செய்திகள் :

திருச்சி: 'ரூ.8 லட்சம் மதிப்பு' - கள்ளநோட்டுகளை மாற்றிய வடமாநில கும்பல் சிக்கியது எப்படி?

post image

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் காருக்கு பெட்ரோல் போட்டவர்கள், 200 ரூபாய் நோட்டாக கொடுத்துள்ளனர். அந்த நோட்டை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பரிசோதனை செய்த பொழுது, அது கள்ள நோட்டு என தெரியவந்தது. ஆனால், அதற்குள் அங்கிருந்து அந்த மர்ம நபர்கள் காரை எடுத்துச் சென்றுவிட்டனர்.

car

இது சம்பந்தமாக உடனடியாக பெட்ரோல் பங்க் ஊழியர்கள் துவாக்குடி போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில், துவாக்குடி போலீஸார் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் மஞ்சத்திடல் பாலத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஏட்டு செந்தில் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவர்களுக்கு துவாக்குடி காவல் நிலையத்திலிருந்து அவசர அழைப்பு வந்துள்ளது.

அதில், துவாக்குடி பகுதியில் இருந்து திருச்சி நோக்கி மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட ஒரு கார் வந்து கொண்டிருப்பதாகவும், அந்த காரை மறித்து சோதனையில் ஈடுபட அறிவுறுத்தி உள்ளனர். அதன் அடிப்படையில், நந்தகுமாரும், செந்திலும் அந்த காரை மறித்து சோதனையிட்டபோது காரில் இரண்டு பையில் 200 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்துள்ளது. அதன் அடிப்படையில், அவர்கள் இருவரையும் திருவெறும்பூர் போலீஸார் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றதோடு பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

accused

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மகாராஷ்டிரா மாநிலம், பாபாரோ பக்கீர் ராம்கிர் மகன் ரமேஷ் பாபாரோ (54), அனுமன் ராம் மகன் நாராயண ராம் (34) என்றும் தெரிய வந்தது. மேலும், போலீஸாரின் விசாரணையில் அவர்கள் மதுரையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபரிடம் மூன்று லட்சம் கள்ள நோட்டுகளை மாற்றியதாகவும், அதன் பிறகு புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் சென்று விட்டு வந்தபோது தான் பிடிபட்டதாகவும் கூறியுள்ளனர். அதனைத்தொடர்ந்து, அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணிப் பார்த்தபோது அதில் 8,37, 800 ரூபாய் இருப்பது தெரியவந்தது.

அனைத்தும் 200 ரூபாய் நோட்டுகளாகவும், நூறு தாள்கள் எண்ணிக்கை கொண்ட 41 கட்டுகளும், மற்றொரு கட்டில் 89 தாள்களும் இருந்துள்ளது. அவை அனைத்தும் கள்ள நோட்டுகள் என்பது உறுதியானது. அதன்பிறகு, அவர்கள் இருவரையும் பிடித்து திருவெறும்பூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களை முறையாக விசாரித்தால் மட்டுமே இவர்கள் மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் யாரிடம் கள்ள நோட்டுகளை மாற்றினார்கள், இந்த கள்ள நோட்டுகளை திருச்சியில் மாற்றப் போகிறார்களா அல்லது வேறு எதேனும் மாவட்டங்களில் சென்று மாற்ற போகிறார்களா, இவர்கள் எவ்வளவு கள்ள நோட்டுகளுடன் தமிழகத்திற்கு வந்தார்கள், இவர்கள் கள்ள நோட்டு மாற்றுவது இதுதான் முதல் முறையா அல்லது ஏற்கனவே இதுபோல் தொடர்ந்து பலமுறை மாற்றி வருகிறார்களா என பல கோணங்களில் திருவெறும்பூர் காவல் நிலைய போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் திருச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முக்கோண காதல்: நண்பனை கொலை செய்து 190 கி.மீ தூரம் எடுத்துச்சென்று உடலை எரித்து மும்பை போலீஸ்காரர்

மும்பை அருகில் உள்ள நவிமும்பையில் போலீஸ்காரராக இருப்பவர் பந்து பிசே (49). இவர் தான் விரும்பும் பெண்ணை தனது நண்பரும் விரும்பியதால் தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து தனது நண்பரை கொலை செய்து கிணற்றில் த... மேலும் பார்க்க

பேரணாம்பட்டு: பேருந்தில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் - தோல் வியாபாரி கைது

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி ஒருவர், நேற்று மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்பியிருக்கிறார். குடியாத்தத்தில் இருந்து பேரணாம்பட்டு செல்லும் தனியார் பேருந்தில... மேலும் பார்க்க

குடியாத்தம்: பாலியல் வன்முறைக்குள்ளான 14 வயது சிறுமி - போலீஸார் தீவிர விசாரணை

திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 14 வயது வளர்ப்பு மகள், வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து பத்தாம் வகுப்புப் பயின்றுவந்தார். இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக... மேலும் பார்க்க

நாமக்கல்: சொத்து வரி மாற்றத்திற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம்; வருவாய் அலுவலர் வசமாகச் சிக்கியது எப்படி?

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். விவசாயியான இவரது பெயரில் உள்ள நான்கு வீடுகளை அவரது மகன் பெயருக்கு மாற்றி, சொத்து வரி விதிக்கக் கோரி, நாமக்கல் மாநகராட்சியி... மேலும் பார்க்க

`வெறுப்புப் பேச்சு'- அண்ணாமலைக்கு சம்மன்; பியூஷ் மானுஷ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

2023-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய அப்போதைய தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “1956-ம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அற... மேலும் பார்க்க

அதானி குழுமம் மீது ஊழல் பதிவுகள், செய்தி கட்டுரைகள்; செய்தியாளருக்கு சிறைத் தண்டனை! - விவரம் என்ன?

குஜராத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரவி நாயர். இவர் அவதூறு பரப்பும் வகையில் தொடர்ந்து எக்ஸ் பக்கத்தில் பதிவுகள் மற்றும் பொய்யான செய்திக் கட்டுரைகளை வெளியிட்டதாக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்த... மேலும் பார்க்க