செய்திகள் :

திண்டுக்கல்: `பாஸ்கு மைதானம்னு பேரை மாத்திட்டு அன்னதானம் நடத்துங்க' - போராட்டம் நடத்திய மக்கள்

post image

திண்டுக்கல், ஆத்தூர் தொகுதி நி.பஞ்சம்பட்டி கிராமத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் ஒரே சமுதாயத்தை சேர்ந்த 2,500க்கு மேற்பட்ட கிறிஸ்தவ குடும்பங்களும் 100க்கும் மேற்பட்ட இந்து குடும்பங்களும் வசித்து வருகின்றனர்.இங்கு 300 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான கிறிஸ்துவ தேவாலயமும் இதன் அருகே அரசுக்குச் சொந்தமான காலி மைதானம் மற்றும் காளியம்மன், ராமர் கோயில்கள் அடுத்தடுத்து உள்ளன. இந்தக் கோயில்களுக்கு கும்பாபிஷேக விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யபட்டன. இந்த விழாவிற்கு அன்னதானம் வழங்குவதற்காக கிறிஸ்துவ தேவாலயம் அருகே உள்ள பொது மைதானத்தில் அன்னதானம் நடத்த முடிவு செய்யப்பட்டது.  இந்த மைதானத்தின் பெயரை பாஸ்கு மைதானம் என மாற்றக் கோரி கிறிஸ்தவ மக்கள் தரப்பில் முன்பிருந்தே கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த மைதானத்தில் அன்னதானம் வழங்குவதற்கு கடந்த வாரம் அனுமதி கேட்டு காவல் துறையினர் மற்றும் தாசில்தார் ஆகியோரிடம் மனு அளித்திருந்தனர். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது. இதனை அடுத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.

திண்டுக்கல் கோயில் கும்பாபிஷேக விழா பொது மைதானத்தில் அன்னதானம் வழங்க எதிர்ப்பு

இதனையடுத்து, அரசுக்குச் சொந்தமான மைதானத்தில் அன்னதானம் வழங்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், எவ்வித அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

பொது மைதானத்தை, பாஸ்கு மைதானம் என அழைப்பிதழில் அச்சடித்தால் அன்னதானம் வழங்கலாம் என கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், இதனை அப்பகுதியில் வசிக்கும் இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது இதை எதிர்த்து கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மக்கள்  காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதோடு சிறைநிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் கோவில் கும்பாபிஷேக விழா பொது மைதானத்தில் அன்னதானம் வழங்க எதிர்ப்பு

இந்நிலையில் நேற்று காலை விநாயகர் மற்றும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனை முன்னிட்டு பொது மைதானத்தில் அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு, உணவு சாப்பிட்டுச் சென்றனர்.

இந்நிலையில்  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சம்பட்டியை சேர்ந்த கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களுக்கு அரசு வழங்கிய அடையாள அட்டைகளை ஒப்படைப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு  வருகை தந்தனர்.

திண்டுக்கல் கோவில் கும்பாபிஷேக விழா பொது மைதானத்தில் அன்னதானம் வழங்க எதிர்ப்பு

பின்னர் நுழைவாயில் முன்பு  மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன்  மற்றும் திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர்  பிரதீப் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.

பீகார் தேர்தல் 2025: ஹெலிகாப்டர்களில் சூறாவளி பிரசாரம்; எகிறும் தேர்தல் செலவுகள்!

2025 பீகார் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த நவம்பர் 6-ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்ட (121 தொகுதிகள்) வாக்குப்பதிவில் 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளன.இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு (12... மேலும் பார்க்க

‘22% ஈரப்பதம்’ நெல் கொள்முதல் எனும் தேசிய நாடகம்... கைதட்டும் தி.மு.க; கும்மியடிக்கும் பா.ஜ.க!

அனைவருக்கும் பசுமை வணக்கம்...‘கழுதைக்கு வாக்கப்பட்டுட்டு... உதைக்கு அஞ்சலாமா’ என்கிற பழமொழி போல்தான் இருக்கிறது, உழவர்களின் வாழ்க்கை. நாட்டுக்கே படியளக்கும் தங்களை, ‘மக்களாட்சி’ என்கிற பெயரில் ஆண்ட/ஆண... மேலும் பார்க்க

அமெரிக்கா: உடல் பருமன், சர்க்கரை நோய்‌ உள்ளவர்களுக்கு 'நோ' விசா; ட்ரம்ப்பின் புதிய கெடுபிடி என்ன?

அமெரிக்கா விசா வழங்குவதற்கு மேலும் புதிய கெடுபிடிகளை விதித்துள்ளது ட்ரம்ப் அரசு.நூறு, ஆயிரக் கணக்கிலான டாலர்கள் மதிப்புள்ள மருத்துவச் சிகிச்சை அல்லது மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு இனி விசா வழங்க ... மேலும் பார்க்க

"உதயநிதியின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது இதுதான் ஞாபகம் வருகிறது" - மு.க ஸ்டாலின் பெருமிதம்

இன்று திமுகவின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இளைஞரணி சார்பில் அறிவுத் திருவிழா நடைபெற்றது.இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், உதயநிதியின் செயல்பாடுகளைப் பார... மேலும் பார்க்க

"ஸ்டாலின் இடத்திற்கு உதயநிதி வருவார்; ராஜேந்திர சோழன் போல ஆட்சி செய்வார்" - துரைமுருகன் பேச்சு

இன்று திமுகவின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இளைஞரணி சார்பில் அறிவுத் திருவிழா நடைபெற்றது.இதில் திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், "ஸ்டாலினுக... மேலும் பார்க்க

ஊட்டி: "அண்ணா பெயரைக் கெடுக்கவே முறைகேடாக போட்டிகளை நடத்துகின்றனர்" - பெண்கள் புகாரின் பின்னணி என்ன?

அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கடந்த செப்டம்பர் மாதம் முதல் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ... மேலும் பார்க்க