செய்திகள் :

`சில நாய்கள் விசுவாசமாக இல்லை' - பிரிந்துசென்ற எம்.பி.க்கள் மீது எம்.பி. சஞ்சய் ராவத் சாடல்

post image

மகாராஷ்டிராவில் சிவசேனா(உத்தவ்) கட்சியை சேர்ந்த 6 எம்.பி.க்கள் தங்களை தனி அணியாக அறிவிக்கவேண்டும் என்று கோரி மக்களவை சபாநாயகரிடம் மனு கொடுத்து இருக்கின்றனர். இதனிடையே அவர்கள் 6 பேரும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் சேர முடிவு செய்துள்ளனர். இதனால் உத்தவ் தாக்கரே கடும் அதிருப்தியில் இருக்கிறார்.

அவரது கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் இன்று காலை சமூக வலைத்தள பக்கத்தில் பிரிந்து சென்ற எம்.பி.க்களை கடுமையாக விமர்சித்து இருக்கிறார். அவர் தனது பதிவில், ``சிலர் நாய்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் விசுவாசமாக இல்லை''என்று குறிப்பிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

முன்னதாக அவர் அளித்த பேட்டியில், கட்சி கொறடாவின் உத்தரவை 6 எம்.பி.க்களும் மீறி இருக்கின்றனர். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை தொடங்கியுள்ளது.

கட்சி மாறிய எம்.பி.க்கள்

சிவசேனா தொண்டர்கள் என்று தங்களைக் கருதிக் கொண்டவர்கள் கோழைகள். சிவசேனா தொண்டர்கள் அவ்வளவு கோழைகள் அல்ல. இவர்கள் தங்களை சிவசேனா தொண்டர்களாக கருதுகிறார்கள். ஆனால் அவர்கள் ஜெய்ப்பூரில் மறைந்து கொண்டார்கள். அவர்களின் பதவியை பறிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது.

அவர்களை தகுதி நீக்கம் செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். மக்களவை சபாநாயகர் விதிகள், சட்டம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி செயல்பட்டால், இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். சிவசேனா 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

மேலும் பாலாசாகேப் தாக்கரேவின் பிறந்த நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. நாங்கள் எப்போதும் பாலாசாகேப் தாக்கரேயிடமிருந்து உத்வேகம் பெறுகிறோம். தீமை ஒழியும் வரை தொடர்ந்து போராடுவோம்" என்று அவர் கூறினார். சஞ்சய் ராவத் மீது ஏற்கனவே ஏக்நாத் ஷிண்டே கட்சியினர் கோபத்தில் இருக்கின்றனர். சஞ்சய் ராவத் தான் உத்தவ் தாக்கரேயின் கட்சியை நடத்துவதாக பரவலாக பேசப்படுகிறது.!

சட்டமன்றம்: அதிமுக வெளிநடப்பு; 'மீண்டும் நடுவர் மன்றம் ஏன்?' - தமிழக அரசுக்கு எடப்பாடி கேள்வி

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று (ஜூன்.22) தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியிருக்கிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்ப... மேலும் பார்க்க

ஒரு பக்கம் பேச்சுவார்த்தை, இன்னொரு பக்கம் மிரட்டல் - அமெரிக்காவின் முரண்; வெளியேறிய ஈரான்!

ஈரான், அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த புதன்கிழமை (ஜூன் 17, 2026) கையெழுத்திடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நேற்று ஸ்விட்சர்லாந்தில் அமெரிக்கா, ஈரான் இடையே நேற்று (ஜூன் 21, 2026) பேச்சுவார... மேலும் பார்க்க

'தண்ணீர் பாட்டிலா... டம்ளரா... எதை தூக்கி வீசலாம்?' - மாறி மாறி கலாய்த்த பிரேமலதா - ஓ.பி.எஸ்!

ஆளுநர் உரையின் மீதான விவாதம் சட்டமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதாவும் திமுக எம்.எல்.ஏ ஓ.பி.எஸ்ஸூம் மாறி மாறி கிண்டலாக பேசிக் கொண்ட சம்பவம் அவையில் கலகலப்பூட்டியது.பிரேமலதா ... மேலும் பார்க்க

பிரேமலதா வைத்த கோரிக்கை; ஓபிஎஸ் சொன்ன பதில்; சட்டமன்றத்தில் கலகல; என்ன நடந்தது?

சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், "முதல்வர் விஜய்க்கு உங்கள் அண்ணன் கேப்டன் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள். சட்டமன்றத்தில்... மேலும் பார்க்க

`இணைந்தும், இணையாமலும்.!' - வெளிநடப்பு செய்த அதிமுகவினர்; உள்ளே வேலுமணி - வெளியே எடப்பாடி!

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று (ஜூன்.22) தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியிருக்கிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தற்போது சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விவ... மேலும் பார்க்க

`வசூல், பஞ்சாயத்துனு கும்பலா கிளம்பியிருக்காங்க, ஆனா எங்க ஆளுங்க இல்ல!' - சிங்காநல்லூர் தவெக MLA

நாகர்கோவிலைச் சேர்ந்தவர் தொழிலதிபர் அமர்நாத். தாது மணலை பிரிக்கும் இயந்திரம் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர், தன்னிடமிருந்து இருபது லட்ச ரூபாயை ஏமாற்றும் நோக்கில் செயல்படும் இரண்டு பேருக... மேலும் பார்க்க