செய்திகள் :

ஒரு பக்கம் பேச்சுவார்த்தை, இன்னொரு பக்கம் மிரட்டல் - அமெரிக்காவின் முரண்; வெளியேறிய ஈரான்!

post image

ஈரான், அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த புதன்கிழமை (ஜூன் 17, 2026) கையெழுத்திடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, நேற்று ஸ்விட்சர்லாந்தில் அமெரிக்கா, ஈரான் இடையே நேற்று (ஜூன் 21, 2026) பேச்சுவார்த்தை நடந்தது.

லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலால் தற்போது ஹார்முஸ் நீர்ச்சந்தியை மூடிவிட்டது. இந்த நிலையில் தான், தற்போது அமெரிக்கா ஈரான் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அமெரிக்கக் குழுவிற்கு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமை தாங்கினார்.

ஈரான் குழுவிற்கு தலைவர் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் ஆவார். இவருடன் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சியும் சென்றிருந்தார். இந்த இரு குழுக்களுக்கு மத்தியஸ்தராக பாகிஸ்தான் திகழ்ந்தது.

காலிபாஃப்
காலிபாஃப்
இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின், ஈரான், பாகிஸ்தான் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளன. அதன் முக்கிய புள்ளிகள்...

> இந்த 'லூசெர்ன் ஏரி உச்சிமாநாடு' மிகவும் சுமுகமான மற்றும் ஆக்கப்பூர்வமான சூழலில் நடைபெற்றது.

> இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், பேச்சுவார்த்தைகளை அரசியல் ரீதியாகக் கண்காணிப்பதற்காக ஒரு 'உயர்மட்டக் குழுவை' அமைக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.

> அடுத்த 60 நாள்களுக்குள் ஒரு இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான ஒரு ரோட்மேப்பை இந்த உயர்மட்டக் குழு ஏற்கும்

> ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாக வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதை உறுதிசெய்யும் நோக்கில்... தேவையற்ற அசம்பாவிதங்களையும், தவறான புரிதல்களையும் தவிர்க்கும் விதமாக ஒரு தொடர்புப் பாதையும் உருவாக்கப்பட்டுள்ளது.

> லெபனானில் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதை உறுதி செய்ய... பேச்சுவார்த்தை நடத்தும் இரு தரப்புக்கும், லெபனான் குடியரசுக்கும் இடையே மத்தியஸ்தர்களின் உதவியோடு ஒரு 'மோதல் தவிர்ப்புப் பிரிவு' ஒன்றை உருவாக்கவும் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

> அனைத்துப் பிரச்னைகள் குறித்தான இந்தத் தொழில்நுட்பப் பேச்சுவார்த்தைகள் இந்த வாரத்தின் எஞ்சிய நாட்களிலும் பர்கன்ஸ்டாக் ரிசார்ட்டில் தொடரும்.

ஆனால், இந்தப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த போது, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஒரு செயல், பேச்சுவார்த்தை நடக்கும் இடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில்...

"ஈரான், லெபனானில் தங்களால் அதிகப் பணம் கொடுத்து இயக்கப்படும் தங்களது இயக்கங்களை, உடனடியாக வம்புகளைத் தூண்டுவதை நிறுத்தச் செய்ய வேண்டும். அவர்கள் இதைச் செய்யாவிட்டால், கடந்த வாரம் நாம் ஈரானைத் தாக்கியதை விடவும்... இன்னும் மிகக் கொடூரமாக அவர்கள் மீது மீண்டும் ஒருமுறை தாக்குதல் நடத்துவோம்!!!" என்று பதிவிட்டார்.

மேலும், ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு கொடுத்த தொலைபேசி பேட்டியில், "ஹார்முஸை நீங்கள் மூடினால், உங்களுடைய நாடு இருக்காது" போன்று பேசியிருந்தார் ட்ரம்ப்.

அமெரிக்காவின் ட்ரம்ப் ஒரு பக்கம் ஈரானுக்கு எதிரான பேச்சுகளையும், பதிவையும் வெளியிட்டுக் கொண்டிருக்க, ஸ்விட்சர்லாந்தில் ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தது.

ட்ரம்பின் இந்தச் செயல்கள் குறித்த தகவல் கிடைத்ததுமே, ஈரான் குழு புகைப்படத்திற்கு நிற்காமல் உடனடியாக அந்த இடத்தில் இருந்து கிளம்பிவிட்டனர்.

அவர்கள் கிளம்பினாலும், இந்த வாரம் முழுவதும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கும்... அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்று கூறப்படுகிறது.

ஒரு பக்கம் பேச்சுவார்த்தை, இன்னொரு பக்கம் மிரட்டல் என்கிற அமெரிக்காவின் நிலைப்பாடு, இந்தப் பேச்சுவார்த்தையை இன்னும் கடினமாக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

"உடன் பிறப்புகளின் வாக்குகளைப் பெற்று எங்களின் தயவில் தான் இந்த அரசு.!'- உதயநிதி ஸ்டாலின் உரை

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று (ஜூன்.22) தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியிருக்கிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தற்போது சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந... மேலும் பார்க்க

சட்டமன்றம்: அதிமுக வெளிநடப்பு; 'மீண்டும் நடுவர் மன்றம் ஏன்?' - தமிழக அரசுக்கு எடப்பாடி கேள்வி

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று (ஜூன்.22) தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியிருக்கிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்ப... மேலும் பார்க்க

'தண்ணீர் பாட்டிலா... டம்ளரா... எதை தூக்கி வீசலாம்?' - மாறி மாறி கலாய்த்த பிரேமலதா - ஓ.பி.எஸ்!

ஆளுநர் உரையின் மீதான விவாதம் சட்டமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதாவும் திமுக எம்.எல்.ஏ ஓ.பி.எஸ்ஸூம் மாறி மாறி கிண்டலாக பேசிக் கொண்ட சம்பவம் அவையில் கலகலப்பூட்டியது.பிரேமலதா ... மேலும் பார்க்க

பிரேமலதா வைத்த கோரிக்கை; ஓபிஎஸ் சொன்ன பதில்; சட்டமன்றத்தில் கலகல; என்ன நடந்தது?

சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், "முதல்வர் விஜய்க்கு உங்கள் அண்ணன் கேப்டன் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள். சட்டமன்றத்தில்... மேலும் பார்க்க

`இணைந்தும், இணையாமலும்.!' - வெளிநடப்பு செய்த அதிமுகவினர்; உள்ளே வேலுமணி - வெளியே எடப்பாடி!

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று (ஜூன்.22) தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியிருக்கிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தற்போது சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விவ... மேலும் பார்க்க

`வசூல், பஞ்சாயத்துனு கும்பலா கிளம்பியிருக்காங்க, ஆனா எங்க ஆளுங்க இல்ல!' - சிங்காநல்லூர் தவெக MLA

நாகர்கோவிலைச் சேர்ந்தவர் தொழிலதிபர் அமர்நாத். தாது மணலை பிரிக்கும் இயந்திரம் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர், தன்னிடமிருந்து இருபது லட்ச ரூபாயை ஏமாற்றும் நோக்கில் செயல்படும் இரண்டு பேருக... மேலும் பார்க்க