செய்திகள் :

திருப்பூரில் சொத்து தகராறு? ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த பெண் பலியான சோகம்; நடந்தது என்ன?

post image

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ராமசாமி நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் (43). ஓவிய ஆசிரியர். இவரது மனைவி திருப்பூர் பெருமாநல்லூரைச் சேர்ந்த கெளசல்யா (40). இத்தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

தம்பதியரிடையே அடிக்கடி குடும்பப் பிரச்னை இருந்து வந்துள்ளது. கெளசல்யாவின் தந்தை அருள்மரியனுக்கும் கௌசல்யாவுக்கும் இடையே சொத்து தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது. சொத்தை விற்பனை செய்த பணத்தைத் தனக்குக் கூடுதலாகக் கொடுக்க வேண்டுமென கெளசல்யா, கடந்த ஓராண்டாக தனது தந்தையிடம் கேட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

அதற்கு கெளசல்யாவின் தந்தை மறுப்பு தெரிவித்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மண்ணெண்ணையுடன் வந்த கெளசல்யா, விரக்தி அடைந்த மனநிலையில் ஆட்சியர் அலுவலகத்தின் முகப்பில் திடீரென தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

கெளசல்யா
கெளசல்யா

தொடர்ந்து உடலில் தீப்பற்றவே அலறியபடி ஓடினார். விடுமுறை நாள் என்பதால் அருகில் யாரும் இல்லை. தீக்காயம் தாங்க முடியாமல் சரிந்து விழுந்தார். அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், கெளசல்யாவை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு 80 சதவீதம் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த கௌசல்யா நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து கெளசல்யாவின் கணவர் பிரபாகரன் வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் தற்கொலை வழக்குப் பதிந்து சடலத்தை பிரேதப் பரிசோதனை செய்து, நேற்று மாலை கணவர் பிரபாகரனிடம் ஒப்படைத்தனர்.

டெல்லி கார் வெடிப்பு: `Hyundai i20 கார், CCTV கேமராக்கள் ஆய்வு' - அமித் ஷா பேட்டி

டெல்லி செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் எண் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று (நவ 10) மாலை 6.50 ம... மேலும் பார்க்க

Delhi Car Blast: போலீஸ் கமிஷனருடன் அமித் ஷா பேச்சு; கார் வெடிப்பு குறித்து கெஜ்ரிவால் கவலை!

திங்கட்கிழமை (நவ. 10) மாலையில் டெல்லி செங்கோட்டை மெட்ரோ அருகே ஏற்பட்ட கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அருகாமையில் இருந்த வாகனங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.மெட்ரோ கேட் 1 அருகே கார... மேலும் பார்க்க

டெல்லி: செங்கோட்டை அருகே கார் வெடிப்பு; 8 பேர் பலி; நெஞ்சை உலுக்கும் வீடியோ - விசாரணை தீவிரம்!

டெல்லி செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் எண் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விபத்தால் அருகே இருந... மேலும் பார்க்க

தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு; பெண் டாக்டர் காரில் ஏ.கே.47 ரக துப்பாக்கி பறிமுதல் - பகீர் பின்னணி!

ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இரண்டு டாக்டர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் போலீஸார் டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசத்தில் ரெய்டு நடத்தினர். இதில் படித்து உயர் பதவியில் ... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்: அனைத்து வீடியோ ஆதாரங்களை சமர்ப்பித்த தவெக; 2 -ம் நாளாக சிபிஐ விசாரணை

ஆஜரான 12 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்கடந்த செப்டம்பர் 27-ம் தேதி த.வெ.க கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பா... மேலும் பார்க்க

டெல்லி: `பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் ஆயுதங்கள் சப்ளை; தாக்குதல் நடத்த சதி' - தீவிரவாதிகள் கைது

டெல்லி அருகே ஜம்மு காஷ்மீர் போலீஸார் ரெய்டு நடத்தி 350 கிலோ வெடிமருந்துகளையும், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யும் 20 ரிமோட்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோன்று ஹரியானாவில் உள்ள பரிதாபாத்தில் இதே போலீஸா... மேலும் பார்க்க