செய்திகள் :

சபரிமலை: `தங்கம் கொள்ளை வழக்கில் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டதா?' - அமலாக்கத்துறை விசாரணை

post image

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் தங்கம் கொள்ளை வழக்கில் உபயதாரர் என அறியப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றி, சபரிமலை முன்னாள் அட்மினிஸ்டேட்டிவ் ஆபீசர் முராரி பாபு, சபரிமலை முன்னாள் எக்ஸ்கியூட்டிவ் ஆபீசர் சுதீஸ், திருவாபரணம் கமிஷனர் கே.எஸ்.பைஜூ, திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் ஆணையரும், தேவசம்போர்டு முன்னாள் தலைவருமான என்.வாசு மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் ஏ.பத்மகுமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் உள்ள தேவசம்போர்டு முன்னாள் செயலாளர் ஜெயஸ்ரீ மற்றும் முன்னாள் நிர்வாக அதிகாரி எஸ்.ஸ்ரீகுமார் ஆகியோரை விசாரணைக்கு அழைத்துள்ளது சிறப்பு விசாரணைக்குழு.

திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமார்
திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமார்

அவர்கள் முன் ஜாமின் கேட்டு ஐகோர்ட்டில் மனு அளித்தனர். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் ஜெயஸ்ரீ மற்றும் ஸ்ரீகுமார் ஆகியோர் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை சன்னிதானத்தில் உள்ள விலைமதிப்பற்ற பொருட்களிலிருந்து தங்கம் திருடப்பட்டதற்குப் பின்னால் ஒரு பெரிய சதி இருப்பதாகவும், உன்னிகிருஷ்ணன் போற்றியுடன் தொடர்புடைய இன்னும் பலர் வெளிச்சத்திற்கு வரவில்லை என்றும் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

இதற்கிடையே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் திருவாபரணம் ஆணையர் கே.எஸ்.பைஜூவின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க சபரிமலை தங்கக் கொள்ளையின் பின்னணியில் கருப்புப்பணம் வெள்ளையாக்கப்பட்டதா என்பதை விசாரிக்க தடையில்லை என கேரளா ஐகோர்ட் தேவசம் பெஞ்ச் கூறியிருந்தது.

இதையடுத்து விசாரணைக்கு களம் இறங்கிய அமலாக்கத்துறை, இந்த வழக்கின் ஆவணங்களைக் கோரி கொல்லம் விஜிலென்ஸ் நீதிமன்றத்தில் மனு அளித்து உள்ளது.

வழக்கில் எஃப்.ஐ.ஆர் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் அறிக்கையின் நகல் வேண்டும் எனவும் அமலாக்கத்துறை கோரியுள்ளது.

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்

தங்கம் கொள்ளை வழக்கில் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் குற்றச்சாட்டு உள்ளதால் அது குறித்து விசாரணை நடத்தவும், இந்த வழக்கில் எவ்வளவு பணம் கைமாறப்பட்டுள்ளது என்பது பற்றி விசாரிக்க உள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

அமலாக்கத்துறையின் மனு குறித்து டிசம்பர் 10-ம் தேதி விஜிலென்ஸ் நீதிமன்றம் பரிசீலிக்க உள்ளது.

பேரணாம்பட்டு: ஒரே இடத்தில் இறந்து அழுகி கிடந்த 3 காட்டு யானைகள் - தொடரும் உயிரிழப்பால் அதிர்ச்சி!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்துள்ள அரவட்லா மலையில் பாஸ்மார்பெண்டா சீத்தாம்மா காலடி என்ற இடத்தில், கடந்த மாதம் அழுகிய நிலையிலான 7 வயது ஆண் யானையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த ... மேலும் பார்க்க

ரவுடியை பிடிக்கச் சென்று மலை உச்சியில் சிக்கிய காவலர்கள்; நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்பு

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன்(30) இவன் கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு போன்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு பிரபல ரவுடியாக வலம் வந்துள்ளார். குறிப்பாக பாலமுர... மேலும் பார்க்க

குடும்பப் பிரச்னையைக் கண்டித்த தலைமைக் காவலர்; காவல் நிலையத்திற்குள் புகுந்து வெட்டிய கும்பல்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த பொத்தைப் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிபாண்டி. இவர், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளார்.குடு... மேலும் பார்க்க

ஈரோடு: மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு - விசாரணையில் வனத்துறை; நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே பர்கூர் கிழக்கு மலையில் உள்ள ஈரட்டி, கடை ஈரட்டி, ஒந்தனை உள்ளிட்ட வனப் பகுதிகளில் யானைகள், காட்டுப் பன்றி, சிறுத்தை என வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. இரவு நேரத்தில் உணவுதேட... மேலும் பார்க்க

காரியாபட்டி: ஒப்பந்ததாரருக்கு நிலுவைத் தொகை வழங்குவதற்கு லஞ்சம்; பேரூராட்சி பொறியாளர் கைது!

மதுரை செல்லூரைச் சேர்ந்த பழனி குமார், ஒப்பந்தக்காரராக உள்ளார். இவர் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் கடந்த 2022 ம் ஆண்டு ரூ. 1 கோடியே 38 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகனமேடை அமைப்பதற்கு ஒப்பந்தம்... மேலும் பார்க்க

புதுச்சேரி: அடுத்தடுத்து சிக்கும் போலி மருந்து தொழிற்சாலைகள்! - கோடிக்கணக்கில் நாடு முழுவதும் சப்ளை

முன்னணி நிறுவனங்களின் மருந்துகள் போலியாக தயாரிப்புஇந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான ‘சன் ஃபார்மா’, தங்களுடைய மருந்துகள் போலியாக உற்பத்தி செய்யப்படுகின்றன என்று புதுச்சேரி சி.பி.சி.ஐ.டியி... மேலும் பார்க்க