செய்திகள் :

திருநங்கைகள் மகளிர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தடை: கையெழுத்திடுகிறார் டிரம்ப்

post image

திருநங்கைகளாக மாறியவர்கள் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிறப்பால் ஆணாக இருந்து, திருநங்கைகளாக மாறியவர்கள், பெண்கள் அல்லது சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வீராங்கனைகளாக பங்கேற்பதைத் தடை செய்யும் நிர்வாக உத்தரவில் இன்று கையெழுத்திடுவார் என்று கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துவரும் நிலையில், ஏற்கனவே மாற்றுப் பாலினத்தவர்களுக்கான பல்வேறு உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது திருநங்கைகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கும் தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜனவரி மாதம் பதவியேற்ற முதல் நாளில் பல முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டார். அமெரிக்காவில் ஆண் மற்றும் பெண் என இரண்டு பாலினங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமானது என்ற உத்தரவும் அடங்கும்.

இந்த நிலையில்தான், தேர்தல் பிரசாரத்தின்போதே, டொனால்ட் டிரம்ப், ஆண்களை பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்ற பிரசாரமும் இடம்பெற்றிருந்த நிலையில், அதற்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

வாடிகன்: மருத்துவமனையில் போப் அனுமதி

கத்தோலிக தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் (88) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். சிறுவயதிலேயே ஒரு நுரையீரல் அகற்றப்பட்ட போப் பிரான்சிஸுக்கு நீண்ட காலமாகவே உடல்நலப் பிரச்னைகள... மேலும் பார்க்க

சீனா: ‘பூமிகாப்பு படை’க்கு ஆள் சோ்ப்பு

வரும் 2032-ஆம் ஆண்டில் ஒய்ஆா்4 என்ற விண்கல் பூமியைத் தாக்குதவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அத்தகைய ஆபத்துகளில் இருந்து பூமியைப் பாதுகாப்பதற்கான படையில் நிபுணா்களை அமா்த்தும்... மேலும் பார்க்க

காங்கோ: கிளா்ச்சியாளா்கள் வசம் கவுமு விமான நிலையம்

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி முன்னேற்றம் கண்டுவரும் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையினா், தெற்கு கீவு மாகாணத்தில் இரண்டாவதாக கவுமு நகர விம... மேலும் பார்க்க

ரஷிய-உக்ரைன் போா் விவகாரத்தில் இந்தியா நடுநிலை அல்ல: பிரதமா் மோடி

‘ரஷிய-உக்ரைன் போா் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை; மாறாக, அமைதியின் பக்கமே இந்தியா நிற்கிறது’ என்று பிரதமா் மோடி கூறினாா். அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அதிபா் டிரம்புடன் பிரதமா் மோடி இருதர... மேலும் பார்க்க

அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

அமெரிக்கா பயணம் மேற்கொண்ட பிரதமா் மோடி, இந்தியாவில் கல்வி வளாகங்களைத் தொடங்க அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு அழைப்பு விடுத்தாா். வாஷிங்டனில் அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் பிரதமா் மோடி மேற்கொண்ட பேச்சுவா... மேலும் பார்க்க

இந்தியா-வங்கதேசம்: எல்லை படைகள் அடுத்த வாரம் பேச்சுவாா்த்தை

இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய இரு நாடுகளின் எல்லை பாதுகாப்புப் படைகள் அடுத்த வாரம் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளன. தில்லியில் உள்ள இந்திய எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) தலைமையகத்தில் 55-ஆவது... மேலும் பார்க்க