செய்திகள் :

'சொந்த மைதானத்தில் ஆர்.சி.பியை எதிர்கொள்வதில் மகிழ்ச்சி!' - இறுதிப்போட்டி குறித்து கில்

post image

ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக குஜராத் அணி இறுதி போட்டியை எட்டியுள்ளது. நாளை (மே31)அகமதாபாத் மைதானத்தில் பெங்களூரு அணியை எதிர்கொள்ள உள்ளது.

நேற்று நடந்த குவாலிஃபையர் 2 போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 214 ரன்கள் எடுத்தது. இதனை விரட்டி களமிறங்கிய குஜராத் அணி வீரர்கள் இந்த ஸ்கோரை 19வது ஓவரிலேயே எட்டி வெற்றி பெற்றனர். இதன் மூலம் தனது மூன்றாவது பைனலில் கால் பதித்துள்ளது குஜராத் அணி.

கில்
கில்

இந்த போட்டிக்கு பின்னர் பேசிய அணியின் கேப்டன் சுப்மன் கில்,

"டாஸ் போடும்போது சில குழப்பங்கள் இருந்தன. இருந்தாலும் இந்த வெற்றியைப் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கும் சாய் சுதர்சனுக்குமான கூட்டணி மிகவும் நன்றாகப் பொருந்திப் போகிறது. நாங்கள் ஒருவருக்கொருவர் ஆட்டத்தை மிக நன்றாகப் புரிந்து வைத்துள்ளோம்.

களத்தில் பேட்டிங் செய்யும்போது எங்களுக்குள் இருக்கும் கம்யூனிகேஷன் மிகவும் சிறப்பாக இருக்கும்.

சாய் சுதர்சன் ‘ஹிட்-விக்கெட்’ ஆன விதம் விசித்திரமானது. அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாக இப்படி யாரும் பார்த்திருக்க முடியாது. சமூக வலைத்தளங்களில் அவர் தன் கையில் டேப் ஒட்டியிருந்த வீடியோவைப் பார்த்தேன். அடுத்த போட்டியில் நானும் அதைச் செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.

கில்
கில்

இன்று நான் மிகவும் அமைதியாக, ஒரு தனி மனநிலைக்குள் இருந்தேன். பந்துவீச்சாளர்களை மட்டுமே கவனித்து, பந்து விழும் இடத்திற்குத் தகுந்தபடி விளையாடினேன். ஃபார்மில் இருக்கும்போது களமே கண்ணில் தெரியும், பந்து பேட்டின் நடுவில் சரியாகப் படும்.

எதிரணியை 180–190 ரன்களுக்குள் கட்டுப்படுத்த நினைத்தோம். ஆனால் அவர்கள் 214 ரன்கள் எடுத்துவிட்டனர். நல்ல தொடக்கம் கிடைத்ததும் போட்டியை நானே முடிக்க நினைத்தேன். ஆனால் நான் அவுட் ஆன விதம் வருத்தமளிக்கிறது.

சொந்த மைதானத்தில் ஃபைனல் விளையாடப் போகும் உணர்வு சிறப்பாக உள்ளது. போட்டியின் முக்கியத்துவத்தைத் தலைக்கு ஏற்றிக்கொள்ளாமல், கணக்குகளைத் தள்ளிவைத்துவிட்டு, பதற்றமின்றி நம் இயல்பான கிரிக்கெட்டை விளையாடினாலே மிகச்சிறந்த ஆட்டம் வெளிப்படும். அதன் பிறகும் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை," என்று நம்பிக்கையுடன் பேசியிருந்தார்.

RR: கேப்டன் பராக் பேச்சால் சலசலப்பு? 'அது அவர் கருத்து, எங்கள் நோக்கமல்ல!' - சங்கக்காரா தடாலடி

ஐபிஎல் தொடரில் குவாலிஃபயர் 2 வரை முன்னேறி அசத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், கேப்டன் ரியான் பராக் பேசிய கருத்து ஒன்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. "நாங்கள் பிளேஆஃப் சுற்றுக்கு வருவோம் என எதிர்பார்க்கப்... மேலும் பார்க்க

'சூர்யவன்ஷி ஒரு நாள் எங்களுக்காக கோப்பையை ஜெயிச்சு கொடுப்பான்!' - ரியான் பராக் நம்பிக்கை

ஐபிஎல் 2026-ன் நேற்றைய(மே 29) குவாலிபையர் 2 போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த விறுவிறுப்பான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில... மேலும் பார்க்க

'சூர்யவன்ஷியின் போராட்டம் வீண்; தட்டித் தூக்கிய குஜராத் டைட்டன்ஸ்! - எப்படி வென்றது கில் & கோ?

குவாலிஃபயர் - 2 இல் ராஜஸ்தான் ராயல்ஸை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருக்கிறது குஜராத் டைட்டன்ஸ். குஜராத் டைட்டன்ஸுக்கும் ராஜஸ்தான் ராயல்ஸுக்கும் இந்த சீசனில் ... மேலும் பார்க்க

RCB: "Data குழு தரும் சிறிய தகவல்கள் மிகவும் உதவியாக இருக்கின்றன" - புவனேஷ்வர் குமார் புகழாரம்

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றதன் மூலம், 5வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பந்துவீச்சாளர் புவனேஸ்வ... மேலும் பார்க்க

RCB: 'PowerPlay விக்கெட்கள், ஷெப்பர்ட்டின் Impact, நல்ல பவுன்ஸ்' - வெற்றி குறித்து கேப்டன் பட்டிதார்

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் பெங்களூரு - குஜராத் அணிகள் மோதியிருந்தன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குச் செல்லும். தோல்வியைச் சந்திக்கும் அணி, எலிமினேட்... மேலும் பார்க்க

'சாய் சுதர்சன் மட்டும் நின்னுருந்தா சீனே வேற..!' - குஜராத் கேப்டன் சுப்மன் கில்

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் பெங்களூரு vs குஜராத் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 255 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்த இமாலய இலக்கை நோக்கி களமிற... மேலும் பார்க்க