்பெட்டி ஆலையில் கூலி வேலை பார்த்து வரும் இவர்களுக்கு ஏற்கனவே... மேலும் பார்க்க

ஆதாரங்களை கையில் வைத்து சுற்றிய குற்றவாளிகள் - கோவை மாணவி வழக்கில் வெளியான புதிய தகவல்

கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர்களிடம், “கோவை விமான நிலையம் அருகே நடந்த பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ் (30), கார்த்திக் (21) இருவரும் சிவகங்கை மாவட்டம் சிங்கணம்புரி பகுத... மேலும் பார்க்க

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: நள்ளிரவு கிடைத்த தகவல்; சுட்டுப் பிடிக்கப்பட்ட 3 பேர்; என்ன நடந்தது?

கோவை விமான நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு 20 வயதான கல்லூரி மாணவியை, 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது. காரில் தன் நண்பருடன் அமர்ந்து பேசி வந்த மாணவிக்கு நடந்த கொடூரம் நாடு முழுவதும் ... மேலும் பார்க்க

கோவை டிரைவர் மாயமான வழக்கில் டிவிஸ்ட் - கொலை செய்து மறைத்த திமுக கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுமையா. இவருக்கு அலாவுதீன் என்ற கணவர் இருந்தார். டிரைவராக பணியாற்றி வந்த இவர், கடந்த 2024-ம் ஆண்டு மாயமாகியுள்ளார். இதுதொடர்பாக சுமையா காவல்நிலையத்த... மேலும் பார்க்க