செய்திகள் :

திருச்சி: ரயில் நிலையத்தில் பயணிடம் ரூ.60 லட்சம் திருட்டு! - ரயில்வே போலீஸார் உள்பட 4 பேர் கைது

post image

சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் வளையம்பட்டி அருள் நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய ஜான் கென்னடி (32). இவர், கடந்த 30 -ம் தேதி சென்னையிலிருந்து தனது உறவினர் கொடுத்த ரூ. 60 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு சென்னையில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்தார்.

அப்பொழுது, திருச்சி ரெயில் நிலைய நடைமேடையில் வந்து இறங்கும் பொழுது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் தங்களை காவல்துறை ஸ்பெஷல் போலீஸ் என்று சொல்லி தன்னிடமிருந்த பணப்பையை பறித்துக் கொண்டு சென்றதாக திருச்சி ரெயில்வே போலீஸில் புகார் கொடுத்தார்.

trichy

இந்த புகாரை பெற்ற ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, சம்பவம் உண்மை என தெரிய வந்தது. மேலும், மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்ட திருச்சி ரெயில்வே போலீஸான ஜான்சன் கிரிஸ்டோ குமார் (43), தீனதயாள் (37) மற்றும் ரஞ்சித் (40), ராஜேந்திரன் (45) என்ற திருவெறும்பூரைச் சேர்ந்த இரண்டு என்று மொத்தமாக நான்கு நபர்களையும் போலீஸார் கைது செய்தனர். பயணியிடம் ரூ. 60 லட்சத்தை போலீஸார் உள்பட நான்கு பேர் அபகரித்த சம்பவம், திருச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருமணமான ஒரு ஆண்டுக்குள் உயிரை மாய்த்த மனைவி; அமைச்சரின் உதவியாளர் கைது - அதிர்ச்சி புகார்

மகாராஷ்டிராவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பவர் பங்கஜா முண்டே. இவரிடம் ஆனந்த் கர்ஜே என்பவர் உதவியாளராக இருக்கிறார். இவரது மனைவி கௌரி. இவர் மும்பையில் உள்ள கே.இ.எம். மருத்துவமனையில் டாக்டராக பணி... மேலும் பார்க்க

தென்காசி: ஸ்டாப்பில் நிற்காமல் சென்ற அரசு பேருந்து; வாதம் செய்த பயணியை காலணியால் தாக்கிய நடத்துனர்!

தென்காசி, கடையநல்லூர் அருகே நயினாரகரத்தைச் சேர்ந்தவர் சுப்பையா (50). இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் நயினாரகரம் செல்வதற்கு தென்காசியில் இருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்... மேலும் பார்க்க

பயணப்படிக்கு விண்ணப்பம் கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர்; ஆபாச படங்கள் அனுப்பிய எஸ்.பி அலுவலக பணியாளர் கைது

ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தில் அமைச்சுப் பணியில் ஈடுபட்டு வந்தவர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதான முருகன். அரசின் நிரந்தர பணியாளரான இவர், காவலர்களுக்கான பயணப... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: நடுராத்திரியில் நடுங்க வைத்த பெண் குரல்... வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த போலீஸ்!

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஜெகதேவி சாலை, எம்.ஜி.ஆர் நகரில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி அருகில் வசிப்பவர் அர்ஜுனன் (வயது 71). விவசாயியான இவர், தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று... மேலும் பார்க்க

பள்ளிவாசலுக்கு மந்திரிக்க சென்ற இளம்பெண்ணை பாலியல் கொடுமை செய்ய முயன்ற நபர்; நரிக்குடியில் பரபரப்பு!

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே வீரசோழன்‌ பகுதியை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ். இவர் நரிக்குடி ஜூம்மா பள்ளிவாசலில் அஷ்ரத் ஆக பணியாற்றி‌ வருகிறார். இந்நிலையில் நரிக்குடி‌ பகுதியை சேர்ந்த 22 வயது இளம்... மேலும் பார்க்க

சிவகாசி: மின்வாரியத்தில் கத்தை கத்தையாக பணம் எண்ணிய அதிகாரி, லஞ்சமா? - பணியிடை நீக்கம்

சிவகாசியில் மின்வாரியத்தில் பணிபுரிந்த பெண் அதிகாரி ஒருவர் அலுவலகத்தில் பணம் எண்ணும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளராக பணியாற்றி வந்தவர் பத்ம... மேலும் பார்க்க