செய்திகள் :

தருமபுரி: கால்பந்தாட்ட வீரர் தற்கொலை; போக்சோ வழக்கு பதிவு செய்ததுதான் காரணமா?

post image

போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டதால் தலைமறைவான கால்பந்தாட்ட வீரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பென்னாகரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போக்சோ
போக்சோ

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே போடூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜின் மகன் விஜி. மாவட்ட அளவில் கால்பந்தாட்ட வீரராகவும் பயிர்சியாளராகவும் செயல்பட்டு வந்தார். பல்வேறு ஊர்களில் நடக்கும் கால்பந்தாட்ட போட்டிகளுக்கு தன்னிடம் பயிற்சி பெறுபவர்களை அழைத்து சென்று வந்திருக்கிறார்.

இந்த நிலையில் பென்னாகரம் காவல் நிலையத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கொடுத்த புகாரில், "என் மகனை வெளியூருக்கு விளையாடக் கூட்டிச்சென்ற விஜி, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்திருக்கிறார், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகார் கொடுக்க, விசாரணை நடத்திய காவல்துறையினர் விஜி மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

தற்கொலை

தன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்ததை அறிந்து தலைமறைவான விஜி, இரண்டு நாட்களுக்கு முன் தேன்கனிக்கோட்டை அருகே ரங்கசத்திரத்திலுள்ள ஒரு வீட்டின் பின்புற ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார்.

இதுகுறித்து தகவல் கிடைத்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் தன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்து தலைமறைவாகி பெரும் மன உளைச்சலில் இருந்த விஜி இந்த முடிவு எடுத்ததாக சொல்லப்படும் நிலையில், இவர் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி: 'முறையாக சிகிச்சை அளிக்காததால் நான்கரை வயது மகன் பலி' - சிறுவனின் பெற்றோர் குற்றச்சாட்டு

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் கண்ணனூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள முருகன் கோவில் தெரு நெசவாளர் காலனி பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ் (வயது:34 ). இவரது மனைவ... மேலும் பார்க்க

சென்னை: `நீ அழகாக இருப்பதால்தானே...' - மனைவி மீது ஆசிட் வீசிய கணவர்

சென்னை பல்லாவரம், பாரதி நகர் துலுக்கானத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சனா பாத்திமா (29). இவருக்கும் முகமது அலி (31) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த சில மாதங்களுக்கு ம... மேலும் பார்க்க

தூத்துக்குடி: பைக் ரிப்பேர் செய்ய பணம் கேட்டு மதுபோதையில் தகராறு; மகனைக் கொன்ற தந்தை கைது

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகிலுள்ள படர்ந்தபுளி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவரது மனைவி திருகேதீஸ்வரி. இவர்களுக்கு கனகராஜ், பாலபாரதி என இரண்டு மகன்கள் உள்ளனர். பாலபாரதி, திருவள்ளூர்... மேலும் பார்க்க

மும்பை: விபரீதத்தில் முடிந்த குடும்பச் சண்டை; மகன் கண்முன்னே மனைவியைக் கொன்ற கணவன்; என்ன நடந்தது?

மும்பை முலுண்ட் பகுதியில் வசிப்பவர் ராஜு குப்தா. இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புஷ்பாவிற்கும், குப்தாவுக்கும் இடையே அடிக்கடி சிறிய சிறிய பிரச்னைகளுக்கெல்லாம் சண்டை ஏற்பட்டுக... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: 5 பேரின் டிஎன்ஏ சேகரிப்பு- `காவல்துறை மீது நடவடிக்கை..' - நீதிமன்றம்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி, கடந்த 10-ம் தேதி மாலை சுமார் 6 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக, வீட்டின் அருகிலுள்ள ... மேலும் பார்க்க

150 அறைகள் கொண்ட கவடியார் அரண்மனை... ரூ.2 கோடி மதிப்புள்ள மதிப்புமிக்க நகைகள் கொள்ளை - நடந்தது என்ன?

கேரளம் மாநிலத்தில் புகழ்பெற்ற மன்னர்களாக விளங்கியவர்கள் திருவிதாங்கூர் மன்னர்கள். திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாப சுவாமி கோயில் நிர்வாகம் இன்றளவும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் வசம் உள்ளது. மன்னர் க... மேலும் பார்க்க