செய்திகள் :

'திமுக கூட்டணியில் ராமதாஸ்?' - செல்வபெருந்தகை கருத்துக்கு விசிக கண்டனம்!

post image

தி.மு.க கூட்டணியில் ராமதாஸ் இடம்பெறுவாரா என்ற கேள்விக்கு செல்வபெருந்தகை அளித்த பதில் வி.சி.க முகாமை கொதிப்படையச் செய்திருக்கிறது.

தந்தை மகன் மோதலால் பா.ம.க பிளவடைந்திருக்கும் நிலையில், என்.டி.ஏ கூட்டணியில் ஐக்கியமாகியிருக்கிறார் அன்புமணி. பெரியவர் ராமதாஸ் தி.மு.க கூட்டணிக்கு செல்லலாம் எனப் பேசப்பட்ட சூழலில் 'பா.ம.க, பா.ஜ.க இடம்பெறும் கூட்டணியில் வி.சி.க இருக்காது' என உடைத்துப் பேசியிருந்தார் வி.சி.க தலைவர் திருமாவளவன்.

S.I.R பற்றி திருமாவளவன்
திருமாவளவன்

இச்சூழலில், 'தி.மு.க கூட்டணியில் ராமதாஸ் இணைவாரா?' என்ற கேள்விக்கு செல்வபெருந்தகை, ``தி.மு.க கூட்டணிக்குள் வருவதை தி.மு.க தலைவர் தான் முடிவு செய்யவேண்டும். அதேநேரம் ராமதாஸும், வி.சி.க தலைவர் திருமாவளவனும் நெருக்கமாக இருந்தவர்கள்தான். இருவருக்கும் இடையே இடைவெளி இல்லை. இவருக்கு ஒன்று என்றால் அவர் பேசுவார். விசிக கொடியை ராமதாஸ் ஏற்றியிருக்கிறார். வன்னியர் சங்க கொடியை திருமாவளவன் ஏற்றியிருக்கிறார். இவ்வாறு இணக்கமாக இருந்தவர்கள் தான் இருவரும். எனவே தேவை என்றால் ஒருவருக்கொருவர் சந்தித்து பேசி சரி செய்துகொள்வார்கள். அதை அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும்' என பதிலளித்தார்.

செல்வபெருந்தகையின் கருத்துக்கு ரியாக்ட் செய்த வி.சி.க திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் பாலாஜி, "கூட்டணியில் யார் யார் என்பதை தி.மு.க முடிவெடுக்கும் என்பதைதான் நாங்களும் சொல்லி விட்டோமே.

ராமதாஸ்

சாதியவாத மதவாத சக்திகள் இருக்கும் இடத்தில் இருக்க மாட்டோம் எனும் நிலைப்பாட்டை விசிக மாற்றிக் கொள்ளும் என்கிற தோற்றத்தை திணிப்பது நாகரீகமற்ற அரசியல் அணுகுமுறை" என கண்டித்தார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய வி.சி.க நிர்வாகிகள், "ராமதாஸ் இருக்கும் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்பதை 14 ஆண்டுகளாக சொல்லிவருகிறது வி.சி.க. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் இவ்வேளையில் ராமதாஸ் கூட்டணிக்கு வரலாம் என பேச்சுகள் எழுந்தவுடனேயே வி.சி.க எம்.எல்.ஏ-க்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

அதன்பிறகு, எங்கள் தலைவருமே எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக சொல்லிவிட்டார். வி.சி.க ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்ட பிறகு 'அவர்களுக்குள் எந்த பிரச்னையுமில்லை.. சந்தித்து பேசினால் சரியாகிவிடும்.. முதல்வர் முடிவெடுப்பார்' எனப் பேசியது சரியல்ல" என்றனர்.

TNPSC குரூப் 2, 2A மெயின்ஸ் தேர்வு 'பின்னர்' ஒத்திவைப்பு - காரணம் என்ன?

இன்று TNPSC குரூப் 2 மற்றும் 2A மெயின்ஸ் தேர்வு நடக்க இருந்தது.ஆனால், சென்னையில் அரும்பாக்கம் மற்றும் நந்தனத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கியதில் குளறுபடிகள் உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.அதாவது, அந்தத் ... மேலும் பார்க்க

சென்னையில் பறவைக்காய்ச்சல்: `பீதியடைய வேண்டாம்; விழிப்புணவு அவசியம்..!' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை அடையார், காந்தி நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, திருவான்மியூர், இ.சி.ஆர் சாலை மற்றும் ஓ.எம்.ஆர் சாலை உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து காகங்கள் தொடர்ந்து உயிரிழந்தன. இதனையடுத்து உயிரிழந்த காகங்களின... மேலும் பார்க்க

இந்திய - அமெரிக்க ஒப்பந்தம்... மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுமா மத்திய அரசு?

இழுபறியில் இருந்துவந்த இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் நிறைவடைந்து விட்டதாக வெளியான அறிவிப்பு, பொருளாதார ரீதியாக முக்கியமான நிகழ்வு. ஆனால், அந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள், கால வரையறை, இந்தியா ஏற்ற... மேலும் பார்க்க

இன்னும் ஒரே ஒரு மாதம் தான், 'வேற லெவல்' ஆகப்போகும் இந்திய ரூபாய் - அமெரிக்க வங்கி தகவல்!

சமீப காலங்களில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.92 வரை சென்றது. இது முதலீட்டாளர்களுக்கும், இறக்குமதியாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சி. காரணம்... இந்திய ரூபாய் மதிப்பு பலவீனமாகும்போ... மேலும் பார்க்க

`மனசு பதறுகிறது; காவல்துறைக்குப் பாடம் புகட்டுவோம்' - அஜித்குமார் கொலை வழக்கு விசாரணையில் நீதிபதி!

திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாகப் பணிபுரிந்த அஜித்குமாரை, கடந்த 2025 ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படைக் காவலர்கள் விசாரித்தனர். அதில் ஜூன் 28ஆம் தே... மேலும் பார்க்க

கரூர் துயரம் நிகழ்ந்த அதே வேலுச்சாமிபுரத்தில் பொதுக்கூட்டம்! - விஜய்யை சீண்டும் நாதக?

கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த த.வெ.க தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியானார்கள். அதே வேலுச்சாமிபுரத்தில் 9.02.2025 நா.த.க பொதுக்கூட்டம் நடத்த கரூர் காவல்துறை அனுமதிய... மேலும் பார்க்க