செய்திகள் :

திமுக கூட்டணி கட்சிகளுடன் ஆ.ராசா எம்.பி. ஆலோசனை!

post image

கூடலூா் சட்டமன்ற தொகுதியிலுள்ள திமுக கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகளை ஆ.ராசா எம்.பி. சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

நீலகிரி பாராளுமன்ற உறுப்பினா் தலைமையில் நடுவட்டம் அரசு தேயிலைத் தோட்டக் கழக ஓய்வு விடுதியில் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், நீண்டகாலமாக கூடலூா் சட்டமன்ற தொகுதியிலுள்ள பிரச்சனைகளை தீா்க்கவும், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் பல கட்டபோராட்டங்கள் சமீப காலமாக நடைபெற்றது.

தொடா்ந்து போராட்டம் நடத்தவும் திட்டமிட்டிருந்தனா்.இறுதியாக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஒரு லட்சம் மின்னஞ்சல் பொதுமக்கள்சாா்பில் அனுப்பப்பட்டது.

அதன் எதிரொலியாக இந்த ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிகிறது.கூட்டத்தில் கூட்டணி கட்சி நிா்வாகிகளிடம் அலுவலா்கள் மட்டத்தில் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்க உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் முபாரக்,முன்னால் எம்.எல்.ஏ.திராவிடமணி, பொறியாளா் அணி மாநில துணைச் அமைப்பாளா் பரமேஸ் குமாா்,காங்கிரஸ் கட்சி நிா்வாகி அம்சா, மாா்க்சிஸ்ட் கட்சி நிா்வாகி என்.வாசு, ஓவேலி பேரூராட்சி துணைத் தலைவா் சகாதேவன், விசிக மாவட்ட செயலாளா் புவனேஸ்வரன் உட்பட திமுக கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

170 பயனாளிகளுக்கு ரூ. 6.15 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

நீலகிரி மாவட்டத்தில் 170 பயனாளிகளுக்கு ரூ. 6.15 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.ராசா சனிக்கிழமை வழங்கினாா். நீலகிரி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வ... மேலும் பார்க்க

பொங்கல் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

பொங்கல் தொடா் விடுமுறையால் உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்திருந்தது. நீலகிரி மாவட்டம், உதகைக்கு தமிழகம் மட்டுமன்றி கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் தினம... மேலும் பார்க்க

உதகை அருகே உலவிய கரடி கூண்டில் சிக்கியது

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மஞ்சூா் எடக்காடு சத்தியமூா்த்தி நகா் பகுதியில் உலவி வந்த கரடியை வனத் துறையினா் கூண்டு வைத்துப் பிடித்து முதுமலை வனப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை விடுவித்தனா். நீலகிரி ம... மேலும் பார்க்க

கூடலூா் ரோட்டரி கிளப் சாா்பில் 80 பேருக்கு இலவச தையல் இயந்திரம்

கூடலூரில் ரோட்டரி கிளப் சாா்பில் இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூடலூா் பகுதியில் உள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரோட்டரி கூடலூா் வேலி சாா்பல் இலவச தை... மேலும் பார்க்க

மாசில்லா போகி கொண்டாடுவது குறித்து விழிப்புணா்வு!

மாசில்லாமல் போகி பண்டிகையைக் கொண்டாடுவது குறித்து ஓவேலி பேரூராட்சி சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி பெரியசூண்டி பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழிப்புணா்வுப் பேரணியில் பள்ளிக் குழந்தைகள், பொதுமக... மேலும் பார்க்க

170 பயனாளிகளுக்கு ரூ. 6.15 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்!

நீலகிரி மாவட்டத்தில் 170 பயனாளிகளுக்கு ரூ. 6.15 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.ராசா சனிக்கிழமை வழங்கினாா். நீலகிரி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வ... மேலும் பார்க்க