`இதற்கு பில் கேட்ஸ் பதிலளிக்க வேண்டும்!' - எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்து முன்னாள் ம...
திருநெல்வேலி: மூடிக் கிடக்கும் ஆதிதிராவிடர் சமுதாயக்கூடம்; சீரமைத்துத் திறக்கப்படுமா?!
திருநெல்வேலி சந்திப்பு அருகிலிருக்கும் இரட்டைப் பாலத்திற்குக் கீழே ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடம் இருக்கிறது. இந்த சமுதாய நலக்கூடமானது அதற்கு முன்னிருக்கும் கல்வெட்டு தகவலின்படி ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் 7.4.2002இல் திறக்கப்பட்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சமுதாயக்கூடம் தாலுகா அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்டது. பிறகு நீண்ட காலமாகத் திறக்கப்படாமல் புதர் மண்டிக் கிடக்கிறது. மிகப்பெரும் பொருட் செலவில் கட்டப்பட்ட இந்த சமுதாயக் கூடம் இப்போது பயன்பாட்டில் இல்லாமல் இருக்கிறது.
இது குறித்து அங்கிருக்கும் கடைவீதி மக்களிடம் கேட்கும்போது,
"இந்த சமுதாயக் கூடமானது நீண்ட காலமாகத் திறக்கப்படாமல் இருக்கிறது. முன்பு இக்கூடமானது தாலுகா அலுவலகமாகவும், விடுதியாகவும் பயன்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது இது பயன்பாட்டில் இல்லாமல் ஒரு விதமான அசோகரியத்தையும் இங்கு ஏற்படுத்துகிறது.



அடிக்கடி இந்த இடத்தை சுத்தம் செய்வார்கள். ஆனால் மீண்டும் மீண்டும் பாழடைந்த இடமாகவே மாறிவிடும். எனவே இந்த சமுதாய நலக்கூடத்தை அரசு சீரமைத்து, சுத்தப்படுத்தி ஏதேனும் ஒரு வகையில் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்" என்று மக்கள் கூறினர்.
மேலும் இது குறித்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் கேட்டபோது, "ஆதிதிராவிடர் நலக்கூடம் மிகவும் பழுதடைந்துள்ளது. எனவே அதை பராமரிக்கவும் மறுசீரமைப்பு செய்யவும் ADWஇடம் நிதி கேட்டிருக்கிறோம். நிதி வந்த பிறகு நாங்கள் TAHDCO மூலமாக கண்டிப்பாக திருநெல்வேலி சந்திப்பு ஆதிதிராவிடர் சமுதாயக்கூடத்தை மறுசீரமைப்பு செய்திடுவோம்" என்றனர்.















