செய்திகள் :

திண்டுக்கல்: அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி – 3 பேர் மீது வழக்கு பதிவு!

post image

திண்டுக்கல் ரவுண்ட் ரோடு புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷீலா. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் பீட்டர் அரசுப் பள்ளி ஆசிரியராக உள்ளார். இவர்களது குடும்ப நண்பரான சென்னையைச் சேர்ந்த ஆரோக்கிய சார்லஸ் என்பவர் மூலம், சேலத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் அறிமுகமாகியுள்ளார். 

அப்போது, சேலம் எடப்பாடி அரசு கலைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு ரூ.30 லட்சம் செலவாகும் என்றும் தங்கராஜ் கூறியுள்ளார்.

இதனை நம்பிய ஷீலா மற்றும் அவரது கணவர், கடந்த 15.03.2023 முதல் 15.07.2023 வரையிலான காலகட்டத்தில் தங்கராஜின் வங்கிக் கணக்குகள் மற்றும் கூகுள் பே , போன் பே  மூலமாக மொத்தம் 29 லட்சத்தை அனுப்பியுள்ளனர். 

​மேலும், தங்களது உறவினர்களான மூவருக்கும் வேலை வாங்கி கொடுக்க சொல்லி, தலா 7 லட்சம் ரூபாய் என மொத்தம் 21 லட்சத்தையும் தங்கராஜின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளனர். ஒட்டுமொத்தமாக ரூ.50 லட்சம் பணம் கைமாறியுள்ளது. 

கைது

​இதனிடையே, கடந்த 10.04.2023 அன்று தங்கராஜை நேரில் சந்தித்தபோது, எடப்பாடி அரசு கலைக் கல்லூரியின் துணை முதல்வர் அன்பழகன் என்பவரை சந்திக்குமாறு அவர் கூறியுள்ளார். அதன்படி, அன்பழகனைச் சந்தித்தபோது அவர் ஒரு பணி நியமன ஆணையை காண்பித்து, வேலைக்கான ஆணை மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் வரும் என்று நம்பும்படி கூறியுள்ளார். பின்னர் ஜெயப்பிரியா என்பவருக்கு ஓர் அரசு பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. 

ஆனால், நீண்ட நாள்களாகியும் வேலை கிடைக்காததால், அந்தப் பணி நியமன ஆணை குறித்து விசாரித்தபோது, அது முற்றிலும் போலியானது என்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஷீலா, கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு "மீண்டும் பணம் கேட்டு வந்தால் குடும்பத்துடன் கொலை செய்து விடுவோம்"  என தங்கராஜூம் அன்பழகனும் மிரட்டல் விடுத்துள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

இது குறித்து பாதிக்கப்பட்ட ஷீலா திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் சேலத்தைச் சேர்ந்த தங்கராஜ், அன்பழகன் மற்றும் மோகனாம்பாள் ஆகிய 3 பேர் மீதும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப் பிரிவுகள் 318(3), 318(4), 335, 351(2) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தங்கராஜைக் கைதுசெய்திருக்கின்றனர்.

சென்னை: நட்சத்திர ஹோட்டலில் இருந்த ரௌடி எண்ணூர் தனசேகரன்; துப்பாக்கி முனையில் கைதுசெய்த போலீஸ் டீம்!

சென்னை எண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன். பிரபல ரௌடியான இவர்மீது, ஏழு கொலை வழக்குகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. வழக்கு ஒன்றில் கைதான தனசேகரன் கடலூர் மத்தியச் ... மேலும் பார்க்க

`தந்தை வேலை எனக்குத்தான்.!' - அரசு வேலை, சொத்துக்காக தாயை கூலிப்படை மூலம் கொன்ற சட்டக்கல்லூரி மாணவி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் குடும்ப சொத்து மற்றும் அரசு வேலைக்காக 23 வயது சட்டக் கல்லூரி மாணவி ஆயுஷி சர்மா தனது 45 வயது தாய் நீரஜ் சர்மாவை கூலிப்படை வைத்து கொலை செய்த குற்றத்திற்காக போலீஸார் கைது ச... மேலும் பார்க்க

அமெரிக்காவில் மனைவியைக் கொன்று காதலிக்கு போட்டோ அனுப்பிய இந்திய பொறியாளர் - 9 மாத நாடகம் முடிந்தது!

அமெரிக்க கனவு, காதல், திருமணம், துரோகம்... என ஒரு க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தை மிஞ்சும் அத்தனை அம்சங்களும் அடங்கிய ஒரு கொடூர சம்பவம் அமெரிக்காவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது திருமணம் மீறிய உறவு... மேலும் பார்க்க

துல்கர் சல்மான் சம்பந்தப்பட்ட பூட்டான் கார் கடத்தல் வழக்கு: மேலும் 2 சொகுசு கார்கள் பறிமுதல்

சர்வதேச கார் கடத்தல் நெட்வொர்க்கை முறியடிப்பதற்காக சுங்கத்துறை 'ஆபரேஷன் நும்கோர்' (Operation Numkhor) என்ற புலனாய்வு நடவடிக்கையைக் கடந்த சில மாதங்களாகத் தீவிரப்படுத்தி உள்ளது. சர்வதேச கும்பல், வரி செல... மேலும் பார்க்க

நெல்லை: சிங்கப்பெண் படை விழிப்புணர்வு நிகழ்ச்சி; புகார் அளித்த மாணவிகள்- 3 பேர் மீது பாய்ந்த போக்சோ

நெல்லை அருகேயுள்ள பாலாமடை அரசு மேல்நிலைப்பள்ளியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினர் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சியின் நிறைவில் 3 மாணவிகள் தங்களுக்கு நேந்த பாதி... மேலும் பார்க்க

சாத்தூர் : நடத்தையில் சந்தேகம்; கணவனின் மர்ம உறுப்பில் கத்தியால் குத்திக் கொன்ற மனைவி கைது!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகிலுள்ள சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவர், அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் அட்டைப் பெட்டித் தயாரிப்பு நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இ... மேலும் பார்க்க