செய்திகள் :

கண்ணீர்மல்க அஜித் பவாருக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி, மகன்கள் - அமிஷ் ஷா, தலைவர்கள் நேரில் இரங்கல்

post image

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் நேற்று நடந்த விமான விபத்தில் அகாலமரணம் அடைந்தார். அஜித் பவாரின் சொந்த ஊரான பாராமதியில் நடந்த இந்த விபத்தில் அஜித் பவாருடன் சேர்த்து மேலும் 5 பேர் உயிரிழந்தனர். அஜித் பவாரின் உடல் இன்று காலை பாராமதி மருத்துவ கல்லூரியில் இருந்து இறுதிச்சடங்கிற்காக எடுத்து வரப்பட்டது.

இதையடுத்து மருத்துவ கல்லூரி வளாகத்தில் தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் திரளாக கூடி இருந்தனர். அங்கிருந்து வித்யா பிரதிஷ்தான் மைதானத்திற்கு உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அங்கு மறைந்த தலைவருக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா பிரதமர் நரேந்திர மோடி சார்பாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இது தவிர மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, நிதின் கட்கரி, உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே, சுப்ரியா சுலே, சரத்பவார், நடிகர் ரிதேஷ் தேஷ்முக், பிரபுல் பட்டேல் மற்றும் மகாராஷ்டிரா அமைச்சர்கள் உட்பட ஏராளமான தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இது தவிர ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்களும், பொதுமக்கள் வந்து கலந்து கொண்டனர். அஜித் பவாரின் மனைவி சுனேதிர பவார் தனது கணவர் உடல் அருகில் கண்ணீருடன் நின்று கொண்டிருந்தார். சுனேத்ரா பவார் முன்னிலையில் அவரது இரண்டு மகன்களான பார்த் பவார் மற்றும் ஜெய்பவார் ஆகியோர் தங்களது தந்தைக்கு தீமூட்டி இறுதிச்சடங்குகளை செய்தனர்.

முன்னதாக அஜித்பவாரின் உடல் மீது மூவர்ண கொடி போர்த்தப்பட்டு இருந்தது. அவர் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட பொதுமக்களும், தொண்டர்களும் கண்ணீர் விட்டு அழுத காட்சியை நேரில் காண முடிந்தது.

விமான விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்வதற்காக இன்று தடயவியல் நிபுணர்களும், மத்திய விமான போக்குவரத்து துறை அதிகாரிகளும் பாராமதிக்கு வந்திருந்தனர்.

OPS : `நான் ரெடி... டிடிவி தினகரனும், எடப்பாடியும் ரெடியா?'- தேனியில் பன்னீர்செல்வம் பேட்டி

தேர்தலுக்காக பல கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன. கொள்கைகளையும், காரசாரமான விவாதங்களையும், குற்றச்சாட்டுகளையும் கடந்து கூட்டணிகள் உருவாகி வருகின்றன. அதே நேரம், அ.தி.மு.க தொண்டர... மேலும் பார்க்க

பாராமதி: `நாளை பேசுகிறேன் அப்பா' - விமானப் பணிப்பெண் பிங்கி மாலி பேசிய கடைசி வார்த்தைகள்

பாராமதி விமான நிலைய ஓடுதளம் அருகே நடந்த விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், அந்த விமானத்தில் பணியாற்றிய விமானப் பணிப்பெண் பிங்கி மாலி, தனது தந்... மேலும் பார்க்க

'பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட், மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் காத்திருக்கிறதா?'|மத்திய பட்ஜெட் 2026

2026-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட் நெருங்கிவிட்டது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில், ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அறிவித்தது மைல்ஸ்டோன் அறிவிப்பாக இருந்தது. இந்த ஆண்டின் வருமான வரி சம்பந்தமாக என்னென்ன அறிவ... மேலும் பார்க்க

அஜித் பவார்: மது, புகையிலைக்கு `நோ' ; ஒழுக்கம், கண்கண்ணாடியில் அதிக ஆர்வம்; சுத்தம் மிக முக்கியம்!

மகாராஷ்டிரா அரசியலில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் அகால மரணம் அடைந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அஜித் பவ... மேலும் பார்க்க

'டீல்' பேசும் வேலுமணி முதல் காத்திருக்கும் நயினார் நாகேந்திரன் வரை! | கழுகார் அப்டேட்ஸ்

நிறைவு விழாவில் பிரதமர்!'டீல்' பேசும் வேலுமணிஅ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டவர்களையும், விலகிச் சென்ற சிலரையும் தேர்தலுக்கு முன்பாக கட்சிக்குள் கொண்டுவரும் பணியை, வேலுமணி கையில் எடுத்திருக்கிறாராம். ... மேலும் பார்க்க

`கலை என்பது வியாபாரமல்ல.!’ - பத்மஸ்ரீ விருது பெற்ற புதுச்சேரி சிலம்பக் கலைஞர் பழனிவேல்

சிலம்பமே சுவாசம்!ஒரு சாமானிய கிராமத்து இளைஞன், தன் பாரம்பர்யக் கலையை உயிர்ப்பிக்க நடத்திய 32 ஆண்டுகாலப் போராட்டத்திற்கு இன்று தேசமே எழுந்து நின்று மரியாதை செலுத்துகிறது. 1983-ஆம் ஆண்டு, ஒரு விளையாட்டா... மேலும் பார்க்க