செய்திகள் :

பாராமதி: `நாளை பேசுகிறேன் அப்பா' - விமானப் பணிப்பெண் பிங்கி மாலி பேசிய கடைசி வார்த்தைகள்

post image

பாராமதி விமான நிலைய ஓடுதளம் அருகே நடந்த விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், அந்த விமானத்தில் பணியாற்றிய விமானப் பணிப்பெண் பிங்கி மாலி, தனது தந்தையுடன் விபத்துக்கு முன் பேசிய கடைசி தொலைபேசி உரையாடல் தற்போது வெளிவந்துள்ளது.

“நாளை பேசலாம்” என்ற கடைசி வார்த்தை

மும்பை வொர்லியைச் சேர்ந்த பிங்கி மாலி, தனது தந்தை சிவ்குமார் மாலியிடம் “அப்பா, நான் அஜித் பவாருடன் பாராமதிக்கு பறக்கிறேன். அவரை இறக்கிவிட்ட பிறகு நான் நாந்தேட் செல்கிறேன். நாளை பேசலாம்” என்று கூறியுள்ளார்.

ஆனால் அந்த “நாளை” இனி ஒருபோதும் வராது என அவர் கண்ணீருடன் கூறியுள்ளார்.

“நான் என் மகளை இழந்துவிட்டேன். என்ன நடந்தது என்பது பற்றி எனக்கு எந்த தொழில்நுட்ப அறிவும் இல்லை. நான் முற்றிலும் உடைந்து போயிருக்கிறேன். என் மகளின் உடலை மட்டும் தர வேண்டும். மரியாதையுடன் அவளது இறுதி சடங்கை செய்ய வேண்டும். அதுதான் எனது ஒரே விருப்பம்,”என்று சிவ்குமார் மாலி தெரிவித்துள்ளார்.

பிங்கி மாலி சமீப காலமாக அஜித் பவாருடன், அதே சிறிய ரக விமானத்தில் பல பயணங்களில் இணைந்து சென்றதாகவும், அந்த நாளும் வழக்கம்போல தனது பணிக்காகவே விமானத்தில் இருந்ததாகவும் சிவ்குமார் கூறியுள்ளார்.

இந்த விமான விபத்து புதன்கிழமை காலை, புனே மாவட்டத்தில் உள்ள பாராமதி விமான நிலையம் அருகே நடந்தது. டெல்லியைச் சேர்ந்த VSR வெஞ்சர்ஸ் நிறுவனம் இயக்கிய Learjet 45 ரக விமானம் (பதிவு எண்: VT-SSK) விபத்துக்குள்ளானது.

இந்த விமானத்தில் மொத்தம் ஐந்து பேர் பயணம் செய்தனர். மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி விதிப் ஜாதவ், விமானப் பணிப்பெண் பிங்கி மாலி, பிரதான விமானி சுமித் கபூர் மற்றும் இணை விமானி ஷம்பாவி பாதக். இந்த விபத்தில் ஐவரும் உயிரிழந்தனர்.

விமானப் போக்குவரத்து விவரங்களின்படி, இந்த Learjet 45 விமானம் காலை 8.10 மணிக்கு மும்பையிலிருந்து புறப்பட்டது. காலை 8.45 மணியளவில் விமானம் ரேடார் கண்காணிப்பில் இருந்து திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், காலை 8.50 மணியளவில் பாராமதி அருகே விமானம் விபத்துக்குள்ளானது.

அஜித் பவார், பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறவிருந்த மாவட்ட ஊராட்சி (Zilla Parishad) தேர்தல்களை முன்னிட்டு நடைபெற இருந்த நான்கு தேர்தல் பிரச்சார கூட்டங்களில் உரையாற்றுவதற்காக பயணம் செய்து கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானம் தரையிறங்கும் முயற்சியின் போது கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படும் நிலையில், விபத்து தகவல் கிடைத்த உடனேயே அவசர மீட்பு குழுக்கள் மற்றும் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன.

விசாரணைக்கு AAIB குழு

இந்த விமான விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்காக, விமான விபத்து விசாரணை பணியகம் (Aircraft Accident Investigation Bureau – AAIB) சார்ந்த ஒரு குழு, டெல்லியிலிருந்து புனேவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.

OPS : `நான் ரெடி... டிடிவி தினகரனும், எடப்பாடியும் ரெடியா?'- தேனியில் பன்னீர்செல்வம் பேட்டி

தேர்தலுக்காக பல கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன. கொள்கைகளையும், காரசாரமான விவாதங்களையும், குற்றச்சாட்டுகளையும் கடந்து கூட்டணிகள் உருவாகி வருகின்றன. அதே நேரம், அ.தி.மு.க தொண்டர... மேலும் பார்க்க

கண்ணீர்மல்க அஜித் பவாருக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி, மகன்கள் - அமிஷ் ஷா, தலைவர்கள் நேரில் இரங்கல்

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் நேற்று நடந்த விமான விபத்தில் அகாலமரணம் அடைந்தார். அஜித் பவாரின் சொந்த ஊரான பாராமதியில் நடந்த இந்த விபத்தில் அஜித் பவாருடன் சேர்த்து மேலும் 5 பேர் உயிரிழந்தனர். அஜ... மேலும் பார்க்க

'பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட், மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் காத்திருக்கிறதா?'|மத்திய பட்ஜெட் 2026

2026-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட் நெருங்கிவிட்டது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில், ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அறிவித்தது மைல்ஸ்டோன் அறிவிப்பாக இருந்தது. இந்த ஆண்டின் வருமான வரி சம்பந்தமாக என்னென்ன அறிவ... மேலும் பார்க்க

அஜித் பவார்: மது, புகையிலைக்கு `நோ' ; ஒழுக்கம், கண்கண்ணாடியில் அதிக ஆர்வம்; சுத்தம் மிக முக்கியம்!

மகாராஷ்டிரா அரசியலில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் அகால மரணம் அடைந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அஜித் பவ... மேலும் பார்க்க

'டீல்' பேசும் வேலுமணி முதல் காத்திருக்கும் நயினார் நாகேந்திரன் வரை! | கழுகார் அப்டேட்ஸ்

நிறைவு விழாவில் பிரதமர்!'டீல்' பேசும் வேலுமணிஅ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டவர்களையும், விலகிச் சென்ற சிலரையும் தேர்தலுக்கு முன்பாக கட்சிக்குள் கொண்டுவரும் பணியை, வேலுமணி கையில் எடுத்திருக்கிறாராம். ... மேலும் பார்க்க

`கலை என்பது வியாபாரமல்ல.!’ - பத்மஸ்ரீ விருது பெற்ற புதுச்சேரி சிலம்பக் கலைஞர் பழனிவேல்

சிலம்பமே சுவாசம்!ஒரு சாமானிய கிராமத்து இளைஞன், தன் பாரம்பர்யக் கலையை உயிர்ப்பிக்க நடத்திய 32 ஆண்டுகாலப் போராட்டத்திற்கு இன்று தேசமே எழுந்து நின்று மரியாதை செலுத்துகிறது. 1983-ஆம் ஆண்டு, ஒரு விளையாட்டா... மேலும் பார்க்க