செய்திகள் :

தகர்ந்த மகளிர் உலகக்கோப்பை கனவு; வெளியேறிய இந்தியா... அரையிறுதிக்குள் நுழைந்த தென்னாப்பிரிக்கா!

post image

மகளிர் இருபது ஓவர் உலகக்கோப்பை இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தத் தொடரில் 'டாப் ஃபோர்' இடத்திற்காகக் கடும் போட்டி நிலவி வந்தது. முதல் மூன்று இடங்களில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகளும் ஏற்கெனவே தங்களின் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து தகுதி பெற்றிருந்தன.

நான்காவதாக அரையிறுதிக்குள் செல்லப்போவது சௌத் ஆப்பிரிக்கா அணியா? இந்திய அணியா? என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. 6 புள்ளிகளுடன் இருந்த இந்திய அணி, இன்னும் ஒரு போட்டியில் வென்றால் 'டாப் ஃபோர்' வாய்ப்பு நிச்சயம் என்ற சூழல் நிலவியது. இதனால் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா - இந்தியா போட்டி, இந்தியாவுக்கு 'டூ ஆர் டை' போட்டியாகவே அமைந்தது. வெற்றி பெற்றால் அரையிறுதிக்குச் செல்லலாம், இல்லையெனில் சௌத் ஆப்பிரிக்கா அணி தகுதி பெறும் என்ற உச்சக்கட்ட பதற்றத்துடன் இந்திய அணி களமிறங்கியது.

கிரிக்கெட்

வரலாற்றுச் சிறப்புமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த வாழ்வா, சாவா போரில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு தொடக்கமே அதிரடியாக அமைந்தது. ஸ்மிருதி மந்தனா 37 பந்துகளில் 38 ரன்களும், ஷஃபாலி வர்மா 26 பந்துகளில் 34 ரன்களும் எடுத்தனர். இந்த ஜோடி ஆஸ்திரேலிய பந்துவீச்சை சிதறடித்து பவர்பிளேயில் ரன்களைக் குவித்தது. நடுவரிசையில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 34 ரன்கள் எடுத்த நிலையில், ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார்.

ஆனால் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், அரைசதம் கடந்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது.

171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்குத் தொடக்கம் சரியாக அமையவில்லை. 68 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. இதனால் இந்திய அணி எளிதாக வென்றுவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

கிரிக்கெட்

ஆனால் அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்காக எல்லிஸ் பெர்ரி மற்றும் ஆஷ்லீ கார்ட்னர் ஜோடி இணைந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவின் பந்துவீச்சைச் சிதறடித்தனர். எல்லிஸ் பெர்ரி 38 பந்துகளில் 56 ரன்களும், ஆஷ்லீ கார்ட்னர் 29 பந்துகளில் 53 ரன்களும் குவித்து மிரட்டினர். இறுதியில், ஆஸ்திரேலியா 19 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 172 ரன்கள் எடுத்து மாபெரும் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவின் இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் 'டாப் ஃபோர்' கனவு முடிவுக்கு வந்து, தொடரை விட்டே வெளியேறியது. கடந்த வருடம் ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி, இருபது ஓவர் உலகக்கோப்பையை வெல்வதில் கோட்டை விட்டுள்ளது.

IND Vs IRE: உலக சாம்பியனை உலுக்கிய அயர்லாந்து... 2-0 என்ற கணக்கில் தொடரை இழந்த இந்தியா!

இருபது ஓவர் கிரிக்கெட் என்றால் இனி இந்திய அணி மட்டும்தான் என்று சொன்ன ரசிகர்களின் தலையில் எல்லாம் இப்போது துண்டைப் போட்டு அமர வைத்துள்ளது, அயர்லாந்து கிரிக்கெட் அணி."உலக சாம்பியனுக்கு வந்த நிலைமையா இத... மேலும் பார்க்க

Ben Stokes: ஆல்-ரவுண்ட் நாயகன் - ஓய்வை அறிவித்தார் பென் ஸ்டோக்ஸ்!

உலக கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான பென் ஸ்டோக்ஸ், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடந்து வரும் மூன்றாவது டெஸ... மேலும் பார்க்க

T20: `டிரஸ்ஸிங் ரூமுக்கு Not Allowed' - கிரிக்கெட் வீரர் சூர்யவன்ஷிக்கு தனிக் கட்டுப்பாடு! - காரணம்?

இளம் வயதிலேயே இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துப் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் களம் இறங்குவதன் மூலம் புதிய சாதனை படைக்க ... மேலும் பார்க்க

"அவன் அடிச்சா அண்டார்டிகாவே அதிரும்!" - 29 பந்துகளில் 94 ரன்கள்... ருத்ரதாண்டவம் ஆடிய சூர்யவன்ஷி!

"பொறுமையாக ஆடும் ஆட்டம் நமக்கு செட் ஆகாது போல, நமக்கு எப்போதுமே சிக்ஸர் மட்டும்தான்!" என்பதைப் போல தனது பழைய ஃபார்முக்கு திரும்பி, இலங்கை பந்து வீச்சாளர்களை பந்தாடினார், இந்திய அணியின் இளம் வீரர் வைபவ... மேலும் பார்க்க

"என்னுடன் மோத தைரியம் இருக்கிறதா?'- ஹர்பஜனுக்கு சவால்விட்ட ஸ்ரீசாந்த்; மீண்டும் ஆரம்பமாகும் மோதல்

2008-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளார் ஶ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் அறைந்தது, மிகப்பெரிய சர்ச்சை ஆனது. இதனால், ஹர்பஜனுக்கு 8 போட்டிகள் விளையாடத் தடை விதிக்கப்பட்டத... மேலும் பார்க்க

IND vs Pak: இந்தியா - பாகிஸ்தான் வீராங்கனைகளிடையே களத்தில் மோதலா? வைரல் வீடியோவின் உண்மை பின்னணி!

மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், நேற்று (ஜூன். 14) நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் பாகிஸ்தான் அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது நடந்த... மேலும் பார்க்க