செய்திகள் :

டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்! சாதனை படைத்த ரஷீத்கான்!

post image

டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ரஷீத்கான் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான், ஐபிஎல், பிபிஎல், சிபிஎல், பிக்-பாஸ் உள்ளிட்ட அனைத்து டி20 லீக் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் டுவைன் பிராவோவை முந்தி டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.

தென்னப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் போட்டியில் ரஷீத் கான் இந்தச் சாதனையை நிகழ்த்தினார். இந்தப் போட்டியின் போது, ​​ரஷீத் கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையும் படிக்க |கம்மின்ஸ் காயம்: சாம்பியன்ஸ் டிராபி ஆஸி. அணியின் புதிய கேப்டன் யார்?

இதுவரை 461 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரஷீத் கான் 633* விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில், நான்கு முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் பல அணிகளுக்காக விளையாடியுள்ள பிராவோவின் 18 ஆண்டுகால டி20 கிரிக்கெட் வாழ்க்கையில் 631 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் அவரது டி20 கிரிக்கெட் வாழ்க்கையில் 3 முறை ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் சுழற்பந்து வீச்சாளரும் ஆல்ரவுண்டருமான சுனில் நரைன் (574 விக்கெட்டுகள் 536 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் 428 போட்டிகளில் 531 விக்கெட்டுகளும், வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் (444 போட்டிகளில் 492 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.

26 வயதான ரஷீத் கான் இதே ஃபார்மில் விளையாடும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற புதிய சாதனையும் படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க |வருண் சக்கரவர்த்திக்கு எதிராக இங்கிலாந்து சிறப்பாக செயல்படும்: கெவின் பீட்டர்சன்

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததா? மாணவர்களே எச்சரிக்கை

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த 15ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.பொதுவாகவே பொதுத் தேர்வுகள் என்றாலே பதற்றமாகத்தான்... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டால் கத்தக்கூடாது! தப்புவது எப்படி?

பொதுவாக விபத்துகளின்போதுதான் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாவார்கள். ஆனால், தற்போது சாலை விபத்துகளைப் போலவே கூட்ட நெரிசலும் அதிகரித்து, அதனால் உயிரிழப்புகளும் நேரிடுகின்றன.அண்மையில், புஷ்பா வெளியான த... மேலும் பார்க்க

மகா கும்பமேளா 'மரண' கும்பமேளாவாக மாறிவிட்டது! - மமதா பானர்ஜி

பிரயாக் ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா, மரண கும்பமேளாவாக மாறிவிட்டது என கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி பேசியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மிகப்பெரிய ஆன... மேலும் பார்க்க

யார் இந்த ஞானேஷ் குமார்? ஜம்மு - காஷ்மீர், அயோத்தி விவகாரங்களில் முக்கிய பங்காற்றியவர்...

புதிதாக நியமிக்கப்பட்டு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், உள்துறை அமைச்சகத்தின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் திறம்படச் செயலாற்றியுள்ளார்.தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்றுடன் ஓய்வுபெற்ற... மேலும் பார்க்க

இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைத்த மோடி அரசு: கார்கே

பிரதமர் நரேந்திர மோடியின் அரசு இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்து, இந்தியர்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே... மேலும் பார்க்க

இந்திய பங்குச் சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வெளியேறுவது ஏன்?: நிதியமைச்சா் விளக்கம்

மும்பை: இந்தியாவில் முதலீடுகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதால் அந்நியமுதலீட்டு நிறுவனங்கள் (எஃப்ஐஐ) தங்கள் கைவசம் உள்ள பங்குகளை விற்பனை செய்து லாபம் ஈட்டி வருகின்றன என்ற நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரி... மேலும் பார்க்க