செய்திகள் :

டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்! சாதனை படைத்த ரஷீத்கான்!

post image

டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ரஷீத்கான் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான், ஐபிஎல், பிபிஎல், சிபிஎல், பிக்-பாஸ் உள்ளிட்ட அனைத்து டி20 லீக் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் டுவைன் பிராவோவை முந்தி டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.

தென்னப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் போட்டியில் ரஷீத் கான் இந்தச் சாதனையை நிகழ்த்தினார். இந்தப் போட்டியின் போது, ​​ரஷீத் கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையும் படிக்க |கம்மின்ஸ் காயம்: சாம்பியன்ஸ் டிராபி ஆஸி. அணியின் புதிய கேப்டன் யார்?

இதுவரை 461 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரஷீத் கான் 633* விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில், நான்கு முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் பல அணிகளுக்காக விளையாடியுள்ள பிராவோவின் 18 ஆண்டுகால டி20 கிரிக்கெட் வாழ்க்கையில் 631 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் அவரது டி20 கிரிக்கெட் வாழ்க்கையில் 3 முறை ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் சுழற்பந்து வீச்சாளரும் ஆல்ரவுண்டருமான சுனில் நரைன் (574 விக்கெட்டுகள் 536 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் 428 போட்டிகளில் 531 விக்கெட்டுகளும், வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் (444 போட்டிகளில் 492 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.

26 வயதான ரஷீத் கான் இதே ஃபார்மில் விளையாடும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற புதிய சாதனையும் படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க |வருண் சக்கரவர்த்திக்கு எதிராக இங்கிலாந்து சிறப்பாக செயல்படும்: கெவின் பீட்டர்சன்

தேர்தலில் பாஜகவுக்காக போலி வாக்களிக்கும் அதிகாரிகள்! அகிலேஷ் வெளியிட்ட ஆதாரம்

உத்தரப் பிரதேச மாநிலம் மில்கிபூர் இடைத்தேர்தலில் ஆளும் பாஜவுக்காக இலக்கு நிர்ணயித்து போலி வாக்களிப்பதாக தேர்தல் அதிகாரிகள் மீது சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பார்க்க

உணவு டெலிவரி போல இனி கார் டெலிவரி! விரைவில் அறிமுகம்

இன்றைய நவீன காலத்தில் எதுவும் சாத்தியமே என்பதை மீண்டுமொருமுறை நிரூபிக்கும் விதமாக, வீட்டிலிருந்தவாறே உணவுப் பொருள்களை ஆர்டர் செய்து அவற்றை பெற்றுக்கொள்ளும் நடைமுறையைப் பின்பற்றி இனிமேல் புதிய கார் வாங... மேலும் பார்க்க

விமான நிலையக் காவல் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை!

மேற்கு வங்கத்தில் விமான நிலையத்தில் பணியில் இருந்த சிஐஎஸ்எஃப் கான்ஸ்டபிள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்கத்தின் கொல்கத்தா நகரில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் வ... மேலும் பார்க்க

இந்தியர்களுக்கு அநீதி இழைக்கும் அமெரிக்கா; பிரதமர் மோடி மௌனம்! காங்கிரஸ் குற்றச்சாடு

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியது.அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் நாடு கடத்தும் பணியில் அமெரிக்க அரசு ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், நாடு கடத்... மேலும் பார்க்க

ஏஐ செயலிகளை பயன்படுத்த வேண்டாம்: ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தல்

அலுவலக சாதனங்களில் செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்ப செயலிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.அதன்படி, மத்திய நிதி அமைச்சகத்தின் பணியாளர்கள் தங்களுடைய அல... மேலும் பார்க்க

அமெரிக்காவிலிருந்து 104 இந்தியர்களுடன் அமிர்தசரஸ் வந்த ராணுவ விமானம்

சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையாக அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்ட 104 இந்தியர்கள் அமிர்தசரஸ் விமான நிலையம் வந்தடைந்தனர்.அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட ராணுவ விமானம் இன... மேலும் பார்க்க