செய்திகள் :

தருமபுரி: தற்கொலைக்கு முயன்ற சிறுமி; சிகிச்சையின்போது பிரசவம்; போக்சோ வழக்கில் இளைஞர் கைது

post image

பாட்டி, தாய், சிறுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று, சிகிச்சையின்போது 15 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்திய நிலையில் இதற்கு காரணமான வாலிபர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

போக்சோ வழக்கு
போக்சோ வழக்கு

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 51 வயது பெண், இவரது 35 வயது மகள், 16 வயது பேத்தி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு தருமபுரி ரயில் நிலையம் முன்புள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே மயங்கிய நிலையில் கிடந்தனர்.

அப்பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது சிகிச்சையின்போது கர்ப்பிணியாக இருந்த சிறுமிக்கு குழந்தை பிறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தகவல் அறிந்த தருமபுரி நகரக் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சொந்த ஊரில் அந்தச் சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வந்ததும், அதே பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான 30 வயதான அருண்குமார் என்பவருடன் ஏற்பட்ட நட்பில் சிறுமி கர்ப்பமடைடைந்ததும் தெரிய வந்தது.

தருமபுரி
தருமபுரி

மேலும், சிறுமி கர்ப்பமான விஷயத்தைத் தெரிந்துகொண்ட தாயும், பாட்டியும் மன விரக்தி அடைந்து தருமபுரிக்கு வந்தவர்கள், ரயில் நிலையம் அருகே எலி பேஸ்ட்டை உண்டு தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.

இந்த வழக்கு பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் சிறுமியின் கர்ப்பத்துக்குக் காரணமான அருண்குமாரை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தற்போது பிறந்த குழந்தை உள்ளிட்ட 4 பேரும் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தருமபுரி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிறுமி கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த 21ம் தேதியன்று மாலை 5 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்குச் சென்றுள்ளார். வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பததால் சந்தேகம் அடைந்த சிறு... மேலும் பார்க்க

நெல்லை: `வீடியோ எடுத்து அனுப்பு' - ஆண் நண்பருக்காக லேடீஸ் ஹாஸ்டலில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்த பெண்

நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக தனியார் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. பணிக்குச் செல்லும் பெண்கள் மற்றும் கல்லூரிகளில் படிப்பவர்கள் உள்ளிட்டோர் தங்கியிருந்து வருகிறா... மேலும் பார்க்க

கறி சமைக்க `ஓசி'-யில் வாத்து கேட்ட போதை கும்பல் - தர மறுத்ததால் 100 வாத்துகளை வெட்டி வீசிய கொடூரம்!

நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்கு உள்பட்ட தருவை என்ற கிராமப்பகுதியில், மேல முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவர் வாத்துக்களை வளர்த்து தொழில் செய்து வருகிறார். அவரிடம் உள்ள வ... மேலும் பார்க்க

அ.தி.மு.க, தி.மு.க, த.வெ.க... யார் ஆட்சிக்கு வந்தாலும் பவர்ஃபுல் பதவி! - யார் இந்த அருண் ஐ.பி.எஸ்?

அ.தி.மு.க ஆட்சியில் சென்னை கூடுதல் கமிஷனராக பணியாற்றிய அருண் ஐ.பி.எஸ், தி.மு.க ஆட்சியில் சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். எப்படி இந்த மேஜிக் நடக்கிறது என தெரியாமல் சக ஐ.பி.எஸ் அதிகாரிகள் குழம... மேலும் பார்க்க

Tvisha Sharma: கணவரின் வாக்குமூலமும் வாட்ஸ்அப் ஆதாரங்களும் - நடிகை ட்விஷா வழக்கில் தொடரும் மர்மங்கள்

மாடல் மற்றும் நடிகை ட்விஷா சர்மாவின் மரண வழக்கு, தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) இந்த வழக்கை கையில் எடுத்து, போபாலில் உள்ள அவரது கணவர் வீட்டில் நிகழ்ந்த மரணம்... மேலும் பார்க்க

புதுச்சேரி: சிறுமி பாலியல் வன்கொடுமை; 20 ஆண்டுகள் சிறை தண்டனை! - நீதிமன்றத் தீர்ப்பும், பின்னணியும்

புதுச்சேரி அரும்பார்த்தபுரம் பகுதியைச் சேர்ந்த ரௌடி பாம் எழில் (எ) எழிலரசன் மீது கொலை உள்ளிட்ட ஆறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. பெயின்ட்டர் தொழில் செய்பவரான இவர், கடந்த 2023-ம் ஆண்டு வேலைக்குச் ச... மேலும் பார்க்க