செய்திகள் :

சிக்கன் பிரியாணியுடன் படகில் சென்று கங்கை ஆற்றில் இப்தார் விருந்து! - போலீஸார் வழக்கு பதிவு

post image

கங்கை ஆற்றை இந்துக்கள் புனித நதியாக கருதுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் இந்துக்கள் இந்த கங்கை ஆற்றிற்கு வந்து புனித நீராடி செல்கின்றனர்.

இந்த கங்கை ஆற்றில் படகில் சிலர் இப்தார் பார்ட்டி நடத்துவதாக போலீஸாருக்கு புகார் வந்தது. பா.ஜ.க யுவ மோர்ச்சா தலைவர் ரஜத் ஜெய்ஸ்வால் இது தொடர்பாக போலீஸில் கொடுத்துள்ள புகாரில், ''சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களுக்கு கங்கை மிகுந்த மத முக்கியத்துவமானதாகவும், நம்பிக்கையின் மைய அடையாளமாக மதிக்கப்படுகிறது.

ஒவ்வொரு நாளும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆழ்ந்த நம்பிக்கையுடன் கங்கைக்கு வந்து புனித நீராடுகின்றனர். அதோடு சடங்குகள் செய்கின்றனர். அப்படிப்பட்ட கங்கை ஆற்றில் படகில் சென்று இப்தார் பார்ட்டி நடத்தி அதில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு இருக்கின்றனர்.

அதோடு பிரியானி கழுவுகளை கங்கை ஆற்றில் வீசி எறிந்துள்ளனர். இது இந்துக்களின் மத உணர்வை புண்படுத்துவதாக இருக்கிறது''என்று குறிப்பிட்டு இருந்தனர்.

அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து படகில் சென்று கங்கை ஆற்றில் இப்தார் விருந்து நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். இப்தார் விருந்தின் போது எடுக்கப்பட்ட காணொலியை அவர்கள் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த காணொலியின் அடிப்படையில் இப்தார் விருந்தில் கலந்து கொண்டவர்களை அடையாளம் கண்டுபிடித்து கைது செய்து இருப்பதாக வாரணாசி உதவி போலீஸ் கமிஷனர் விஜய் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.

ஆரம்பக்கட்ட விசாரணையில் அவர்கள் ரீல்ஸ் எடுப்பதற்காக இது போன்று படகில் சென்று விருந்து நடத்தியுள்ளனர் என்றும், உண்மையான நோக்கம் என்னவென்று கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரித்து வருவதாக அவர் தெரிவித்தார். 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். படகில் சென்றவர்கள் முதலில் நமாஸ் செய்தனர். அதன் பிறகு அவர்கள் சிக்கன் பிரியாணியை சாப்பிட்ட காணொலி சமூக வலைத்தள வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் அறிமுகப்படுத்துகிறது ஸ்வர்ண யுகாதி! - தங்கத்தின் பிரகாசமான புதிய தொடக்கம்!

1964 முதல் பாரம்பரியத்தில் வேரூன்றிய ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், தலைமுறைகளை கடந்து வந்த நம்பிக்கையின் சின்னமாக திகழ்கிறது. நுணுக்கமான கைவினைத் திறனும், நிலையான மதிப்புகளுக்கு காரணமாக புகழ்பெற்ற இந்த நிறுவனம்.... மேலும் பார்க்க

`உறுதிப்பத்திரம் கொடுத்தால்தான் அனுமதி' - கேதார்நாத் வரும் இந்து அல்லாதவர்களுக்கு புது கட்டுப்பாடு

இந்துக்களின் புனித இடங்களான கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்திற்கு வரும் இந்துக்கள் அல்லாத பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் புதிய நிபந்தனைகளை விதித்து இருக்கிறது. அதன்படி,இந்து அல்லாதவர்கள் பத்ரிநாத் மற்றும... மேலும் பார்க்க

விஐடி மொரீஷியஸ் சார்பில் தொழில்நுட்ப ஐடியாத்தான் போட்டி! - 5 நாடுகளை சேர்ந்த 1600 பேர் பங்கேற்பு

வேலூர் விஐடி மொரீஷியஸ் சார்பில் தொழில்நுட்ப ஐடியாத்தான் போட்டி இணையவழியில் நடத்தப்பட்டது.இந்த நிகழ்வு பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. இதில், உலகம் முழுவதும் இருந்... மேலும் பார்க்க

ரீல்ஸ் விபரீதம் : சொந்த தந்தையை சாக்குமூட்டையில் கட்டி கூரியரில் அனுப்ப முயன்ற பெண் - அதிர்ச்சி!

தமிழ் சினிமாவில் ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்களை சாக்குமூட்டையில் கட்டி கூரியரில் அனுப்ப முயன்றதை பார்த்திருப்போம். அது ஒரு காமெடி காட்சி. ஆனால் நிஜத்தில் ஒரு பெண் தனது தந்தையை அதேபோன்று கூரியரியில்... மேலும் பார்க்க

டெல்லி: துப்பாக்கியை வைத்து ரீல்ஸ்; நெஞ்சில் பாய்ந்த தோட்டா; மரணத்தில் முடிந்த வ்யூஸ் மோகம்

டெல்லியில் உள்ள தல்லுபுரா என்ற இடத்தில் வசித்து வந்தவர் பவன். இவர் தனது நண்பரிடம் இருந்த துப்பாக்கியைப் பயன்படுத்தி ரீல்ஸ் எடுக்க முடிவு செய்தார். இதற்காக பவன் துப்பாக்கியை கையில் எடுத்து அதற்கு தோட்ட... மேலும் பார்க்க

டைனோசர்களுக்கே சவால் விட்ட 'கடல் ராஜா'- உலகத்தையே அதிரவைத்த 11 வயது சிறுமியின் கண்டுபிடிப்பு!

சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, நிலத்தில் டைனோசர்கள் ராஜாவாக வலம் வந்தபோது, கடலில் அதைவிடப் பெரிய 'கடல் அசுரன்கள்' வாழ்ந்து வந்தன. காலப்போக்கில் மறைந்துபோன அந்த ராட்சத உயிரினத்தைப் பற்றிய ஒரு ரகசி... மேலும் பார்க்க