செய்திகள் :

திருச்சி: 'ரூ.8 லட்சம் மதிப்பு' - கள்ளநோட்டுகளை மாற்றிய வடமாநில கும்பல் சிக்கியது எப்படி?

post image

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் காருக்கு பெட்ரோல் போட்டவர்கள், 200 ரூபாய் நோட்டாக கொடுத்துள்ளனர். அந்த நோட்டை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பரிசோதனை செய்த பொழுது, அது கள்ள நோட்டு என தெரியவந்தது. ஆனால், அதற்குள் அங்கிருந்து அந்த மர்ம நபர்கள் காரை எடுத்துச் சென்றுவிட்டனர்.

car

இது சம்பந்தமாக உடனடியாக பெட்ரோல் பங்க் ஊழியர்கள் துவாக்குடி போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில், துவாக்குடி போலீஸார் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் மஞ்சத்திடல் பாலத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஏட்டு செந்தில் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவர்களுக்கு துவாக்குடி காவல் நிலையத்திலிருந்து அவசர அழைப்பு வந்துள்ளது.

அதில், துவாக்குடி பகுதியில் இருந்து திருச்சி நோக்கி மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட ஒரு கார் வந்து கொண்டிருப்பதாகவும், அந்த காரை மறித்து சோதனையில் ஈடுபட அறிவுறுத்தி உள்ளனர். அதன் அடிப்படையில், நந்தகுமாரும், செந்திலும் அந்த காரை மறித்து சோதனையிட்டபோது காரில் இரண்டு பையில் 200 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்துள்ளது. அதன் அடிப்படையில், அவர்கள் இருவரையும் திருவெறும்பூர் போலீஸார் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றதோடு பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

accused

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மகாராஷ்டிரா மாநிலம், பாபாரோ பக்கீர் ராம்கிர் மகன் ரமேஷ் பாபாரோ (54), அனுமன் ராம் மகன் நாராயண ராம் (34) என்றும் தெரிய வந்தது. மேலும், போலீஸாரின் விசாரணையில் அவர்கள் மதுரையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபரிடம் மூன்று லட்சம் கள்ள நோட்டுகளை மாற்றியதாகவும், அதன் பிறகு புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் சென்று விட்டு வந்தபோது தான் பிடிபட்டதாகவும் கூறியுள்ளனர். அதனைத்தொடர்ந்து, அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணிப் பார்த்தபோது அதில் 8,37, 800 ரூபாய் இருப்பது தெரியவந்தது.

அனைத்தும் 200 ரூபாய் நோட்டுகளாகவும், நூறு தாள்கள் எண்ணிக்கை கொண்ட 41 கட்டுகளும், மற்றொரு கட்டில் 89 தாள்களும் இருந்துள்ளது. அவை அனைத்தும் கள்ள நோட்டுகள் என்பது உறுதியானது. அதன்பிறகு, அவர்கள் இருவரையும் பிடித்து திருவெறும்பூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களை முறையாக விசாரித்தால் மட்டுமே இவர்கள் மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் யாரிடம் கள்ள நோட்டுகளை மாற்றினார்கள், இந்த கள்ள நோட்டுகளை திருச்சியில் மாற்றப் போகிறார்களா அல்லது வேறு எதேனும் மாவட்டங்களில் சென்று மாற்ற போகிறார்களா, இவர்கள் எவ்வளவு கள்ள நோட்டுகளுடன் தமிழகத்திற்கு வந்தார்கள், இவர்கள் கள்ள நோட்டு மாற்றுவது இதுதான் முதல் முறையா அல்லது ஏற்கனவே இதுபோல் தொடர்ந்து பலமுறை மாற்றி வருகிறார்களா என பல கோணங்களில் திருவெறும்பூர் காவல் நிலைய போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் திருச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

போதையால் அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் - என்ன நடக்கிறது கோவையில்?

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே சின்ன மத்தம்பாளையம் பகுதி உள்ளது. அங்கு தனியார்மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது. அங்கு 50 வயது வயதான மதிக்கத்தக்க ஒருவர் நேற்று இரவு மது அருந்தியுள்ளார். இந... மேலும் பார்க்க

தோழியுடன் தன்பாலின உறவு - எதிர்ப்பு தெரிவித்த கணவனை ஆள் வைத்து கொலை செய்த மனைவி

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரை சேர்ந்தவர் சுமன் சிங். இவர் அங்குள்ள திகர் என்ற கிராமத்தில் இருக்கும் தோட்டத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து வ... மேலும் பார்க்க

`தினமும் முட்டைகறியா?' எனக் கேட்ட கணவனின் நாக்கை கடித்து துப்பிய மனைவி கைது

கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன பிரச்னைக்கெல்லாம் சண்டை வருவதுண்டு. ஆனால் அந்த சண்டை அடுத்த சில மணி நேரத்தில் சரியாகிவிடும். ஆனால் உத்தரப்பிரதேசத்தில் திருமணமாகி ஒரு ஆண்டில் குழம்பு குறித்து கேள்வி எழுப... மேலும் பார்க்க

கரூர்: மதுபோதையில் பேருந்தை இயக்கிய டிரைவர்; குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பரளி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் விஜயகுமார் (வயது 30). இவர், நாமக்கலில் உள்ள தனியார் ஹோட்டலில் சமையலராக வேலைபார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆக... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழந்த SSI-யின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தாதது ஏன்?- முதல்வருக்கு பறந்த புகார்!

தூத்துக்குடி, தெர்மல்நகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சுப்பையா. கடந்த 17.01.1986-ம் நாள், அப்போதைய ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந... மேலும் பார்க்க

சென்னை: உள்ளாடைக்குள் ஸ்பெஷல் பாக்கெட்; சூப்பர் மார்க்கெட்களில் கைவரிசை காட்டும் பெண்கள் சிக்கினர்

சென்னை, அண்ணா நகர் 6-வது அவென்யூவில் உள்ள பிரபலமான சூப்பர் மார்க்கெட்டின் மேலாளர் அனில் என்பவர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், ``19.01.2026-ம் தேதி வாடிக்கையாளர்கள் போல... மேலும் பார்க்க