செய்திகள் :

செல்போன் வெடித்து 27 பேர் பலியானதாக பரவும் ஆடியோ - எச்சரித்த தூத்துக்குடி போலீஸார்!

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுமார் 17 விநாடிகள் மட்டுமே ஒரு சிறுவன் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியும் வேகமாக பகிரப்பட்டும் வருகிறது. அதில் பேசும் சிறுவன், “தூத்துக்குடியில் இருந்து பேசுவதாகவும் கஸ்டமர் கேர் நம்பர் போன்று 5, 6 இலக்கங்கள் கொண்ட எண்களில் இருந்து அழைப்புகள் வருவதாகவும் அதனை அட்டன்ட் செய்தவுடன் மொபைல் போன் வெடித்து விடுவதாகவும், தூத்துக்குடியில் இவ்வாறு 27 பேர் இறந்துவிட்டதாகவும் பேசியுள்ளார்.

மாவட்ட காவல் அலுவலகம்

இதன் தொடர்ச்சியாக அடுத்ததாக 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க ஒருவரும் 57 விநாடிகள் இதே போன்று பரபரப்பாக பேசும் ஆடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. இதுபோன்று மக்கள் மத்தியில் பீதியை கிளப்ப வேண்டும், பரபரப்பினை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் இதுபோன்ற கும்பல்களை கண்டறிந்து போலீஸார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஆடியோ குறித்து சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். ”தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்ற எந்தவிதமான அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. இது பழைய வாட்ஸ்அப் ஆடியோ. தற்போது மீண்டும் பரப்பப்பட்டு வருகிறது எனத் தெரிய வந்துள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம்.

மாவட்ட காவல் அலுவலகம்

இந்த ஆடியோவை யாருக்கும் பகிர வேண்டாம். இதுபோன்று பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலோ அல்லது அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலோ வாட்ஸ் அப்பில் தவறான தகவல்களை பரப்புவது தவறு. இவ்வாறு தவறான தகவல் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என தூத்துக்குடி சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.         

புதுக்கோட்டை: பசியில் போலி டோக்கன் கொடுத்த பெண் தாக்கப்பட்டாரா? சர்ச்சை வீடியோவின் பின்னணி என்ன?

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த ரஹ்மத்துல்லா என்பவரின் மனைவி ஜெரினா ( வயது: 50 ). அம்மாபட்டினத்தில் உள்ள பள்ளிவாசலில் மெகராஜ் இஸ்லாமிய விழாவிற்காக டோக்கன் கொடுத்து உணவு வழங்கப்பட்ட... மேலும் பார்க்க

மும்பை கட்டடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியது ஏன்? - பாலிவுட் நடிகர் கமால் கானிடம் போலீஸார் விசாரணை!

பாலிவுட் நடிகர் கமால் கான் மும்பை லோகண்ட்வாலா பகுதியில் வசித்து வருகிறார். அவர் வசித்து வந்த பங்களாவிற்கு அருகில் உள்ள நாலந்தா கட்டடத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டத... மேலும் பார்க்க

சத்தீஷ்கர்: ஒரே இரவில் மாயமான இரும்பு பாலம் - 5 பேர் கைது; மூளையாக செயல்பட்ட பழைய இரும்பு வியாபாரி!

இந்தியாவில் அவ்வப்போது இரும்பால் கட்டப்பட்ட பாலங்கள் காணாமல் போய்விடுகிறது. இதற்கு முன்பு பீகாரில் ஷெட்டில் நிறுத்தி இருந்த ரயிலைக்கூட ஒவ்வொரு பகுதியாக கழற்றி எடுத்துச்சென்று விற்பனை செய்துள்ளனர். இப்... மேலும் பார்க்க

சேலம்: ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை; கைதுசெய்யப்பட்ட முதியவர்!

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி அதிவிரைவு ரயில் நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலின் முன்பதிவுப் பெட்டியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் பயணம் செய்தார். அந்த ரயில் நேற்று... மேலும் பார்க்க

சென்னை: திமுக முன்னாள் எம்.பி-யின் காரை சேதபடுத்திய வழக்கு - தலைமறைவான அதிமுக நிர்வாகி!

சென்னை வேளச்சேரி செக் போஸ்ட் நேரு நகரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரன். இவர் தி.நகர் ஹபிபுல்லா சாலையில் தி.மு.க-வின் முன்னாள் எம்.பி ஜெயதுரைக்குச் சொந்தமான ஆயுர்வேத மருத்துவமனையில் மேலாளராகப் பணியாற்றி வருகிற... மேலும் பார்க்க

குடிபோதையில் விழுந்த கணவன்; காய்கறி வெட்டிய கத்தியுடன் பிடித்த மனைவி - டெல்லியில் சோகம்

டெல்லி அருகில் உள்ள குருகிராம் என்ற இடத்தில் வசித்து வந்தவர் சுனில் குமார். கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்று தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். சுனில் குமார் மனைவி மம்தா. சுனில் குமார் வழக்... மேலும் பார்க்க