செய்திகள் :

திருப்பத்தூர்: திமுக கள ஆய்வில் அடுக்கடுக்கான புகார் - மாவட்டச் செயலாளருக்குச் சிக்கல்?

post image

தி.மு.க திருப்பத்தூர் மாவட்டச் செயலாளராக இருப்பவர் க.தேவராஜி. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, ஜோலார்பேட்டை தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வான தேவராஜி பலவிதமான சர்ச்சைகளில் சிக்கியதால், நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், தோல்வி குறித்த கள ஆய்வுக்குவந்திருந்த குழுவினரிடம், ``திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க விவகாரங்களில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலையிடக் கூடாது. மாவட்டச் செயலாளர் தேவராஜியை அப்பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்’’ என்று உடன்பிறப்புகள் வெடித்துபேசி, அதிருப்தியை வெளிப்படுத்தி குமுறியிருக்கிறார்கள் என்கிற தகவல் பரபரக்கிறது கட்சி வட்டாரத்தில்.

இதுபற்றிப் பேசுகிற திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் சிலர், ``ஆய்வுக் குழுவினர் தொகுதி வாரியாக 28-ம் தேதி தொடங்கி, 31-ம் தேதி வரை நான்கு தினங்கள் நிர்வாகிகளிடம் கருத்து கேட்பில் ஈடுபட்டனர்.

தி.மு.க திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் க.தேவராஜி

முதல் நாள் ஜோலார்பேட்டை தொகுதி நிர்வாகிகளுக்கான சந்திப்பு நடத்தப்பட்டது. அதில், அந்தத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஜோலார்பேட்டை மத்திய ஒன்றியச் செயலாளர் கவிதா தண்டபாணி மற்றும் ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றியச் செயலாளர் உமா கண்ரங்கம் உள்ளிட்ட மேலும் பலர், `மாவட்டச் செயலாளரை மாற்ற வேண்டும். அவரின் செயல்பாடுகளால்தான் கட்சிக் கபளீகரமாகிவிட்டது’ என்று குற்றம்சாட்டினார்கள்.

அடுத்த நாள் 29-ம் தேதி, திருப்பத்தூர் தொகுதி நிர்வாகிகள் சந்திப்பிலும், அங்குப் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் எம்.எல்.ஏ-வான அ.நல்லதம்பி மற்றும் திருப்பத்தூர் நகரச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் டி.கே.மோகன் உள்ளிட்ட நிர்வாகிகளும் மாவட்டச் செயலாளர் தேவராஜிக்கு எதிராகவே புகார் தெரிவித்தனர் என்கிறார்கள்.

மறுநாள் வாணியம்பாடி தொகுதி நிர்வாகிகள் சந்திப்பிலும் வாணியம்பாடி நகரச் செயலாளர் வி.எஸ்.சாரதிகுமார் உட்பட பல்வேறு அணிகளைச் சார்ந்த நிர்வாகிகளுமே எ.வ.வேலு, தேவராஜி ஆகிய 2 பேர் மீது புகார்களை அடுக்கினர்.

ஆம்பூர் தொகுதி சந்திப்பின்போதும் ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளர் வி.எஸ்.ஞானவேலன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

``41 தொகுதிகளுக்கான வடக்கு மண்டலத் தேர்தல் பொறுப்பாளராக எ.வ.வேலு நியமிக்கப்பட்டதே தவறு. அவர் `சுய-சமூக’ அரசியல் பற்றுடன் செயல்பட்டுவந்தார். இதனால், பெரும்பான்மையாக வாழும் வன்னியர் சமூக மக்கள் தி.மு.க-வை ஆதரவிக்கவில்லை. இதன் எதிரொலியாகவே, 41 தொகுதிகளில் 6-ல் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. தோல்விக்குப் பிறகாவது, தி.மு.க தலைமை சிலவற்றை திருத்திக்கொள்ள வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்துக்கு எந்த வகையிலும், எ.வ.வேலு பொறுப்பாளராகத் தொடரக் கூடாது.

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு

அதேபோல, 72 வயதாகும் மாவட்டச் செயலாளர் தேவராஜி உடன்பிறப்புகள் ஒருவரையும் அரவணைத்துச் செல்வதில்லை. தேவராஜியின் சொந்த ஊரில் பதிவான வாக்குகளில், தி.மு.க 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் தேவராஜி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனாலும், அந்தச் சமூக மக்களிடம் அவருக்கான செல்வாக்குக் கொஞ்சம்கூட இல்லை என்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது.

அதேபோல, ஆம்பூர் தொகுதியில் தி.மு.க மீண்டும் வெற்றிபெற்றிருந்தாலும், எம்.எல்.ஏ வில்வநாதனின் சொந்த ஊரில் பதிவான வாக்குகளிலுமே தி.மு.க 3-வது இடத்துக்குத்தான் தள்ளப்பட்டிருக்கிறது. வில்வநாதனை மீண்டும் வேட்பாளராக அறிவித்தபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தி.மு.க-வில் இருந்து 1000-க்கும் மேற்பட்டோர் விலகினார்கள். இதன் எதிரொலி, வில்வநாதன் ஒன்றியச் செயலாளராக இருக்கும் பகுதியிலும் தி.மு.க-வுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

இதையெல்லாம், ஆய்வுக் குழுவினரிடம் எடுத்துக்கூறியுள்ளோம். கட்சியைப் பலப்படுத்த வேண்டுமெனில், இளையச் சமுதாயத்தை வழிநடத்தும்வகையில் நடுத்தர வயதுமிக்க நிர்வாகியை மாவட்டச் செயலாளர் பொறுப்பில் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலுவாக முன்வைத்திருக்கிறோம்’’ என்கின்றனர் மாவட்ட உடன்பிறப்புகள்.!

டெல்லி கொடுத்த முக்கியத்துவம்! பாஜகவில் நீடிப்பாரா அண்ணாமலை? - தொடரும் இழுபறி!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் நீடிப்பாரா அல்லது விலகுவாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் அனலைக் கிளப்பியுள்ளது. தனது அதிருப்தி காரணமாக டெல்லியில் முகாமிட்டுள்ள அவர், உள்துறை ... மேலும் பார்க்க

`600 -700 ஆண்களாலும் விலங்குகளை வைத்தும் வன்கொடுமை..' - பிரிட்டனை உலுக்கிய பாகிஸ்தானிய கும்பல்

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி. ரூபர்ட் லோவ் வெளியிட்டுள்ள ஒரு `பாலியல் கூட்டு வன்கொடுமை அறிக்கை' ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. பிரிட்டனில் உள்ள டெல்ஃபோர்ட் நகரில், ... மேலும் பார்க்க

`காலதாமதம் இருக்கும்தான், அதுக்காக இவ்வளவா?' - 39 வயதில் எழுதிய தேர்வு; 60 வயதில் வந்த அரசு வேலை!

தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலும், தகுதியானவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்குவதிலும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலதாமதம் செய்வதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. அதே சமயம், கேரளாவில் இள... மேலும் பார்க்க

குவைத், பஹ்ரைனைத் தாக்கிய ஈரான்; தடுத்து நிறுத்திய ஈரானின் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதா?

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய ஈரான் போரில், கடந்த ஏப்ரல் 8-ம் தேதி முதல் 'தற்காலிக போர் நிறுத்தம்' இருந்து வந்தது. ஆனால், நேற்று குவைத், பஹ்ரைன் போன்ற மத்தியக் கிழக்கு நாடுகளின் மீது ஈரான் ஏவுகணை... மேலும் பார்க்க

கர்நாடகா: 'கதர்'ஜீ-க்களை மட்டுமல்ல, ஜென்சீ-களையும் கவர்ந்தவர் டி.கே.சிவகுமார்!

"இனி கர்நாடக அரசியலில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது" என்கிறார்கள் அரசியல்வாதிகளும், அரசியல் நோக்கர்களும்.கர்நாடக மாநிலத்தின் 23 வது முதல்வராக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரும், ... மேலும் பார்க்க

அண்ணாமலை புதிய கட்சி அறிவிப்பு?; கர்நாடகா முதல்வராகப் பதவியேற்கிறார் DKS - இன்றைய அரசியல் நிகழ்வுகள்|Live updates

டி.கே.சிவகுமார் - கர்நாடகா முதலமைச்சர்2023-ம் ஆண்டு கர்நாடகாவின் முதலமைச்சராகப் பதவியேற்ற சித்தராமையா, கடந்த 28-ம் தேதி காங்கிரஸ் டெல்லி தலைமையின் உத்தரவையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனால்,... மேலும் பார்க்க