செய்திகள் :

டெல்லி குண்டுவெடிப்பு: அமலாக்கத் துறை சோதனையில் அல் பலா பல்கலைக்கழக நிறுவனர் கைது

post image

டெல்லியில் கடந்த வாரம் நடந்த கார் குண்டு தற்கொலைப்படை தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாக்குதலை நடத்திய டாக்டர் உமர் மற்றும் அதற்கு திட்டமிட்ட டாக்டர் முஜாமில் சகீல் உட்பட இக்குண்டு வெடிப்பு தொடர்பாக 8 டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டாக்டர் உமர் ஹரியானா மாநிலம் அம்பாலா பல்கலைக்கழகத்தில் வேலை செய்து வந்தவர் ஆவார். இதேபோல் டாக்டர் முஜாமில் சகீலும் அதே பல்கலைக்கழகத்தில்தான் வேலை செய்து வந்தார். இதையடுத்து இப்பல்கலைக்கழகத்தில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.

இப்பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஜாவத் அகமது சித்திக் மற்றும் பல்கலைக்கழகத்தோடு தொடர்புடைய நிர்வாகிகள் வீடு, அலுவலகம் என 25 இடங்களில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது.

அந்த ரெய்டின் அடிப்படையில் டெல்லி போலீஸார் பணமோசடி மற்றும் விதிமுறை மீறல்கள் தொடர்பாக இரண்டு வழக்குகளை பதிவு செய்தனர்.

ரெய்டில் ரூ.48 லட்சம் பணம், டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரெய்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் முழுமையான விசாரணைக்கு பிறகு அல் பலா பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஜாவத் அகமது சித்திக் ஆகியவரை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

மாணவர்கள் மற்றும் பெற்றோரை ஏமாற்றுவதற்காக NAAC அங்கீகாரம் பெற்றதாக மோசடியான மற்றும் தவறான தகவல்களை வெளியிட்டதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜாவத் அகமத் சித்திக்

மேலும், 1956 ஆம் ஆண்டு UGC சட்டத்தின் பிரிவு 12(B) இன் கீழ், பல்கலைக்கழகம் UGC அங்கீகாரம் பெற்றதாக தவறான தகவல்களை கூறி மாணவர்களை ஏமாற்றி இருப்பதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதி முறைகேடு, ஒன்பது போலி கம்பெனிகள் உள்ளிட்டவை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் அந்த ஒன்பது போலி கம்பெனிகளின் முகவரி, இமெயில், மொபைல் நம்பர் போன்றவை ஒரே மாதிரியாக இருந்தது.

அந்த கம்பெனிகளின் செயல்பாடுகள் குறித்து எந்த தகவலும் இல்லை. அதோடு, வங்கிகள் மூலம் ஊழியர்களுக்கு மிகவும் குறைவான சம்பளம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஊழியர்களின் வருகை பதிவேட்டை கண்காணிக்க எச்.ஆர் எனப்படும் மனித வள மேம்பாட்டுத் துறை பல்கலைக்கழகத்தில் செயல்பாட்டில் இல்லை.

பல்கலைக்கழகத்தின் நிதி இந்த போலி கம்பெனிகளுக்கு மாற்றப்பட்டிருந்தது. பல்கலைக்கழகத்தின் கட்டுமானப் பணிகள், கேண்டீன் ஒப்பந்தம் போன்றவை பல்கலைக்கழக நிறுவனரின் மனைவி, பிள்ளைகள் பெயரில் கொடுக்கப்பட்டிருந்தது.

அல்பலா கல்வி அறக்கட்டளை 1995ம் ஆண்டு அமைக்கப்பட்டிருந்தது. அந்த அறக்கட்டளையே அல்பலா குரூப் கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்தி வந்தது. அந்த அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக ஜாவத் அகமது சித்திக் இருந்து வந்துள்ளார்.

ஜாவத் அகமத் சித்திக்

அறக்கட்டளையில் இருந்து பல கோடி ரூபாய் ஜாவத் அகமது சித்திக்கின் குடும்ப நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1990ஆம் ஆண்டிலிருந்து அல்பலா குரூப் வேகமாக வளர்ந்துள்ளது. ஆனால் அதன் வளர்ச்சிக்குப் போதிய நிதி இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை.

அதோடு, சந்தேகத்திற்கு இடமான பல்வேறு பண பரிவர்த்தனைகளையும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கல்வி நிறுவனத்தில் பணியாற்றிய டாக்டர்களின் செயல்பாடுகளை சரியாக கண்காணிக்க தவறியதால் ஜாவத் அகமது சித்திக் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

`இறந்துவிட்டார்' என நினைத்த நபரை 28 ஆண்டுகள் கழித்து வீட்டிற்கு இழுத்து வந்த SIR! - என்ன நடந்தது?

மேற்கு வங்கம், தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இதற்காக SIR படிவம் கொடுக்கப்பட்டு, வாக்காளர்களிடம் நிரப்பி வாங்கப்படுகிறது. இதனால் வெளியூரில் இருப்பவர்கள... மேலும் பார்க்க

5 வயதில் விமானம் தாங்கி கப்பலுக்கு நன்கொடை; 26 ஆண்டுகள் கழித்து கிடைத்த கெளரவம்!

சிறுவயதில் நாட்டின் மீது கொண்ட பற்றின் காரணமாக, விமானம் தாங்கி கப்பல் கட்டுவதற்காக தனது சேமிப்பைக் கொடுத்த ஒருவருக்கு, 26 ஆண்டுகளுக்குப் பிறகு சீன அரசு அவரை நேரில் அழைத்து கௌரவித்த நெகிழ்ச்சியான சம்பவ... மேலும் பார்க்க

சேலம் : 50 ஹெக்டேர்; வாக்கிங், சைக்கிளிங், குடில்கள்.! ரூ.10 மட்டுமே - `நகர்வன’த்தில் என்ன ஸ்பெஷல்?

சேலம் மாவட்டம், `குரும்மபட்டி வன உயிரியல் பூங்கா' அருகில் புதியதொரு சுற்றுலா தலம் அண்மையில் சேலம் வனசரகரால் திறந்து வைக்கப்பட்டது என்ற தகவலோடு அங்கு பார்வையாளராக சென்றோம்.என்ன இருக்கு அங்கு? சுமார் 50... மேலும் பார்க்க

``பசியில் 50 எலிகளை சாப்பிட்டேன்'' - 35 நாள்கள் காட்டில் வாழ்ந்த சீன பெண்; எதற்காக இப்படி செய்தார்?

சீனாவில் நடைபெற்ற சாகசப் போட்டி ஒன்றில் 35 நாட்கள் காட்டில் தங்கியிருந்த பெண் ஒருவர் 50 எலிகளை சாப்பிட்டு உயிர் வாழ்ந்ததாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தி... மேலும் பார்க்க

``ரூ.5 லட்சம் சம்பளம்; வேலை இழந்ததால் மனைவி விவாகரத்து'' - டெலிவரி பாயாக மாறிய பட்டதாரி

சீனாவில் பட்டதாரி ஒருவர், தனது அதிக சம்பளம் கொண்ட வேலையை இழந்ததால், மனைவி அவரை விவாகரத்து செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.சீனாவின் ஹாங்சோ நகரைச் சேர்ந்த 43 வயதான கியான்கியான், ஜெஜியாங் பல்கல... மேலும் பார்க்க

மும்பை: ₹500 கோடி மருத்துவக் கல்லூரி தனியார்மயம்; அஜித்பவார் உறவினருக்கா? - மாநகராட்சி பதில் என்ன?

மும்பை புறநகர் பகுதியான கோவண்டியில் 580 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவக் கல்லூரியை மாநகராட்சிக்கு சொந்தமான சதாப்தி மருத்துவமனை நிர்வாகம் கட்டியுள்ளது. இந்த மருத்துவக் கல்லூரி கட்ட ரூ.500 கோடி செலவிட... மேலும் பார்க்க