செய்திகள் :

சிவகாசி: பெண்ணிடம் நகை, பணம் மோசடி; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு சிறை!

post image

விருதுநகர் மாவட்டம், சிவகாசி போலீஸ் காலனியைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி மீனாட்சி. பழனியப்பன் உடல்நலக்குறைவால் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது மனைவி மீனாட்சிக்கு இன்சூரன்ஸ் தொகை கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மீனாட்சி அதற்கான சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

சிவகாசி

இந்த நிலையில், அவரது வீட்டின் அருகில் வசித்து வந்த கார்த்தீஸ்வரி என்பவர், மீனாட்சியிடம் நகை மற்றும் பணம் வாங்கியுள்ளார். இதன் மொத்த மதிப்பு ரூ.4 லட்சத்து 87 ஆயிரம் எனக் கூறப்படுகிறது. இந்த பணத்தை தெரிந்தவர்களுக்கு வட்டிக்கு கொடுத்து அதில் கிடைக்கும் வட்டித்தொகையை மீனாட்சியிடம் தந்துவிடுவதாக கார்த்தீஸ்வரி கூறியுள்ளார். ஆனால், வட்டிப்பணம் எதுவும் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த மோசடிக்கு அவரது கணவர் கோவிந்தராஜ் மகன்கள் கணேஷ் பாண்டி, சக்தி பாண்டி ஆகியோரும் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அவர்களிடம் பலமுறை பணம் கேட்டும் உரிய பதில் அளிக்காத நிலையில், சிவகாசி டவுண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

சிவகாசி நீதிமன்றம்

இந்த வழக்கு சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்துள்ளது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சுனில்ராஜா மீனாட்சியிடம் பணம், நகைகளை பெற்று மோசடி செய்ததாக கார்த்தீஸ்வரிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், அவரது கணவர் கோவிந்தராஜ் மற்றும் இரு மகன்கள் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.  

நெல்லை: விஷம் வைத்து கொல்லப்பட்ட 3 வளர்ப்பு நாய்கள்; நாய் உடலுடன் எஸ்.பி அலுவலகம் வந்த நபர்

நெல்லை மாவட்டம், உகந்தான்பட்டியைச் சேர்ந்தவர் துரை. இவர் தனது வீட்டுக்காவலுக்காக 3 சிப்பிப்பாறை நாய்கள் உட்பட 5 நாய்களை வளர்த்து வந்தார். இதில் சிப்பிப்பாறை நாய்கள் ஒவ்வொன்றும் சுமார் ரூ.20 ஆயிரம் முத... மேலும் பார்க்க

திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலில் வைரநாமம், தங்கம் கொள்ளை? - உளவுத்துறை அதிர்ச்சி தகவல்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலின் கருவறைக்குள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டிய, வைரம் பதிக்கப்பட்ட விலைமதிப்பற்ற ஆபரணமான 'வைரநாமம்' திருடப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

`அவளை பிடிக்கவில்லை' - மனைவியை ரூ.1.5 லட்சத்துக்கு விற்று கூட்டுபாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கணவன்

குஜராத் மாநிலம் பனஸ்காந்தா மாவட்டம் பாலன்பூரில் வசித்து வருபவர் நிகேஷ் பட்டேல். இவர் தனது 26 வயது மனைவி வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு சென்றுவிட்டதாக கூறி காணவில்லை எனக்கூறி போலீஸில் புகார... மேலும் பார்க்க

புனே: குடிபோதையில் கார் ஏற்றி இருவரைக் கொன்ற சிறுவன்; மகனின் ஜாமீனை ஆடிப்பாடி கொண்டாடிய தந்தை

புனேயில் கடந்த 2024ம் ஆண்டு இரவில் தேநீர் அருந்த வெளியில் வந்த ஒரு பெண் உட்பட இரண்டு எஞ்சினியர்களை மைனர் வாலிபர் ஒருவர் குடிபோதையில் கார் ஏற்றிக் கொன்றார். இக்கொலை சம்பவம் பெரிய அளவில் பேசப்பட்டது. மை... மேலும் பார்க்க

வாணியம்பாடி: திருநங்கையைத் தாக்கிய இளைஞன் கைது; ஓராண்டு திருமண வாழ்க்கை; ஊர் சுற்ற பைக்

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி ஜாப்ராபாத் பகுதியைச் சேர்ந்த 24 வயதாகும் திருநங்கை பூமிகா. இவரும், கோனாமேடு பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞன் வல்லரசு என்பவரும் காதலித்து, ஓராண்டுக்கு முன்பு த... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: ”காதலிக்க மறுத்த நர்சிங் மாணவி”- சக மாணவன் டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்ட சோகம்!

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான மாணவி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் நான்காம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். இவர் தனியார் விடுதியில் தங்கியிருந்தார். இதே கல்லூரியில் தஞ்சாவூர் மாவட்டம் தோட்டக்... மேலும் பார்க்க