செய்திகள் :

திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள்: கிரிவலப் பாதையில் சகல வளங்களும் அருளும் சிவன் சந்நிதிகள்

post image

நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. அங்கே மலையே ஈசனாக எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். மேலும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலும் மிகவும் சிறப்புவாய்ந்தது.

ஒருமுறை அண்ணாமலையாரைத் தரிசனம் செய்தால் மீண்டும் மீண்டும் அவரைத் தரிசிக்கும் ஆவலும் பாக்கியமும் பிறந்துகொண்டே இருக்கும்.

மேலும் திருவண்ணாமலை என்றாலே கிரிவலம்தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அப்படி கிரிவலம் செல்பவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டியவையே அஷ்ட லிங்கங்கள்.

அஷ்ட லிங்கங்களும் கிரிவலப் பாதையில் எங்கு அமைந்துள்ளன... வாருங்கள் அவற்றை தரிசிப்பதால் என்ன பலன் என்பதைத் தெரிந்துகொள்வோம்.

முதலாவதாக கிரிவலப் பாதையில் நாம் தரிசிக்கும் லிங்கம் இந்திர லிங்கம். அண்ணாமலையார் கோயிலின் ராஜ கோபுரத்தின் அருகில், கிழக்கு திசையில் அமைந்திருப்பது.

இந்திரன் வழிபட்ட லிங்கம் என்பதால் இதற்கு இந்தப் பெயர் உண்டானது. ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் இங்கு வந்து வழிபட்டால் வாழ்வில் எல்லா வளங்களையும் சுகங்களையும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

திருவண்ணாமலை கிரிவலப் பாதை
திருவண்ணாமலை கிரிவலப் பாதை

கிரிவலப்பாதையில் அடுத்து நாம் தரிசனம் செய்வது அக்னி லிங்கம். அக்னி என்றால் நெருப்பு. நெருப்பு என்றால் சூரியன். எனவே சூரியனைத் தன் ராசிநாதனாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய மூர்த்தி இவர்.

சந்திரனுக்கு அக்னி வடிவில் காட்சியளித்த லிங்கமே இங்கு குளிர்ந்து அக்னி லிங்கமாகக் காட்சியளிக்கிறதாம். சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்துக்கு அருகில் உள்ள இந்த ஆலயத்துக்கு வந்து இறைவனை வழிபட்டால் மனக் குறைகள் விலகும். நிம்மதியான வாழ்க்கை ஸித்திக்கும்.

தொடர்ந்து சிவநாமத்தைச் சொல்லிக்கொண்டே நடந்தால் யம லிங்கத்தை அடையலாம். தென்திசை அதிபதியான யம தர்மன் ஈசனை வழிபட்ட லிங்கம் இது. தன் பாவங்கள் விலக கிரிவலம் சென்ற யமனுக்கு, சிவபெருமான் தாமரை மலரில் லிங்கமாகத் தோன்றி அருளினார். இந்த ஆலயத்து இறைவனை வழிபடுவதால் ஆயுள் பலம் உண்டாகும். வீண் விரயங்கள் நீங்கும். விருச்சிக ராசிக்காரர்கள் அவசியம் வணங்க வேண்டிய சந்நிதி இது.

தென்மேற்கு திசையின் அதிபதி நிருதி பகவான். திருவண்ணாமலைத்தலத்தில் ஈசனை நோக்கித் தவம் செய்த நிருதி பகவானுக்கு ஈசன் நிருதீஸ்வரராக காட்சி அளித்தாராம். அவரே அங்கே நிருதி லிங்கமாகவும் எழுந்தருளியிருக்கிறார்.

இவரை வழிபட்டால் குழந்தை வரம் கிட்டும் என்பது நம்பிக்கை. மேஷ ராசிக்காரர்களின் பிரார்த்தனைத் தலம் இது. ராகு பகவான் இந்தத் திசைக்கு அதிபதி என்பதால் இங்கு வழிபட்டால் சர்ப்ப தோஷங்கள் நீங்கும். தீய எண்ணங்கள் விலகி மனம் அமைதி அடையும்.

வருண பகவானுக்கு ஈசன் இத்தலத்தில் நீரே லிங்க வடிவில் உருமாறி தரிசனம் அருளிய தலம் இது. மேற்கு திசையில் அமைந்திருக்கும் இந்த லிங்கத்தை வணங்கினால் அந்தத் திசையின் அதிபதியான சனி பகவானின் அருளைப் பெறலாம்.

ஏழரைச் சனி, அஷ்டம சனியினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபட சகல துன்பங்களும் விலகும். மேலும் தீராத நோய்களைத் தீரும். குறிப்பாக மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் இவரை வழிப்பட்டு வாழ்வில் சகல வளங்களையும் பெறலாம்.

கிரிவலப் பாதையில் வடமேற்கு திசையில் அமைந்திருக்கும் ஆலயம் இது. பஞ்ச கிருதிக்கா என்ற தேவலோக மலரின் வாசமாகத் தோன்றிய ஈசன் வாயு பகவானை இங்கு ஆட்கொண்டாராம்.

கடக ராசிக்காரர்கள் கட்டாயம் வணங்க வேண்டிய தலம் இது. இங்கு வந்து வணங்குபவர்களுக்கு, வடமேற்கு திசையின் அதிபதியான கேது பகவான் சகல யோகங்களையும் அளிப்பார். ஞானத்தைப் பெற்று வாழ்வில் பல நலன்களை அடைய இந்தச் சந்நிதி வழிபாடு பயன் தரும்.

இந்த உலக வாழ்க்கை செழிக்கத் தேவை செல்வம். செல்வ வளம் அருள்பவர் குபேரன். அப்படிப்பட்ட குபேரனே இழந்த தன் செல்வங்களை மீண்டும் பெற திருவண்ணாமலையில் அமர்ந்து தவம் செய்தாராம்.

ஈசன் மனம் இரங்கி அவருக்கு இழந்த செல்வத்தைப் பெற்றுத்தந்த ஈசன் அச்செல்வம் எந்த நாளும் குறையாமல் பல்கிப் பெருகவும் வரம் தந்தார் என்கிறது புராணம்.

எனவே குபேரன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட இந்தக் குபேர லிங்கத்தை நாம் தரிசித்தாலே நம் வறுமைகள் விலகும். மென்மேலும் செல்வ வளம் சேரும். குரு பகவானின் திருவருளைப் பெற்ற தனுசு, மீன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய சுவாமி இவர்.

நிறைவாக கிரிவலப் பாதையில் வடகிழக்கு திசையில் சுடலையின் அருகில் அமைந்துள்ளது ஈசான்ய லிங்கம். நந்தீஸ்வர பகவான் வணங்கிய மூர்த்தி இவர். ஈசனைத் தவிர எதுவுமே சாஸ்வதமில்லை என்பதை உணர்த்தும் ஞான சந்நிதி இது.

இந்தத் திசையின் அதிபதி புதன் என்பதால் இங்கு வணங்கினால் கலைகளில் தேர்ச்சி பெறலாம். மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய சந்நிதி இது.

விழுப்புரம், எசாலம் ஸ்ரீராமநாதேஸ்வரர் : அரசியலில் வெற்றி, பதவியோகம் அருளும் ஈசன்!

சோழர்கள் கலைப்பொக்கிஷங்களாகத் திகழ்பவை அவர்கள் எழுப்பிய ஆலயங்கள். தஞ்சைப் பெரியகோயிலும் கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோயிலும் அதற்குப் பெரும் எடுத்துக்காட்டுகள். ஆனால் கோயில்கள் கலைப்படைப்புகள் மட்டுமல்ல... மேலும் பார்க்க

குற்றாலம், இலஞ்சி முருகன் கோயில்: வேண்டும் வரம்தரும் மாதுளை முத்துகளால் ஆன வேல் காணிக்கை!

தமிழ்க்கடவுள் என்று போற்றப்படும் முருகப்பெருமான் அடியார்களின் குரலுக்கு ஓடி வருபவர். அப்படி அவர் ஓடி வந்து அருள் செய்த தலங்களில் ஒன்று இலஞ்சி. தமிழகத்தின் எல்லைப்புற ஊர்களில் ஒன்று செங்கோட்டை. இயற்கை ... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: உண்டியலில் முருக பக்தர் செலுத்திய `வெள்ளிக்காசு மாலை' - சிறப்பு என்ன?

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா, கடந்த மாதம் 22-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 27-ம் தேதி சூரசம்ஹாரமும், 28-ம் தேதி தி... மேலும் பார்க்க

தூத்துக்குடி, ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் கோயில் : பிரச்னைகள் தீர்க்கும் பிரதோஷ தேங்காய் மாலை!

பிரதோஷ காலத்தில் வழிபாடுகள் சிவாலயங்களில் சிறப்பாக நடைபெறும். வைணவ ஆலயங்களில் நரசிம்ம மூர்த்திக்கு விசேஷ வழிபாடுகள் உண்டு. ஆனால் விநாயகருக்குப் பிரதோஷ வழிபாடுகள் விசேஷமாக நடைபெறும் தலம் ஒன்று உண்டு. அ... மேலும் பார்க்க

சிதம்பரம், ஓமாம் புலியூர் துயர்தீர்த்த நாதர் கோயில்: மீன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய குருஸ்தலம்!

தட்சிணாமூர்த்தியே குருவடிவம். அவரை வழிபட்டால் சகலவிதமான ஞானமும் கிடைக்கும். மேலும் வாழ்வில் இருக்கும் தடைகள் விலகி நன்மைகள் கூடிவரும். சில ஆலயங்களில் தட்சிணாமூர்த்தி விசேஷ வடிவுடன் அருள்பாலிப்பார். அப... மேலும் பார்க்க

தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தரைக் கடித்த நாய்; பணியாளர்களின் அலட்சியமா?

முருகப் பெருமானின் அறுபடைவீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் விளங்கிவருகிறது. இந்தக் கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்ககளும், விடுமுறை மற்றும் வ... மேலும் பார்க்க